என் மலர்
நீங்கள் தேடியது "Premalu"
- இந்த படத்தில், நஸ்லென், மமிதா பைஜூ முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
- இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்தார்.
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமலு. மமிதா பைஜூ, நஸ்லேன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்தார்.
காதல் கலந்த காமெடி கதையம்சம் கொண்டிருந்த பிரேமலு திரைப்படம் மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.

இந்த நிலையில், பெரும் வரவேற்பை பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. கிரிஷ்ஏ.டி. இயக்கும் இந்த படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் தயாரிக்கின்றனர்.
கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரன் ஜோசி இணைந்து எழுதி இருக்கும் பிரேமலு 2 திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.
- விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதையடுத்து மமிதா பைஜூ திரையுலகினர் திரும்பி பார்க்கும் நடிகையாக உருவெடுத்தார். இந்த நிலையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரை தற்போது திரை உலகின் காதல் மன்னன் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்குகிறார். இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படமாகும். தற்காலிகமாக VD-12 என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். முதலில் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கவிருந்தார் ஆனால் தற்பொழுது அவர் இதில் நடிக்கவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் "கோமாளி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் "லவ் டுடே" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றன. பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவனின் "எல்ஐசி" மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் "டிராகன்" ஆகிய இரண்டு படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
"எல்ஐசி", "டிராகன்" படங்கள் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான படம் பிரேமலு. இந்த படத்தில் நஸ்லேன், 'சச்சின்' என்ற கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மமிதா பைஜூ. அதில் இவரது பெயர், ரீனு. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. இதையடுத்து மமிதா பைஜூக்கு படங்கள் வரிசை கட்டி நின்றன. அந்தவகையில் மமிதா பைஜூ முதன் முதலில் நடித்த தமிழ் படம் 'ரெபல்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஒரு முனையில் பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் என்ற நிலையில் மற்றொரு முனையில் மமிதா பைஜூ மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார்.
- படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டானார்.
விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொன்றியுள்ளது.
கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் மலையாள நடிகர் பிரேமலு புகழ் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெலியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
- திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை கிரிஷ் ஏடி இயக்கியிருந்தார். இப்படத்தில் நஸ்லேன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கிரிஷ் ஏடி இதற்கு முன் தண்ணீர் மாதன் தினங்கள், சூப்பர் ஷரன்யா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள Iam kathalan திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஒரு சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நஸ்லேன் ஒரு ஹேக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இருக்கும் ஊரின் பெரிய நிறுவனத்தை ஹேக் செய்வது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு பிறகு கிரிஷ் இயக்கத்தில் நஸ்லேன் பிரேமலு 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நஸ்லேன் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவானது பிரேமலு திரைப்படம்.
- திரைப்படம் உலகளவில் 130 கோடி ரூபாய் வசூலித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவானது பிரேமலு திரைப்படம். இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். கிரிஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு இளம் காதலர்கள் மத்தியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையில் வைத்தி திரைப்படம் அமைந்தது. திரைப்படம் உலகளவில் 130 கோடி ரூபாய் வசூலித்தது.
விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக படக்குழு முன்னதாகவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் திரைப்படத்தை இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்போவதாகவும் படத்தில் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.