search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raashikhanna"

    • இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.
    • என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன்.

    ரஜினிகாந்துடன் தமன்னா நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் வெளியானது. இதில் அவர் கவர்ச்சியாக ஆடிய காவாலா பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

    கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4-ம் பாகம் படத்தில் இன்னொரு நாயகியான ராஷிகன்னாவுடன் இணைந்து நடித்து இருந்தார். படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாம் நம்மை மாதிரியே நடித்தால் போதும்.

    நானும், ராஷிகன்னாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். நடிகைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தால் நல்லது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகைகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.
    • ராஷிகன்னாவும் சம்பள பாகுபாட்டை கண்டித்துள்ளார்.

    சினிமாவில் கதாநாயகர்களுக்கு அதிக சம்பளமும், தங்களுக்கு குறைவான சம்பளமும் கொடுப்பதாக நடிகைகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

    நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் படங்கள் வெற்றி பெறுவதால் அவர்களுக்கும், கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னாவும் சம்பள பாகுபாட்டை கண்டித்துள்ளார்.

    அவர் கூறும் ''சினிமாவில் சம்பள விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் உள்ளன. காலம் மாறும்போது அதிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

    மேலும் ராஷிகன்னா கூறும்போது, ''பேய் படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் இயக்குவது கஷ்டம். நான் தமிழில் ஏற்கனவே நடித்த 'திருச்சிற்றம்பலம், சர்தார்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இப்போது 'அரண்மனை 4' படமும் வெற்றியை சாதித்துள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தி தெரியும். இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளையும் புரிந்து கொண்டு என்னால் பேச முடிகிறது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×