என் மலர்
நீங்கள் தேடியது "Perarasu"
- இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார்.
- அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.
முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்த்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.
இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன். கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.
சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.
இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்" என்று பேசினார்.
- பிரபுதேவா நடித்திருக்கும் பேட்ட ராப் படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
- பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய பேரரசு, "2,3 வருஷத்துக்கு முன்னாடி "இந்தி தெரியாது போடா"-னு சொல்லுவாங்க, கேட்கும்போது சந்தோஷமா இருந்தது. நிறைய பேர் "இந்தி தெரியாது போடா" அப்படினு டி-சர்ட் போட்டாங்க அதை பார்க்கும்போதும் சந்தோஷமா இருந்தது. இப்போதான் இந்தி தெரியாதது கவலையா போச்சு, பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்" என்று கிண்டலாக பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கூத்தாடிங்கற வார்த்தை இப்போ இல்ல காலம் காலமா கேட்டுக்கிட்டு தான் இருக்கோம்.
- கூத்தாடிங்கற தொழில இழிவா யாராவது பேசினா மிகப்பெரிய தப்பு. அது கண்டனத்துக்குரியது.
'எக்ஸ்ட்ரீம்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:-
இன்றைக்கு நல்ல விஷயம் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருப்பது சினிமா... சினிமா தான். எங்கயாவது ஒரு மேடையில் அரசியல்வாதிங்க குடிப்பது தவறுன்னு சொல்றாங்களா. தம்பி குடிக்க கூடாது... குடும்பம் சீரழிஞ்சிடும்..னு. அவங்க தான் சொல்லணும். அரசியல்வாதிங்க மக்களுக்காக வந்தவங்க... மக்களின் சேவைக்காக வந்தவங்க..
மது குடிக்காத... பெண்களை மதி... பெற்றோரை மதி... நட்பு மதின்னு எல்லாவற்றையும் சினிமாதான் சொல்லிக்கொண்டு இருக்கு.. ஆனா சினிமாக்காரங்க கூத்தாடி. நீங்க என்ன பண்றீங்க.. அவன குறை சொல்றது. அவன் இவன சொல்றது. நீ எவ்வளவு ஊழல் பண்ணலையா... நீயும் ஊழல் பண்ணலையா...ன்னு சொல்றது.
இன்றைக்கு யாராவது ஒரு அரசியல்வாதி மேடையில் நல்ல விஷயத்தை பேசுறாங்களா? நல்ல விஷயமே இங்க சினிமாதான். சினிமாவை விட உயர்ந்தது இந்த உலகத்தில் எதுவும் இல்ல. ஒரு சில அரசியல்வாதிகள் அரசியல் குடும்பத்தில் இருந்து இங்க வந்து நடிப்பாங்க... யாராவது சினிமாக்காராங்க அரசியல்வாதிங்க ஏன் நடிக்கறாங்கன்னு கேட்கவே மாட்டாங்கா.. எத்தனை காலமா எத்தனை அரசியல்வாதிங்க வந்திருக்காங்க. கேட்குறமா.... கேட்க மாட்டோம்.
ஆனா சினிமாவில் இருந்து ஒருத்தர் அரசியலுக்கு போய்ட்டா கூத்தாடி ஏன் வரான்னு-ங்கறது. அரசியல்வாதிங்க நடிக்க வந்தா நாங்க ஏத்துப்போம்.. ஆனா சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்தா நீங்க ஏத்துக்கமாட்டிங்க.
கூத்தாடிங்கற வார்த்தை இப்போ இல்ல காலம் காலமா கேட்டுக்கிட்டு தான் இருக்கோம். ஆனா ஆண்டுக்கிட்டு தான் இருப்போம். கலைஞர் முதலில் கூத்தாடி... எம்.ஜி.ஆரும். கூத்தாடி. ஜெயலலிதாவும் கூத்தாடி. விஜயகாந்தும் கூத்தாடி தான்... இன்னிக்கு விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு. இன்னைக்கு அவரையும் நீங்க கூத்தாடின்னு சொல்றீங்க...
கூத்தாடிங்கறது நாங்க பெருமையாதான் நினைப்போம்... கூத்தாடிங்க வந்துட்டாங்கன்னு இழிவா சொல்லாதீங்க. கூத்தாடிங்கறது பெருமையான வார்த்தை. அதை இழிவு படுத்த வேண்டாம். யாரையும் இழிவுபடுத்த வேண்டாம். கூத்தாடிங்கறது ஒரு தொழில். எப்படி ஒரு சாதியை குறிப்பிட்டு இழிவா பேசுறது எவ்வளவு பெரிய தப்போ அதை மாதிரி கூத்தாடிங்கற தொழில இழிவா யாராவது பேசினா மிகப்பெரிய தப்பு. அது கண்டனத்துக்குரியது என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா "
- பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா ". மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்....
இயக்குநர் கதிரவென் பேசியதாவது....
எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் உத்ரா சாருக்கு என் நன்றிகள். என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார். என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார். ஒரு மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது...
கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர் இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார்.சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது.....
மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும். மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும்.
இந்த படத்தை கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை எழுதி, இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார்.
- இந்தப் படத்திற்கு கிரண் ஜோஸ் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'லீச் 'திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை புக் ஆஃப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் டி சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், படத்தொகுப்பு பணிகளை ஆல்வின் டாமி மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ரஃபீக் அஹமத், விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா எழுத பாடகர்கள் ஹரிச்சரன், கீர்த்தனா மற்றும் ஸ்மிதா பாடியள்ளனர்.
லீச் திரைப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஜாலி டேவிசன் சி.ஜே. மேற்கொண்டுள்ளார். நடனம் -ஷெரிப் மாஸ்டர், ஷிபு கவனிக்க, சண்டைப் பயிற்சியை டேஞ்சர் மணி வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ராஜூ கோவிலகம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.எஃப்.சி. ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும் போது, "இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்போம் ரசிப்போம் கேட்கிறபோதும் ரசிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது .ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா? இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று. படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஓட்டல்களில், நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம்.
இங்கே அருமையாக நிஜாம் பாடினார். அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்களை அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள்.
இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள். ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை. இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது. தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நித்யானந்தா பலருக்கு தர்ம ரட்சகர் விருது அறிவித்துள்ளார்.
- தற்போது இவர் இயக்குனர் பேரரசுக்கு இந்த விருதை அறிவித்துள்ளார்.
சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.

