என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police inspector arrested"

    • நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
    • காவல் ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெபபோலியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியுள்ளார்.

    இதனால், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டிய நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், லஞ்சம் புகாரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வளசரவாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அய்யப்பன்.

    அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்க துரையிடம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தங்கதுரை பலமுறை இன்ஸ்பெக்டரை சந்தித்து தனது மோட்டார் சைக்கிளை விடுவிக்குமாறு கேட்டார்.

    ஆனால் இன்ஸ்பெக்டர் என்ஜினீயரின் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி என்ஜினீயர் தங்கதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி இன்று காலை என்ஜினீயர் தங்கதுரையிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனை கைது செய்தனர்.

    போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருவதால், அதை தடுக்க இ-செல்லான் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது நடைமுறையில் இருக்கும் வேளையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×