என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parvathi"

    • பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார்.
    • அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு.

    கிரேதாயுகம், திரேதாயுகம் துவபராயுகம், கலியுகம் என்ற 4 யுகங்களுக்கு முன்னர் மணியுகம் ஒன்று இருந்ததாகவும் அதில் தான் அன்னை ஆதிபராசக்தி தோன்றியதாகவும் அதில் தான் அனைத்து கடவுள்களையும் ஆதிபராசக்தி படைத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. இந்த மணியுகத்தில் சிவபெருமானுக்கும், பிரம்மாவுக்கும் தலா ஐந்து தலைகள் இருந்ததாக தலவரலாறு கூறுகிறது.

    இதனால் பிரம்மனுக்கு கர்வம் அதிகரித்தது. தவமிருக்கும் முனிவர்களிடம் எல்லாம் சென்று சிவனைப் போல என்னாலும் வரம் தரமுடியும் ஆகையால் சிவனை விடுத்து என்னை நோக்கி தவமிருங்கள் என்று கூறி வருகிறார்.

    இதை ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைக்கிறார். ஆகையால் சிவபெருமானிடம் பிரம்மனின் 5 தலைகளில் ஒரு தலையை வலது கையால் கிள்ளி எடுத்து விடுங்கள் என்று கூறுகிறார்.

    அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டு அந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்.

    ஒருநாள் பார்வதி, பிரம்மன் இடத்திற்கு சென்று வேண்டுமென்றே வணங்குகிறேன் நாதா என்கிறார். இதை கேட்ட பிரம்மன் அனைவருக்கும் படியளக்கும் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதிக்கு தன் கணவர் யார் என்று அறியாமல் என்னைப் பார்த்து "நாதா" என்கிறார் என்று கூறியபடி பலமாக சிரிக்கிறார். இது தான் பிரம்மனின் கர்வத்தை அடக்க சரியான தருணம் என்று பார்வதி, சிவபெருமானிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்.

    இதற்காக காத்திருந்த சிவபெருமான் கோபம் கொண்டு பிரம்மனின் 5 தலைகளில் ஒருதலையை தன் வலது கரத்தால் கிள்ளி எடுத்து விடுகிறார்.

    வலியால் துடித்த பிரம்மன், சிவனைப் பார்த்து என்னிடம் இருந்து கிள்ளிய தலை உன் கரத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளட்டும், நீ திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து உண்பாய் அது மட்டுமல்லாமல் திருவோட்டில் போடப்படும் உணவுகளை உன் கையில் ஒட்டிக் கொண்டுள்ள என் தலையே சாப்பிட்டு விடும். உன் பசியாற சுடுகாட்டு சாம்பலை உட்கொண்டு காடு மேடெல்லாம் அலைந்து திரிவாய் என்று சாபமிட்டு விடுகிறார்.

    சரஸ்வதியும், தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியைப் பார்த்து "உன் அழகு உருவம் மறைந்து வயதான கிழவியாக மாறக்கடவது"அது மட்டுமல்லாமல் கொக்கு இறகை தலையில் சூடிக்கொண்டு உடலெங்கும் கந்தல் ஆடை அணிந்து அலைந்து திரிவாய்" என சாபம் கொடுக்கிறார்.

    பதிலுக்கு சிவபெருமானும், பார்வதியும், பிரம்மா மற்றும் சரஸ்வதியை பார்த்து, "உங்கள் இருவருக்கும் தனி கோவில்கள் இன்றி, விழாக்கள் இன்றி இருக்கக் கடவது" என சாபம் இட்டு விடுகின்றனர். அவரவர் சாபத்திற்கேற்ப அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    பார்வதி தேவி பல இடங்களில் அலைந்து திரிந்து திருவண்ணாமலை சென்றடைகிறார். அங்கு துர்வாச முனிவரிடம் தன்நிலையை பற்றி எடுத்துக் கூறுகிறார்.

    அனைத்தையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த முனிவர் அம்மனை பார்த்து, "இங்கிருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் 3 முறை மூழ்கி எழுந்தால் சாப விமோசனம் கிடைத்து பழைய உருவம் அடைவீர்கள் பின்பு கிழக்கு நோக்கி சென்று மலையரசன் ஆட்சி செய்யும் மலையரசன் பட்டிணத்திற்குச் (தற்போதுள்ள மேல்மலையனூர்) சென்று அங்கு கோவில் கொள்ளுங்கள். அப்போது சிவபெருமான் அங்கு வருவார். அவருக்கு தங்கள் மூலம் சாப விமோசனம் கிடைக்கும்" என்று வழிவகை கூறுகிறார்.

