என் மலர்
நீங்கள் தேடியது "quits party"
- அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தற்போது மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினராக உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களுக்கும் ஷிர்சாகருக்கும் சமீபகாலமாக கருத்து மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், மும்பையில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று அவர் சிவசேனா கட்சியில் இணைந்தார். தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷிர்சாகர் குறிப்பிட்டார்.