என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powerlifting"

    • பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார்.
    • கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் யாஷ்டிகா தங்கம் வென்றிருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பவர்லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா (17), 270 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதன் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

    இந்நிலையில், யாஷ்டிகா பயிற்சியின் போது 270 கிலோ எடையை பயிற்சியாளர் உதவியுடன் தூக்க முயன்றார். அப்போது பயிற்சியாளர் எடையை அவர் மீது விட்டபோது, அந்த எடையைத் தாங்க முடியாமல் அவர் நிலை தடுமாறியதில் மொத்த எடையும் அவர் மீது விழுந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    சத்தீஷ்கரில் நடைபெற்ற தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக அணி 2 வெண்கல பதக்கம் வென்றது. #powerlifting
    43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 22 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழக அணிக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்தது. 93 கிலோ பிரிவில் சென்னை வீரர் எம்.நந்தகுமார் மொத்தம் 690 கிலோ தூக்கி 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

    பெண்களுக்கான 47 கிலோ பிரிவில் சேலத்தை சேர்ந்த கே.நந்தினி மொத்தம் 237.5 கிலோ தூக்கி 3-வது இடத்தை பிடித்தார். #powerlifting
    ×