    அதன்படி பார்வதி தேவி பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவுடன் பழைய உருவம் கிடைக்கிறது. பின்பு கிழக்கு நோக்கி தனது பரிவாரங்களுடன் மலையரசன் பட்டிணம் என்கிற மேல்மலையனூருக்கு வருகிறார். வரும் வழியில் இரவாகி விடுகிறது. அதனால் தாயனூர் என்கிற இடத்தில் தங்கி விடுகிறார்.

    அப்போது தன்னுடன் வந்துள்ள பூதகணங்கள் பசிக்கிறது என்கின்றன. உடனே அங்கு பனை மரங்கள் வைத்திருப்போரிடம் பதநீர் கேட்கிறார். அவர்கள் தரமறுக்கிறார்கள். உடனே இங்கு பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார். அதன்படி அங்கு பனைமரங்கள் மறைந்து விட்டன (இன்றும் இங்குள்ள ஏரியில் பனை மரங்கள் இல்லாமல் இருப்பதை காணலாம்.)

    விடிந்ததும் அங்குள்ள பெரிய ஏரியில் குளிப்பதற்காக தான் கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தை கழற்றி ஓரிடத்தில் வைக்கிறார். பின்பு ஏரியில் இறங்கி நீராடிவிட்டு கரை ஏறும்போது கையில் இருந்த மோதிரம், காலில் இருந்த மெட்டி ஆகியவை காணாமல் போயிருந்ததை அறிகிறார். அதனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    நமக்கு ஏற்பட்ட இந்த நிலை எந்த மக்களுக்கும் நேரக்கூடாது என நினைத்து இந்த ஏரியில் விழல்கள் (புற்கள்) முளைக்காமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிட்டு விடுகிறார். அன்றில் இருந்து இன்று வரை இங்குள்ள ஏரியில் விழல்கள் (உயரமாக வளரும் ஒரு வகை புல்) வளருவதில்லை.

    தன்னுடைய கூந்தலை துடைக்கும்போது அதில் இருந்து ஒரு சடைமுடி கீழே விழுந்து ஒரு ஆண் உருவம் எடுத்து நிற்கிறது. அம்மன் அவரை ஆசிர்வதித்து "நீ இக்கரையில் ஜடாமுனீஸ்வரனாக கோவில் கொண்டு விளங்குவாய். நான் தங்க போகும் மலையரசன் பட்டிணம் (மேல்மலையனூர்) என்கிற இடத்தில் எனக்கு பூஜை செய்பவர்களுக்கு குலதெய்வமாக இருந்து அருளாசி வழங்குவாய் என்று கூறிவிட்டு தான் தங்கிய இடத்திற்கு சென்றார்.

    தான் கழற்றி வைத்த ஆரம் ஒரு பெண்ணாக உருமாறி அம்மனை வணங்கி நின்றது. அம்மா, இன்றில் இருந்து நீ! முத்தாரம்மன் என்ற பெயரில் அருளாசி வழங்குவாய். எனக்கு மேல்மலையனூரில் பூஜை செய்பவர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் உனக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள் என்று ஆசி வழங்கி விட்டு மலையரசன் பட்டிணத்துக்கு (மேல்மலையனூர்) சென்று அங்குள்ள பூங்காவனத்தில் புற்றில் பாம்பாக உருமாறி நின்றார்.

    (அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு) திடீரென புற்று உருவானதைக் கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த வீரன், சூரன், உக்கிரன் (இவர்கள் மீனவ இனத்தை சேர்ந்தவர்கள்) என்பவர்கள் அஞ்சி நடுங்கினர். அங்கு பார்வதிதேவி தோன்றி மகன்களே பயப்படாதீர்கள், எனக்கு நீங்கள் தினமும் பூஜை செய்து வாருங்கள். உங்கள் வம்சத்தை நான் காப்பேன் என்று கூறி மறைந்தார்.

    அன்றில் இருந்து அந்த புற்றின் மீது மழை, வெயில்படாமல் இருக்க 4 குச்சிகளை நட்டு அதன் மீது வேப்பிலை பரப்பி பந்தல் போட்டனர். புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு வந்தனர். இதைப் பார்த்த அரண்மனைக் காவலர்கள் மலையரசனிடம் தெரிவிக்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த மன்னன் அந்த புற்றை அகற்றுமாறு கட்டளை இட்டான்.

