என் மலர்
நீங்கள் தேடியது "Peru"
பெரு நாட்டின் திருஜிலோ என்ற நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலிகொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளனர். #Perumasschildsacrifice #masschildsacrifice
லிமா:
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மேலும் 56 குழந்தைகள் மற்றுமின்றி 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளபெருக்கால், அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர். அதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 6-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த சமபவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Perumasschildsacrifice #masschildsacrifice
பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
லிமா:
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல் முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
முதல் கட்டமாக கவுதமாலா நாட்டுக்கு சென்ற நாயுடு, கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்தித்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், துணை ஜனாதிபதி மூன்றாவது கட்ட பயணமாக பெரு நாட்டுக்கு சென்றார். தலைநகர் லிமாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru