என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Leaders"

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
    • ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.

    தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

    வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.

    தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.

    பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்.
    • ருசிகரமான அந்த கணிப்பு உங்களுக்காக

    இன்று மலர்ந்துள்ள 2025-ம் ஆண்டு அதிக மகிழ்ச்சியும், இன்பமும் தர வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் எதிர் பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அவர்களது ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஜோதிட ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.


    ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 2025-ல் எத்தகைய பலன் கிடைக்கும் என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ருசிகரமான அந்த கணிப்பு வருமாறு:-


    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு குருபகவான் 7-வது வீட்டில் இருக்கிறார். இதனால் அவர் அனைத்து துறைகளிலும் எடுக்கும் திட்டங்களும், முடிவுகளும் வெற்றிகளுடன் மேம்பாட்டை பெறும். மே மாதம் 29-ந்தேதி வரை அவருக்கு செவ்வாய், சனி தசாபுத்தி இருப்பதால் திடீர் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

    என்றாலும் வருகிற மே மாதம் முதல் அவரது ஜாதகத்தில் புதன் திசை மிகவும் அனுகூலமாக இருக்கிறது. இது அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக ஆதரவை பெற்று தந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

    சனிப்பெயர்ச்சி அவருக்கு சிறப்பாக இருப்பதால் நாட்டின் நிதி மேம்பாட்டிலும் சர்வதேச அளவில் அவர் எடுக்கும் முயற்சிகளிலும் அபரிமிதமான வெற்றிகளை கொடுக்கும்.


    அமித்ஷா

    மத்திய மந்திரி அமித்ஷா ஜாதகத்தில் சனி 12-வது இடத்துக்கு செல்கிறார். அவரது அதிரடி நடவடிக்கை கள் நாட்டுக்கு நலன் பயப்பதாக இருக்கும். ஆனால் குரு பகவான் 3-வது வீட்டில் இருப்பதால் அவருக்கு ஆதரவாளர்கள் மூலம் திடீர் நெருக்கடியும், கோபமும் ஏற்படலாம்.

    சனியும், குரு பகவானும் சரியான நிலையில் இல்லை. எனவே உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


    ராகுல்காந்தி

    ராகுல் ஜாதகத்தில் சனி 4-வது இடத்தில் இருக்கிறார். ராகு பகவான் 9-வது வீட்டில் அமர்ந்துள்ளார். அதோடு தற்போது அவருக்கு ராகு திசையும் நடக்கிறது. இதனால் அவருக்கு எதிர்பாராத சவால்கள் வரக்கூடும்.

    மே 14-ந்தேதிக்கு பிறகு அவருக்கு சில கிரக மாற் றங்கள் ஏற்படுகிறது. இத னால் தோழமை கட்சிகளின் ஆதரவும், நட்பும் மேம்படும். ஆனால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரது கிரக மாற்றங்கள் இருக்கின்றன.


    பிரியங்கா

    பிரியங்காவின் ஜாத கத்தில் வெள்ளி திசை நடக்கிறது. இதனால் அவரது முயற்சிகளில் திருப்தியும், வெற்றியும் உண்டாகும். மே 14-ந்தேதிக்கு பிறகு அவ ருக்கு அரசியலில் தனிப்பட்ட முறையில் பல்வேறு சவால் கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தற்போது குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் மிகவும் சாதகமான பலன்கள் பெறும். குறிப்பாக இந்த காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் தமிழ்நாட்டுக்கு மேலும் நன்மைகள் தருவதாக அமையும்.

    என்றாலும் சனி பகவான் 8-வது இடம் மீன ராசிக்கு செல்வதால் உணவு வகைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அவரது தசாபுத்திகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. இதன் காரணமாக அவர் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மறு மலர்ச்சி உண்டாக்கும் வகையில் அமையும்.


    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஜாத கத்தில் தற்போது கிரக அமைப்புகள் அனைத்தும் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மேற்கொள்ளப் போகும் பயணங்களுக்கு மிகப்பெரிய வெற்றியும் சாதனைகளும் காத்து இருக்கிறது.

    சனி திசை உதயநிதி ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளுக்கு உரிய வெற்றிகளை தரும். சுக்கிர பகவானின் அமைப்பும் அவருக்கு மிகவும் அமோகமாக இருக்கிறது. இது அவருக்கு அரசியலில் கூடுதல் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும்.

    குரு பகவான் அடுத்து மிதுன ராசிக்கு செல்ல இருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த கால கட்டத்தில் அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் அனைத்து துறைகளிலும் நன்மையையும், திருப்தியையும் கொடுக்கும்.


    எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஜாதகப்படி 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் சவால்களையும், சாதனைகளையும் சம அளவில் பெற்றுத் தருவதாக இருக்கும்.

    சனி பகவான் 8-வது வீட்டுக்கு செல்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது போல உள் கட்சி விவகாரங்களிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    குரு பகவான் 4-வது வீட்டுக்கு செல்லும் போது பல புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குறிப்பாக அவரது தலைமையிலான அ.தி.மு.க.வில் பல புதிய அம்சங்களுடன் ஒற்றுமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    சனி பகவான் மீன ராசிக்கு செல்லும்போது அரசியலில் அவர் எடுக்கும் முடிவுகள் ஆதாயத்தை கொடுக்கும். என்றாலும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.


    விஜய்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜாதகப்படி சனி பகவான் 8-வது வீட்டில் இருக்கிறது. இது அவரது அரசியல் பயணத்தை நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.

    குரு பகவான் 12-வது வீட்டுக்கு மிதுன ராசிக்கு செல்வதால் விஜய் தனது அரசியல் பயணத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது இருக்கும். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

    தமிழகம் முழுவதும் இந்த கால கட்டத்தில் பிரசாரத்தை தொடங்கலாம். விஜய் ஜாதகப்படி சந்திரனின் அமைப்பு மிக மிக சாதகமாக இருக்கிறது. இது அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியை 2025-ல் மிகவும் வெற்றிகரமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.


    அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜாதகப்படி குரு பகவான் 11-வது வீட்டில் இருக்கிறார். சனி பகவான் 9-வது வீட்டுக்கு செல்கிறார். இது அவருக்கு அரசியலில் அங்கீகாரத்தை பெற்றுத் தரும்.

    சுக்கிர திசை இருப்பதாலும் புதன் தசை அனுகூலமாக இருப்பதாலும் கட்சியை அவர் கட்டுப்கோப்புடன் வைத்து இருப்பார். சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இந்த கால கட்டங்கள் அவருக்கு சாதகமாக உள்ளன.


    கனிமொழி

    கனிமொழி எம்.பி.க்கு ஜென்ம சனி கால கட்டம் இது. மார்ச் மாதத்துக்கு பிறகு அவரது ஜாதக அமைப்பில் மாற்றம் ஏற்படும். அது அவரது கட்சி பணிகளை மேன்மைப் படுத்தும்.

    குரு பகவானின் மாற்றம் வரும்போது அவருக்கு அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கிய திருப்பங்கள் ஏற்படும். மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


    சசிகலா

    சசிகலா ஜாதகப்படி சனி 12-வது இடத்திலும், குரு பகவான் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். இது அவ ருக்கு தொடர்ந்து நெருக்கடி களையும், சவால்களையும் கொடுத்து கொண்டே இருக் கும். இதனால் இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    குரு பகவான் 4-வது இடத்துக்கு செல்லும் போது அவருக்கு சாதகமான சூழ்நிலை அமையும். அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கலாம். 

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்றும், மற்ற தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

    தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன்  காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார்.




    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #TNElections2019

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அ.தி.மு.க.வினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன.

    ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை.

    தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணை போவது வெட்கக்கேடானதாகும்.

    துணை முதல்-அமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்-அமைச்சரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    எம்.எல்.ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அ.தி.மு.க. வினரிடம் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.

    தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி தி.மு.க. அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் நினைக்கின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    தமிழகத்தில் பல தொகுதிகளில் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் எவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை சட்டமன்ற விடுதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை நேரிடையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கைப்பற்றிய பணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-பா.ஜ.க. அணி 40 தொகுதிகளிலும் படு தோல்வி அடையும் என்ற அச்சத்திலேயே மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இம்மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரா.முத்தரசன்:-

    வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். குறுக்கு வழியில் வெற்றி பெற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, அதிகார துஷ்பிரயோக செயலில் அ.தி.மு.க.வும், பா. ஜனதாவும் ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழக மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்:-

    தமிழக மக்கள் இந்த ஜனநாயக படுகொலையை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். தேர்தல் நடைபெறும் புதுச்சேரி உள்ளிட்ட 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் படுதோல்வி அடைவது நிச்சயம். பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியிலும் தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற அனைவருக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்கு வெற்றியை தேடி தந்து வேலூர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    வி.ஐ.பி. நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்க தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. #Loksabhaelections2019 #ElectionCommission
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கு ஆதரவாக கடந்த 1 மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தனர். தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் விதியின்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிகிறது.

    இதன் பிறகு அரசியல்வாதிகள் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமி‌ஷன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அது மட்டுமல்ல, வி.ஐ.பி. நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கவும் தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. #Loksabhaelections2019 #ElectionCommission
    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நாளையுடன் முடிவடைய உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். #LokSabhaElections2019 #FinalCampaign
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 18-ம்  தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.


    கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.  கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.


    இதேபோல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் அவர் கலந்து கொண்டார்.

    அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, விஜயகாந்த் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன், பா.ம.க. வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொகுதியிலும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் மத்திய சென்னையிலும், டிடிவி தினகரன் காஞ்சிபுரம், தென்சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும், வைகோ சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் தென்காசியிலும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியிலும், கமல் திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் பகுதியிலும், சீமான் சென்னையிலும் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

    தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி (சுமார் 100 வீரர்கள்) துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    7 கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் கடந்த 11-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 18-ம் தேதி நடைபெற உள்ள 2ம் கட்டத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் (புதுவை) உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.   #LokSabhaElections2019 #FinalCampaign
    எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை அழித்த இந்திய விமானப்படைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
    சென்னை:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு தலைவர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    தமிழக மக்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமானப்படைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டால் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.



    பயங்கரவாத முகாம்களை அழித்த வீரர்களால் நாட்டுக்கு பெருமை என்றும், பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு வணக்கங்களை தெரிவிப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

    மோடியின் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக பாஜக கூறியுள்ளது. நமது வீரர்கள் உயிரிழந்ததால் மிகுந்த வேதனையில் இருந்த ஒவ்வொரு இந்தியனுக்கும், இன்று காலை நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

    நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நமது படை வீரர்களுக்கு பின்னால் மக்கள் உறுதியாக இருந்து ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.

    இந்திய விமானப்படை வீரர்களை நாட்டின் அற்புதமான வீரர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
    முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளை கொண்ட இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார்.  அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி நாம் நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் அவரை நாம்  நினைவில் கொள்கிறோம். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார்.



    இதேபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடி வாங்குவார்கள் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். #NitinGadkari #BJP
    மும்பை :

    மும்பையில், மத்திய மந்திரி நிதின் கட்கரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில், நிதின் கட்கரி பேசியதாவது:-

    மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் தலைவர்களை பொதுமக்களுக்கு பிடிக்கும். ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதே பொதுமக்களிடம், அரசியல் தலைவர்கள் (அரசியல்ரீதியாக) அடி வாங்குவார்கள்.

    நான் வாக்குறுதி மட்டுமே கொடுக்கும் அரசியல்வாதி அல்ல. அதை 100 சதவீதம் நிறைவேற்றுபவன்.

    நான் மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது, நான் திட்டங்களை முடித்த விதத்தை மும்பை பத்திரிகையாளர்கள் பார்த்து இருப்பார்கள். மும்பையில் 50 மேம்பாலங்கள் கட்டப் போவதாக நான் அறிவித்தபோது, எல்லோரும் கேலியாக பார்த்தனர்.



    ஆனால், மேம்பாலங்களை கட்டியதுடன், மும்பை-புனே இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையவும் காரணமாக இருந்தேன்.

    இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

    நிதின் கட்கரி, கடந்த மாதம், புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார். 3 மாநில தேர்தல் தோல்வியைத்தான் அவர் சுட்டிக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது.

    கடந்த 13-ந் தேதி நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசுகையில், அரசியல்வாதிகள் பிற துறைகளில் தலையிடக்கூடாது என்று கூறினார். அதுவும் பரபரப்பை உண்டாக்கியது. அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடிவாங்குவார்கள் என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NitinGadkari #BJP

    நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-


    இறைமகன் இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அன்புச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் ‘‘இறைவனின் பிள்ளைகள் நீங்கள்’’ என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

    இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில் நாமும் கடைபிடிக்க உறுதி ஏற்போம். அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு.

    கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதோடு புதிதாகப் பிறக்க உள்ள ஆண்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்கிறோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-


    சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடந்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட இயேசு கிறிஸ்து அருள் பாலிக்கட்டும்.

    உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மனிதர்களுக்கு அன்பு, கருணை மற்றும் மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டில் அமைதி நிலவ வேண்டும், பொறாமைகள் அகல வேண்டும், ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பகையும் வெறுப்பும் வளர்ந்து படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில் சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் ரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ் நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    த.மா.கா என்றும் கிறிஸ்தவ மக்களின் தோழனாக, அரணாக, பாதுகாவலராக இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் எளிய நடையையும், நற்பண்புகளையும் பின்பற்றி வருகின்ற கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் அவரின் நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இறைவன் துணை நிற்க வேண்டி, கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்ஆர். தனபாலன்:-

    இயேசுவின் கட்டளைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியான வழியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று சமாதானத்தோடு வாழ்ந்திட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

    ஏழை, எளியோர் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு பார்வையற்றோர், வாய்பேச முடியாத கேட்கும் திறனற்றவர்கள், தொழுநோயாளிகள் என்று சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக தேவகுமாரன் பிறந்த இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. இந்நாளில் நம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் இனிய ‘‘கிறிஸ்துமஸ்’’ நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். #Prapanchan #DrJayachandran
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-



    5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த ராயபுரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிறகு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவருடைய எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Prapanchan
    சென்னை:

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  
    இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:-


    எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கிரண்பேடி, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:-

    தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-

    தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை அனைத்திலும் தடம் பதித்தவர். வானம் வசப்படும் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

    புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:-

    தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாகத் திகழ்ந்த எழுத்தாளர்-நாடக ஆசிரியர் பிரபஞ்சன்  உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

    சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துப்பணியை திறம்பட செய்து வந்த பிரபஞ்சனின் மறைவு எழுத்துலகுக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்!

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #Prapanchan
    ×