பேரரசு
இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்ததாக இந்த தர்ம ரட்சகர் விருது இயக்குனர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.

நித்யானந்தா
உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
- இந்த விழாவில் வெற்றிமாறனின் பேசியதை இயக்குனர் பேரரசு விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள்.

வெற்றிமாறன்
அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே நாங்கள் மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள்.

பேரரசு
ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.
உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்,நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு.
- சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பேரரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.
"புளுசட்டை" என்ற பட விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்தில் கடுமையாக விமர்சனம் செய்பவரின் நாக்கை அறுப்பது போல் ஒரு காட்சி, அந்த குறும்படத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்தார். "கடுமையாக எழுதுவது தவறுதான் என்றாலும், நாக்கை அறுத்து தண்டிப்பது போல் எப்படி காட்சி வைக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினார்.

பேரரசு
அதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு குரல் எழுப்பினார். "நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். இயக்குனர் ஆவதற்கு 5 வருடங்கள் ஆனது. அந்த 15 வருடங்களில் ஊருக்கு கூட போகமுடியவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி அது வெளிவரும்போது கடுமையாக தாக்கி வா போ என தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால் ஒரு புது இயக்குனரின் மனம் என்ன பாடுபடும்? கடுமையான சொற்களால் தாக்கி எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் பார்த்து எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக்கூடாது" என்றார்.
விழாவின் நோக்கம் மறந்து வேறு பாதையில் விலகி, விவகாரமாகும் சூழ்நிலையை உணர்ந்த ஜாக்குவார் தங்கம் மேடையில் இருந்து இறங்கி வெளிநடப்பு செய்தார். காரசாரமாக நடந்த இந்த படவிழா இறுக்கமான சூழ்நிலையில் முடிவடைந்தது. இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

