என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry University"

    • சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார்.
    • வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

    பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

    அவரின் வருகைக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார்கள் என தெரிவித்தனர். ஆனால் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னரும், முதல்-அமைச்சரும் பங்கேற்கவில்லை.

    அதேநேரத்தில் சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார். வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    சென்னை வரை வந்த துணை ஜனாதிபதி புதுவை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுவதுதான் காரணம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அங்கு அவர் பேராசிரியராக பணியாற்றிய போது தங்கியிருந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், அதற்கான வாடகை பாக்கி ரூ.23 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல்வேறு சங்கத்தினர் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    அதில் புதுவை பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டுள்ளனர். டிஜிட்டல் போர்டு அமைப்பது உட்பட பல்வேறு முறைகேடுகளில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த புகார் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை துணை ஜனாதிபதி, கவர்னர் தமிழிசை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது.
    • ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மிதமான மழை பெய்து வருகிறது. பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
    • புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைகழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலில் இந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் பகுஜன் மாணவர் கூட்டமைப்பு (BSF) கூட்டணி வெற்றி பெற்றது.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.

    பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி சமுதாயக்கல்லூரி, காரைக்கால், அந்தமான், மாகி பகுதியில் உள்ள கல்லூரிகளில் உள்ள 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மாணவர்கள் வாக்களித்தனர்.

    சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ். எப்.ஐ.) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்களை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

     வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்நிலையில் 58 இடங்களில் SFI வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். SFI கூட்டணியில் போட்டியிட்ட BSF வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். காயத்ரி எஸ். குமார் கவுன்சிலில் தலைமையேற்றார்.

    வெற்றி பெற்ற கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பாரதரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கட்டிடத்தின் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
    • தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×