என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priyamani"

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகிறது.
    • புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, அதன் மூலம் நிறைய வருமானமும் பிற படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

     

    பிரியாமணி

    பிரியாமணி

    நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி வில்லன் நடித்து வரவேற்பை பெற்றதால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேபோன்று கதாநாயகிகளும் வில்லியாக நடிக்க விரும்புகிறார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் திரிஷா நடித்து பெயர் பெற்றிருந்தார்.

     

    பிரியாமணி

    பிரியாமணி

    இந்நிலையில் பிரியாமணியிடம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2-ம் பாகம் படத்தில் வில்லியாக நடிக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா-2 படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க முயற்சி நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை படக்குழு அணுகி உள்ளனர். அவருக்கும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதால் விரைவில் ஒப்புக் கொள்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பருத்திவீரன், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி.
    • தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்துக் வருகிறார்.

    தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.

    பிரியாமணி

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, அதன் மூலம் நிறைய வருமானமும் பிற படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இணையத்தொடர்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அதிக வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியாமணி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழில் நடிகைகளை கவர்ச்சிக் காட்டச் சொல்லி கட்டாயபடுத்துகிறார்கள்.

    பிரியாமணி

    பாலிவுட் நடிகைகளூக்கு இருக்கும் உடல்வாகு வேறு தமிழ் நடிகைகளின் உடல்வாகுவேறு ஆனால் இந்த நிலை தற்போது மாறியிருக்கிறது என்று பிரியாமணி கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

    ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தமிழ் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #RRR #Samuthirakani
    ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து வரலாற்று படமொன்றி இயக்கி வருகிறார். ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர். ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

    இந்த படத்தின் மூலம் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போதைய தகவல்படி, சமுத்திரக்கனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழு தற்போது சண்டிகர் விரைந்துள்ளது. அந்த சில முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் சமுத்திரக்கனி, தான் இயக்கியிருக்கும் நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸ் பணிகளை தொடர்வார் என்று கூறப்படுகிறது.



    முன்னதாக நாடோடிகள் படத்தை பார்த்த ராஜமவுலி, சமுத்திரக்கனியை பாராட்டியதுடன் தனது வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தை சந்திக்க அழைப்பு விடுத்ததாக சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஜமவுலி படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் ராம் சரணின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடிக்கிறார்கள். #RRR #RamCharan #JrNTR #Samuthirakani

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் பிரியாமணி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RRR #Priyamani
    ராஜமவுலி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள், கதாநாயகனுக்கு சமமாக பேசப்படுவார்கள். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இதுவரை நாயகி மற்றும் மற்ற நடிகர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், தற்போது நடிகை பிரியாமணி, ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது.



    இவர் நாயகியாகவா அல்லது மற்ற கதாபாத்திரமா என்பது முறையான அறிவிப்புக்குப் பின்னரே தெரிய வரும். கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Priyamani

    பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார். #Priyamani
    திருமணத்துக்கு பிறகும் கூட ஒரு வெற்றிகரமான நடிகையாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் பிரியாமணி. ஆனால், இங்கு இல்லை தெலுங்கு, கன்னடம், இந்தியில்...

    ஏன் தமிழை மறந்துவிட்டீர்களா? என்று போனில் கேட்டோம்.

    ‘எப்படி மறக்க முடியும்? எனக்கு தேசிய விருது மூலம் பெரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்ததே தமிழ் தானே? தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இந்த கேள்வியை நீங்கள் அங்கு இருக்கும் இயக்குனர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் என்னை அணுகவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

    தென்னிந்தியாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகரிக்கிறதே?

    நல்ல வி‌ஷயம். இப்போதாவது நடிகைகளுக்கும் தங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதற்காக கமர்ஷியல் படங்களை குறை கூறவில்லை. அதுவும் ஒரு நடிகையின் சினிமா வாழ்க்கையில் அவசியம். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் என்றால் முழு படமுமே அவர்களின் தோள்களில் தான் இருக்கிறது. எப்போதுமே சினிமாவை தாங்குவது பெண்கள் தான். இன்று அவர்கள் தங்களால் ஆக்‌‌ஷன் பண்ண முடியும், நடிக்க முடியும் என்று தங்கள் முழு திறமையை காட்ட முடிகிறது. ஹீரோயினுக்கான படம் என்றாலும் அதிலும் வித்தியாசமான கதைகள் வரவேண்டும். ஹாரர், திரில்லர் என்று மட்டுமே வந்துகொண்டிருந்தால் அவற்றால் பயன் இல்லை. இப்போது அறம் மாதிரியான வித்தியாசமான படங்களும் வரத் தொடங்கி இருக்கின்றன.



    உங்களுக்கு பிறகு தமிழில் எந்த கதாநாயகியும் தேசிய விருதுக்கு செல்லவில்லையே?

    பருத்தி வீரன் மாதிரியான படம் அமையவில்லை போல. இப்போது நடிகையர் திலகம் மூலம் கீர்த்தி சுரேஷ் தேசிய விருதுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. தேசிய விருது என்பது போட்டிகள் நிறைந்த இடம். இந்தியா முழுவதிலும் இருந்து படங்கள் வரும். எனவே சவால்கள் அதிகம்.

    ஜோதிகா, சமந்தா, நீங்கள் என்று திருமணத்துக்கு பிறகும் கூட கதாநாயகியாக நடிப்பது பற்றி?

    இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்கள் அக்கா, அண்ணி வேடங்களுக்கு தான் என்று ஒதுக்கி வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது மாறி இருக்கிறது. இது தொடர வேண்டும்’ என்றார்.
    ×