என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prabhas"

    • 45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
    • நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது

    தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்புகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.

    இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

    பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார்.
    • இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நெட்டிசனின் கோரிக்கை ஒன்றுக்கு படக்குழு பதிலளித்துள்ளது. அதில் இந்த வருடம் பாகுபலி திரைப்படத்தை இந்தாண்டு ரீரிலீஸ் செய்யனுமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்தாண்டு ஜூன் மாதம் திரைப்படம் மீண்டும் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபாஸ் நடித்த ‘சலார்' படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி ‘ஹிட்' அடித்தது.
    • படக்குழுவினருடன், பிரபாசுக்கு தகராறு என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்' படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பிரபாசுக்கு 'கம்பேக்' படமாகவும் அமைந்தது.

    'சலார்' படத்தின் 2-ம் பாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இந்த படம் தள்ளிப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'தி ராஜாசாப்' படத்திலும், முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' படத்திலும் நடித்து வருகிறார்.

    இதனைத்தொடர்ந்து 'ஹனு-மான்' படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க போவதாகவும், இதன் காரணமாகவே 'சலார்-2' படத்தை அவர் தள்ளிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    'சலார்-2' படம் தள்ளிப்போனதற்கு படக்குழுவினருடன், பிரபாசுக்கு தகராறு என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

    ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.


    ஆதிபுருஷ்

    டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். இப்படம் வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.


    ஆதிபுருஷ்

    அதன்படி, இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்தில் உருவாக்கவும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதிபுருஷ் படத்தை ஏப்ரல், மே மாதங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’
    • இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.


    ஆதிபுருஷ்

    மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.


    ஆதிபுருஷ்

    டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். சமீபத்தில், இந்த படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.


    ஒம் ராவத் வெளியிட்ட அறிக்கை

    இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜுன் 16-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஓம் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்வையாளர்களுக்கு காட்சிபூர்வமான முழு அனுபவம் தருவதற்கு எங்கள் படக்குழுவிற்கு கூடுதல் அவகாசம் தரவேண்டியிருக்கிறது. இந்தியா பெருமைப்படக் கூடிய படத்தை வழங்குவது எங்கள் கடமை. உங்களின் அன்பும் ஆதரவும் எங்களை தொடர்ந்து இயக்க வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பிரபாஸ்.
    • இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 20 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் ரசிகர் பட்டாளம் விரியத் தொடங்கியது. தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பிரபாஸ்

    இந்நிலையில், நடிகர் பிரபாஸ் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 20 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் 20 இயர்ஸ் ஆப் பிரபாஸ் (#20YearsofPrabhas) என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ்.
    • இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.

    பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

     

    இந்நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரபாஸ், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதில் சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டியில், ''பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

    • பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ்.
    • இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.

    பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

     

    தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரபாஸ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதில் சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டியில், ''பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். கிருத்தி சனோன் வேறு ஒருவர் இதயத்தில் இருக்கிறார். அந்த மனிதர் தற்போது தீபிகாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார்," என இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தியிருந்தார்.

     

    இதைத் தொடர்ந்து இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவற்றை "பொய்யான செய்தி" என்று கிருத்தி சனோன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கிருத்தி சனோன் அது காதலும் இல்லை, பப்ளிசிட்டியும் இல்லை. அந்த ரியாலிட்டி ஷோவில் எங்களது (ஓநாய்) கொஞ்சம் காட்டுத்தனமாக நடந்து கொண்டார். ஒரு வேடிக்கையான கேலிப் பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகிவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் எனது திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உங்களது கற்பனையை உடைத்து விடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாதவை," என குறிப்பிட்டுள்ளார். இதனால் பிரபாஸ் - கிருத்தி சனோன் காதல் பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    • இயக்குனர் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்.

    சமீபத்தில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ராஜமவுலி - பிரபாஸ்

    அதில், "ராஜமவுலி அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள். சிறந்த இசையமைப்பாளருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டுள்ளார்.


    ராஜமவுலி - பிரபாஸ் பதிவு

    இதற்கு இயக்குனர் ராஜமவுலி, " தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்.." என்று" பதிலளித்துள்ளார்.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
    • இப்படத்தில் கேஜிஃப் பட புகழ் யஷ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    சலார்

    சலார்


    இந்நிலையில் சலார் படத்தில் கேஜிஎஃப் பட புகழ் யஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யஷின் கதாப்பாத்திரம் 7 நிமிடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இதில் ஸ்ரீ ராமராக பிரபாஸும் சீதா தேவியாக கிருத்தி சனோனும் லக்ஷ்மணனாக சன்னி சிங்கும் அனுமனாக தேவதத்தா நாகேவும் தோன்றியுள்ள இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார்.


    சலார்

    சலார்

    இந்நிலையில் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×