search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pro kabaddi league 2024"

    • நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
    • புரோ கபடி லீக்கின் 1000-வது போட்டி இதுவாகும்.

    ஜெய்ப்பூர்:

    புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ளன.

    பாட்னா பைரேட்ஸ் அதிகபட்சமாக 3 முறையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 3 தடவையும், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பையில் நடைபெற்றன. 7-வது கட்ட போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூல் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. புரோ கபடி லீக்கின் 1000-வது போட்டி இதுவாகும். இதையொட்டி அஜய் தாக்கூர், அனுப்குமார், சேரலாதன், மஞ்சித் சில்லர், ரிஷங் தேவதிகா ஆகிய முன்னாள் பிரபல வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    1000-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுருவை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பெங்களூருக்கு 8-வது தோல்வி ஏற்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர்-மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர் அணி பெற்ற 9-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த அணி 53 புள்ளிகளுடன் புனேயை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றது. புனே அணி 52 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி (43 புள்ளி), குஜராத் (39), அரியானா (39), பெங்கால் (38), அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ×