search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pooja flowers"

    • திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,
    • அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.

    எடுத்த பின் மலர்ந்த மலர், பழம் மலர், எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் கட்டி வைத்த மலர்கள், கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த மலர்கள், உதிர்ந்து கீழே விழுந்த மலர்கள், கீழே உதிர்ந்த மலர்கள், இடைக்குக் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட மலர்கள், இரவில் பறித்த மலர்கள், புழுக்கடி மலர்கள், நீரில் மூழ்கிய மலர்கள், அசுத்தரால் எடுக்கப்பெற்ற மலர்கள், தலைமுடி பட்ட மலர்கள், பறவைகளின் எச்சம் பட்ட மலர்கள், சிலந்தி அணில், பல பூச்சி எச்சில் பட்ட மலர்கள், காகித மலர்கள், வாசனை இல்லாத மலர்கள், இவைகள் பூஜைக்குப் பயன்படாத மலர்கள் ஆகும்.

    விநாயகருக்கு & துளசியும்,

    சிவனுக்கு & தாழம் பூவும்,

    துர்க்கைக்கு & அருகம்புல்லும்,

    சூரியனுக்கு & வில்வமும்,

    திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,

    அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.

    நாம் பூஜை செய்யும் நேரம் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். எந்த நேரத்தில் செய்யும் பூஜைக்கு எந்த பூக்களை பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
    நாம் பூஜை செய்யும் நேரம் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

    1. விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள்
    கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப்பூக்கள்.

    2. பகற்கால பூஜைக்குரிய பூக்கள்
    செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப்பூக்கள்.

    3. யாம காலப்பூஜைக்குரிய பூக்கள்
    மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப்பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நிறப்பூக்கள் பூஜைக்கு மிக உத்தமம்.
    ×