    முதலில் 2 பேர் சென்று புற்றை இடிக்க கடப்பாரையை ஓங்கினர். அவர்களை 2 பூதங்கள் விழுங்கி விட்டன. அங்கிருந்த அரண் மனைக்காவலர்கள் ஓடிச்சென்று மன்னனிடம் நடந்ததைக் கூறினர்.

    அவன் மீண்டும் அரண்மனைக காவலர்கள் அனைவரையும் புற்றை இடிக்க அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று புற்றை இடிக்க முயற்சித்த போது மீண்டும் பூதங்கள் தோன்றி தகவல் சொல்ல ஒரு காவலனை தவிர அனைவரையும் விழுங்கி விட்டது. அந்த காவலன் ஓடிச்சென்று நடந்தவற்றை கூறினான்.

    மன்னனே நேரடியாக வந்து புற்றை இடிக்க முற்பட்ட போது சகோதரர்கள் வீரன், சூரன், உக்கிரன் மூவரும் மன்னரை வணங்கி நம்மை காப்பதற்காகவே ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி வந்துள்ளார். தாங்களும் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை வைத்து அம்மனுக்கு தொண்டு செய்யுங்கள் என்று கூறினர்.

    அதன்படியே மன்னரும் கடவுள் நம்பிக்கை கொண்டு நான்கு குச்சிகளை கொண்ட பந்தலை எடுத்து விட்டு கல்தூண்களைக் கொண்டு மண்டபம் எழுப்பினார். இன்றும் புற்றுக்கு மேல் உள்ள 4 கல்தூண் மண்டபம் மலையரசன் கட்டிய மண்டபம் என்றே முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதுள்ள கோபுரம், முன்பு உள்ள கல்மண்டபம் ஆகியவை முற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டதென்று அதன் கட்டிட அமைப்பு மற்றும் கல்தூண்களில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பல இடங்களில் அலைந்து திரிந்த சிவபெருமானிடம், மகாவிஷ்ணு, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி மேல்மலையனூரில் குடிகொண்டுள்ளார் அங்கு சென்றால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதன்படி சிவபெருமான் மேல்மலையனூருக்கு வருகிறார்.

    மகாவிஷ்ணு அவரின் வருகையை தன் தங்கையான பார்வதிதேவியிடம் சிவபெருமான் இங்கு வந்து பிச்சை கேட்கும்போது "அவரை உள்ளே தங்க வைக்காமல் மயானத்தில் தங்குமாறு கூறிவிடு".

    பின்பு நவதானியங்களைக் கொண்டு சுண்டல்,கொழுக்கட்டை ஆகியவற்றை செய்து அதை பிசைந்து 3 கவளங்களாக (உருண்டைகள்) ஒரு தட்டில் வைத்துவிடு, மறுநாள் காலையில் சிவன் தங்கி இருக்கும் மயானத்திற்கு அந்த உணவை எடுத்துச் செல், முதல் உருண்டையை சிவன் கையில் உள்ள திருவோட்டில் போடு, அதை அந்த பிரம்மனின் தலை சாப்பிட்டு விடும் 2-வது உருண்டையையும் அதில் போடு அதையும் அந்த தலை சாப்பிட்டு விடும் 3-வது உருண்டையை திருவோட்டில் போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்துவிடு, உணவின் சுவையில் மயங்கிக் கிடக்கும் பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து கீழே இறங்கி அந்த உணவை சாப்பிடத் தொடங்கும் அப்போது நீ! ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை உன் வலது காலால் மிதித்து விடு என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி அம்மனும் செய்வதாக தெரிவிக்கிறார்.

    சிவபெருமான் அம்மன் குடிகொண்டுள்ள இடத்திற்கு வந்து "தாயே பிட்சாந்தேகி" என்று கேட்கிறார். உடனே வெளியில் வந்து விநாயகரிடம், உன் தந்தை இங்கு வந்துள்ளார். அவருக்கு சாபவிமோசனம் கிடைக்க இருப்பதால்

    நீ உட்காரமல் நின்று கொண்டு காவல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    அதன்படியே விநாயகரும் ஒப்புக்கொண்டு நின்றிருந்தார். பின்பு அம்மன், சிவபெருமானிடம் உணவு சமைத்து எடுத்து வரும்வரை அருகில் உள்ள மயானத்தில் தங்கி இருக்குமாறு கேட்கிறார். சிவபெருமானும் ஒப்புக்கொண்டு மயானம் செல்கிறார்.

