என் மலர்
நீங்கள் தேடியது "psychosis"
- மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும்.
- புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது.
மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். ரத்தப்போக்கு அளவு நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கு அதிகமாகவும், ரத்தப்போக்கு அதிகரித்தும் காணப்படுவதை 'அதிகரித்த ரத்தப்போக்கு' அல்லது 'பெரும்பாடு' (மெனோரேஜியா) என்பார்கள். இதற்கான காரணங்கள் வருமாறு:-

1) ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன்களுக்கு இடையில் உள்ள சமநிலை மாறுபாடு,
2) கருப்பை உள்ளுறுப்புகளான சினைப்பாதை, சினைப்பை இவற்றில் கருப்பை புறணியான எண்டோமெட்ரியம் வளருதல், எண்டோமெட்ரியம் கடினமடைதல்,
3) கருப்பையில் வளரும் சாதாரண தசைக்கட்டிகள், சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் மற்றும் சாக்கலேட் கட்டிகள்,
4) கருப்பை புறணியில் வளரும் பாலிப்ஸ், அடினோமயோசிஸ், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களான காப்பர் டி இவை குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது.
இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. அதிக ரத்த இழப்பின் காரணமாக உடல் பலவீனம், சோர்வு, மூச்சு விட சிரமம் போன்ற உணர்வு வரலாம். எனவே, என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து ஆலோசனை பெறுவது நல்லது.

சித்த மருத்துவம்
இந்த பிரச்சனைகளுக்கு கீழ்க்கண்ட சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து பயன்பெறலாம்.
1) திரிபலா சூரணம் 1 கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.
2) கொம்பரக்கு சூரணம் 1 கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்.
3) திரிபலா சூரணம் 1 கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இரு வேளை ஏழு நாட்கள் உண்ணவும்.
4) வாழைப்பூ வடகம் 1-2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை, இரவு இருவேளை சாப்பிடலாம்.
6) இம்பூறல் மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
7) கரிசாலை லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை, முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
- கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை தடுக்கும்.
சினைப்பைகளையும், கர்ப்பப்பையையும் இணைக்கும் பாலமாக சினைப்பாதைக் குழாய்கள் இருக்கின்றன. கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சினைப்பாதைக்குழாய் அடைப்பின் விளைவாக, சினைப்பாதையில் கருவுறுதல் நடைபெறாது. அல்லது கருவுறுதல் நடைபெற்றாலும் (குழாய் அடைப்பின் காரணமாக), கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை, சினைப்பாதைக் குழாயில் உள்ள அடைப்பு தடுக்கும். இதனால் சினைப்பாதைக் குழாயில் இடம்மாறிய கர்ப்பம் ஏற்படும்.

சினைப்பாதைக் குழாய் அடைப்பின் அறிகுறிகள், அடைப்பின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். சினைப்பாதைக் குழாயில் திரவம் நிரம்பி இருந்தால் வயிற்றின் ஒரு பக்கத்தில் லேசான வலி ஏற்படலாம். சில பெண்களுக்கு அவ்வப்போதோ அல்லது மாதவிடாயின் போதோ இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம்.
அடைபட்ட சினைப்பாதைக் குழாய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனை ஹிஸ்டெரோசால்பின்கோக்ராம் எனப்படும். இதில் ஒரு பாதுகாப்பான சாயம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு, சினைப்பாதைக் குழாய்களிலுள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும்.

சித்த மருத்துவத்தில் நோய்த்தொற்றுக்குரிய சிகிச்சைகள் மற்றும் சதையடைப்புக்குரிய சிகிச்சைகள் கொடுக்கப்படும். இதை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்றுக்கு சேராங்கொட்டை நெய் 5 மில்லி லிட்டர் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். சதையடைப்பு நீங்க மாவிலிங்கப்பட்டைச் சூரணம் 1 கிராம், வெடியுப்புச் சுண்ணம் 200 மில்லிகிராம், நண்டுக்கல் பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் வீதம் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். இதை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதே நல்லது.
- புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள் என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அவர் கூறிய கருத்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலையே வித்தியாசமாக தான் இருக்கும். தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்.
9 ம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.