என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasuram-11"

    • செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா!
    • சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்

    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

    குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

    புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

    சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

    எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    இளம் கன்றுகளுடைய பசுக்களிடம் இருந்து பால் கறக்கும் ஆயர் குலத்தினர், வலிய வரும் பகைவர்களை எதிர்த்து அவர்கள் வீரத்தை அழியும்படி செய்வர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்ற பெண்ணே! மயில் போன்றவளே! புற்றில் வாழும் நாகத்தின் படம் போன்ற பீடம் உடையவளே! செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா! நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்று கார்மேக வண்ணன் கண்ணனின் பெயர் சொல்லிப் பாடுகிறோம். ஆனால் நீ எழாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டே இருக்கிறாய். அதன் பொருள் என்ன? எழுந்து வா! இறைவன் புகழ் பாடுவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

    ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

    செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்

    மையார் தடங்கண் மடந்தை மணவாளா

    ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்

    உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    நெருப்பை போன்ற சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே! சிறிய இடுப்பையும், மை தீட்டப்பட்ட பெரிய கண்களையும் கொண்ட பராசக்தியின் கணவனே! எல்லா செல்வங்களையும் உடையவனே நீ எங்களை ஆட்கொள்வது உனக்கு ஒரு விளையாட்டு! உன் விளையாட்டினால் அடியார்கள் என்ன அருளைப் பெறுவார்களோ, அவற்றையெல்லாம் நாங்களும் பெற்றோம். வண்டுகள் நிறைந்துள்ள குளத்தில் அவை ஒலி எழுப்பி பறந்து செல்லும்படி நீரில்மூழ்கி எழுந்து உன்னை வாழ்த்திப்பாடினோம்! உன்னை நாடிவந்தோம்! இனியும் நாங்கள் வருந்தாமல் இருக்க எங்களை கைவிடாமல் காத்தருள வேண்டும்!

    • கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம்.
    • உன் திருவடிகளைப் பாடி, உன் நினைவிலேயே வாழுகின்றோம்.

    திருப்பாவை

    பாடல்:

    கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து

    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

    குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

    புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

    சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்

    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

    ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    "கன்றுகளை ஈன்ற பசுக்களிடம் இருந்து பால் கறப்பவர்கள், ஆயர் குலத்தினர். இருந்தாலும் வலியவரும் பகைவர்களுடன் போர் செய்து அவர்களின் வீரம் அழியும்படி செய்வார்கள். அந்த கோபாலர்களின் குலத்தில் பிறந்த, புற்றில் உள்ள நாகத்தின் படம் போன்ற மறைவிடத்தையும், காட்டில் திரியும் பெண் மயில் போன்ற சாயலையும் உடையவளே! புறப்படுவாய்! உறவினர்களும், தோழியருமாகிய எல்லோரும் உன் முற்றத்திலே கூடி கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம். நீ சிறிதேனும் எங்களுடன் பேசாமல் உறங்குவதன் பொருள் என்ன?

    திருவெம்பாவை

    பாடல்:

    மெய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்

    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

    ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங் காண்! ஆரழல்போல்

    செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்

    மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

    ஐயா! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

    உய்யார்கள் உய்யும் வகையெல்லாம் உய்த்தொழிந்தோம்

    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    ஐயனே! அகன்ற குளங்களில் மொய்க்கின்ற வண்டுகளையுடைய மலர்கள் நிறைந்திருக்கின்றன. அதில் மூழ்கி, 'முகேர்' என்று ஓசை எழும்படி கைகளால் நீரைக் குடைந்து குடைந்து நீந்தி உன் திருவடிகளைப் பாடுகின்றோம். உன் திருவடிகளைப் பாடி, உன் நினைவிலேயே வாழுகின்றோம். நெருப்பைப் போன்ற சிவந்தவனே! வெண்ணீறு அணிந்தவனே! சிறிய இடையுடன் மை தீட்டிய கண்களை உடைய பார்வதியின் கணவனே! உன் அடியவர்களை ஆட்கொண்டு விளையாடுகின்றாய். அத்தகைய உன் அடியவர்களின் வழியிலேயே நாங்கள் செல்கிறோம். எங்களைக் கைவிடாமல் ஏற்றுக்கொண்டு காப்பாற்றுவாயாக.

    ×