    அங்கு இருந்த சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசிக் கொள்கிறார். பின்பு பசிக்காக ஒரு பிடி சாம்பலை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். ஆனால் பிரம்மனின் தலை அந்த சாம்பலை உட்கொள்ளவில்லை. தன் அண்ணனான மகாவிஷ்ணு கூறியபடியே பார்வதி தேவி 3 உருண்டைகளை தட்டில் வைத்து மயானம் நோக்கி புறப்பட்டுச்செல்கிறார். அங்கு சென்ற அவர் தட்டில் இருந்த முதல் உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுகிறார்.

    அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடுகிறது. 2-வது உருண்டையையும் திருவோட்டில் போடுகிறார், அதையும் அந்த தலை சாப்பிட்டு விடுகிறது. 3-வது உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுவது போல் பாவனை செய்து கீழே இறைத்து விடுகிறார்.

    உணவின் சுவையில் மயங்கி கிடந்த பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து சிவபெருமான் கையைவிட்டு கீழே இறங்கி உணவை தேடித்தேடி சாப்பிடத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பார்வதி தேவி ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை தன் வலது காலால் மிதித்தார். பிரம்மனின் தலை, வலியால் துடித்தும் விடாமல் அம்மன் தன் காலில் அழுத்தினார்.

    சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதால் ஆனந்த தாண்டவம் ஆடியபடி சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார். ஆங்கார உருவம் எடுத்ததால் பார்வதி தேவியை அங்காளபரமேஸ்வரி என்றும், ஆனந்தாயி என்றும் பூங்காவனத்தில் தங்கியதால் பூங்காவனம் என்று அழைக்கப்படுகிறார்.

    சிவபெருமான் ஆனந்ததாண்டவம் ஆடியதால் தாண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் வந்து இங்கு வந்து தங்கிய இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரிய உருவமாகவும் அம்மனின் வலது பக்கத்தில் சிவபெருமான் (தாண்டேஸ்வரராக) ரிஷப வாகனத்தில் அமர்ந்து சிறிய உருவமாக காட்சி தருகிறார்கள். கருவறையில் அம்மனும், சிவபெருமான் உருவ வடிவத்தில் (மற்ற இடங்களில் லிங்க வடிவில்) அருள்பாலிப்பது வேறு எங்கும் காணமுடியாத காட்சி ஆகும்.

    ஆவேசமடைந்த அங்காள பரமேஸ்வரி அம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை.கடைசியில் மகாவிஷ்ணுவை அணுகுகின்றனர். அவரும் அழகான தேரை உருவாக்கி அதில் அமர வைத்து பூங்காவனத்தை வலம் வந்தால் அம்மனின் சினம் குறையும் என ஆலோசனை கூறுகிறார். அவர்களும் ஒப்புக்கொண்டு செல்கின்றனர்.

    அதன்படி தேவலோக சிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து தேர் உருவாக்க சொன்னார்கள். அதன்படி 4 வேதங்கள் தேர் சக்கரங்களாகவும், தேவர்கள் ஒரு பகுதியினர் தேரின் அடிபீடமாகவும் தேர்க்கால்களாகவும், சங்கிலியாகவும் மாறுகின்றனர். மேகங்கள் தேர் சீலைகளாகவும், மகாவிஷ்ணு தேர் கலசமாகவும், குடையாகவும் மாறி அழகான தேராக காட்சி தருகின்றனர்.

    இதை பார்த்த அங்காளபரமேஸ்வரி அம்மன் அதன் மீது ஏறி அமர்கிறார். மற்ற தேவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து அம்மன் குடிகொண்டுள்ள பூங்காவனத்தை வலம் வந்து நிலை நிறுத்துகின்றனர். அம்மனின் சினம் முற்றிலும் தனிந்து விடுகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அம்மனும் அவர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

    இதை நினைவுபடுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வாகை, பனை புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு புதியதாக தேர் உருவாக்கப்பட்டு மாசி பெரு விழாவின் 7-ம் நாள் வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது

    • மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
    • சிவனை “அபிஷேகப்பிரியன்” என்றும் சொல்வார்கள்.

    சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்கள்

    அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    அவையாவன:

    1 சோமாவார விரதம் - திங்கள்,

    2 உமாமகேஸ்வரர் விரதம் - கார்த்திகை பவுர்ணமி,

    3 திருவாதிரை விரதம் - மார்கழி,

    4 சிவராத்திரி விரதம் - மாசி,

    5 கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்,

    6 பாசுபத விரதம் - தைப்பூசம்,

    7 அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

    8 கேதார விரதம் - தீபாவளி அமாவாசை.

    சிவராத்திரி-நைவேத்தியங்கள்

    மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.

    முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

    மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    அதிசயிக்க வைக்கும் "அபிஷேகப்பிரியன்"

    சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.

    சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள்.

    அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.

    • லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம்
    • அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து,

    அர்த்தநாரீஸ்வரர்

    அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.

    தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

    இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.

    இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைக் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.

    பரமாத்மா, ஜிவாத்மா, போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.

    இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம், அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம், லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மாணிக்க வாசக சுவாமிகள் பரமசிவனின் அத்தனை வடிவங்களையும்,

    பெண் ஆண் அலி எனும் பெற்றியன்

    பெண்டிர் ஆண் அலி என்று அறியன்கிலை என்று போற்றுகிறார்.

    பாகம் பெண்ணுக்கு ஆனாய் போற்றி என்று பாடிப்பரவுகிறார்.

    மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.

    திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.

    ஆண் பாகம், பெண் பாகங்களில் தலா இரண்டு கரங்களாகி நான்கு திருக்கரங்களோடு நந்தி வாகனத்துடன் ஏட்டி நின்றவராய் ஆண் பெண் அன்பினை உணர்த்துகிறார்.

    இந்த உருவங்கள் யாவும் காவிரிக் கரைத்தலங்களில் லிங்க உருவில் எழுந்தருளும் இறைவன் அருகே கருவறைச்சுற்றில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுகிறார்.

    தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.

    அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.

    அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உருவைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.

    ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.

    தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.

    இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.

    பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.


    • பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.
    • ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்

    சங்க நூல்களில் அர்த்தநாரீஸ்வரர்!

    அர்த்தநாரீஸ்வரர்பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.

    நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.

    உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்

    எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார்.

    ஞான சம்மந்தப்பெருமான்.

    தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.

    ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.

    தோடுடைய செவியென் விடையேறி

    பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்

    தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்

    தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.

    இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.

    திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.

    பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.

    உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன், பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில் மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும்,

    முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும் சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும் தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.

    துப்பில்லாத இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன. திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லாத தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.

    இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.

    பெண்ணை துரு திறன் ஆகின்றது.

    அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    நீலமேனி வாலிழை பாகத்து

    ஒருவன் இருதான் நிழற்கீழ்

    முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.

    சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.

    • “என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்” என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.
    • இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.

    கங்கையின் புனிதத்தை நிரூபித்த சிவபெருமான்

    ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம், சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்.

    இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.

    அதற்கு விசுவநாதர் "சரி வா" போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.

    நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு "புண்ணியவான்கள் தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்வாய்" என்றார்.

    கங்கைக்கரையில்,  தீர்க்க சுமங்கலியாய் விசாலாட்சி நிற்கிறாள். பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுசநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார்.

    "என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்" என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.

    நீர் கொள்ளாத மனிதத் தலைகள். சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே என தவிக்கின்றனர்.

    "ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும். பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கி மாள்வார்கள்" என்றாள் பார்வதி.

    பலர் பின்வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள்.

    "நீங்கள் பாவமே செய்த தில்லையா?" என்று கேட்டாள் அன்னை

    "தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது. என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை.

    என்றாயிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்திற்காக முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு போனால் என்ன?" என்றான் ஒருவன்.

    இரண்டாமவன், "அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்" என்றான்.

    இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர்.

    "தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?" என்றார் சதாசிவன்.

    "ஆம் சுவாமி! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப் புனிதமானவள். தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்" என ஒப்புக்கொண்டாள் அன்னை.

    அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.

    • ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும்.
    • முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    மும்மூர்த்திகளை வணங்கிய பலன் தரும் முருகன் வழிபாடு

    தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர் முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

    முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள்.

    ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

    • மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.
    • முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு சிறக்கும்.

    குன்று தோறாடும் குமரன்

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.

    இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு.

    முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

    எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    • முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
    • நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    தமிழ் கடவுள் முருக பெருமான்

    முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

    தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும்,

    அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும்,திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலது பக்கத்திலும்,

    நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

    • அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
    • வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    • ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
    • அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்

    சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

    அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.

    அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

    கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார்.

    அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

    பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார்.

    அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    • அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.
    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    சூரபத்மனை அழிக்க சென்ற கந்தன்

    சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார்.

    அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

    சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார்.

    முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

    பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார்.

    வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
    • இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்த முருகப் பெருமான்

    இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார்.

    ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

    அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    முருகப் பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

    கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார்.

    இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    ×