என் மலர்
நீங்கள் தேடியது "Rafale"
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலங்களவையில் அலுவல்கள் முற்றிலும் முடங்கி உள்ளன.

கபிர்தாம்:
சத்தீஸ்கர் மாநில சட்ட சபைக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ரபேல் விமானங்களை வாங்குவதற்கு விலை ரூ.526 கோடி என்று நிர்ணயித்தது. ஆனால் தற்போது ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசு அந்த விமானங்களை ரூ.1600 கோடி கொடுத்து வாங்குகிறது.
ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. இயக்குனர் அஸ்தானா விசாரணையை தொடங்கினார். இதையடுத்து அவரை பிரதமர் நள்ளிரவில் பதவி நீக்கம் செய்து விட்டார்.
இந்த விவகாரம் குறித்து எப்போது விசாரணை தொடங்குகிறதோ அப்போதே பிரதமர் மோடி, அனில் அம்பானியின் பெயர்கள் வெளிவர தொடங்கும். 58 ஆயிரத்து 800 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை டஸால்ட் நிறுவனத்திடம் பரிந்துரை செய்தது பிரதமர்தான்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரியது. இதனால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் பாதிக்கப்படவில்லை.
பிரதமர் மோடி ஊழல்வாதி. பனாமா ஆவணங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சத்தீஸ்கர் முதல்- மந்திரி ரமன்சிங், அவருடைய மகன் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. சத்தீஸ்கருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நீண்ட நாள் தொடர்பு உண்டு.
இந்த உறவு அன்பு சம்பந்தப்பட்டது. அரசியல் சம்பந்தமானது அல்ல. நீர்வளம், வனவளம், சுரங்கம், கனிமங்கள் ஆகியவற்றை கொண்டு பார்த்தால் சத்தீஸ்கர் பணக்கார மாநிலம்.
ஆனால் இங்குள்ள மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக ஏழை மக்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைக்கிறார்கள். இதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. அவரது ஆணவம்தான் இதற்கு காரணம்.
பா.ஜனதா அரசு விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக அரசு நிலங்களை அபகரிக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் உள்ள நிலங்களை எடுக்காது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அரசை ஏற்படுத்துவோம்.
இந்தியா இப்போது 2 பிரிவாக உள்ளது. இதில் ஒரு இந்தியா அனில் அம்பானி, மெஹுல் சோக்சி, நீரவ்மோடி, விஜய் மல்லையா போன்றோரை கொண்டது. மற்றொரு இந்தியா நீங்கள், நான், விவசாயிகள், தொழிலாளர்களை கொண்டது. இதுபோல் 2 பிரிவுகளை கொண்ட இந்தியா நமக்கு தேவை இல்லை. நமக்கு இருப்பது ஒரு தேசிய கொடி. அதுபோல் நாடும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #rahulgandhi #pmmodi #rafale #anilambani
மத்திய அரசு ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.
இதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 10-ந்தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, இதை பொதுநல மனுக்கள் வாயிலாக விசாரிக்க முடியாது என்றும், தேர்தல் ஆதாயத்துக்காக இவை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு எதையும் உறுதி செய்யவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகளை அறிந்துகொள்ள விரும்புகிறோம். எனவே வருகிற 29-ந்தேதிக்குள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இது சுப்ரீம் கோர்ட்டின் புரிதலுக்காக மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கமே தவிர மத்திய அரசுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும் மூடி முத்திரை போட்ட உறையில் வைத்து மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. #SupremeCourt #RafaleDeal
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார்.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleScam #SupremeCourt
மாவட்டம்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி காளையார்கோவிலில் நடக்கிறது.
செயல் வீரர்களின் கூட்டங்களில் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் தலைவராக நான் உள்ளேன்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய தனியாக வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசிற்கு தேவையான 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் 36 ரபேல் விமானங்கள் வாங்க பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் விமானங்களை வாங்குவதாக பா.ஜனதா அறிவித்தது. விலை குறைவு என்றால் அதனை கூறுங்கள் என்று கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள். மேலும் குறைவான விலைக்கு விமானங்கள் வாங்குவது என்றால் அதிக விமானங்களை வாங்க வேண்டியதுதானே? ஏன் குறைத்து வாங்குகிறீர்கள்?.
ராணுவ அமைச்சகம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. பா.ஜனதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 3 பேர் ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளனர். யாரும் உருப்படியான எந்த காரியத்தையும் செய்யவில்லை. இந்த அரசு அடக்கு முறை கொள்கையை கையாண்டு வருகிறது.
தொடர்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் சரிந்து வருவது பொருளாதார வீழச்சிக்கு வழிவகுக்கும். இதுபற்றி நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன்.

இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை தேர்தல் தான் தேவை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, தன்னை காவலாளி என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், ஒரு காவலாளியே ஏழை மக்களிடம் கொள்ளையடித்தது துரதிருஷ்டவசமானது. ஏழைகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை பறித்து, அனில் அம்பானியின் பாக்கெட்டில் போட்டுள்ளார்.

பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு போகிறார். அங்கு அனில் அம்பானி கம்பெனிக்கு கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை அளிக்கிறார். காவலாளி ஏன் அப்படி செய்தார் என்று அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.
பிரதமர் பெரிது பெரிதாக சொற்பொழிவு ஆற்றுகிறார். ஆனால், ரபேல் விவகாரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். பிரான்ஸ் முன்னாள் அதிபர், பிரதமர் மோடியை ‘திருடன்’ என்கிறார். ஆனாலும், மோடி எதுவும் பேசவில்லை.
பாராளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது கூட அவர் என் கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதில் அளிக்க தைரியம் இல்லை.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன்?
இந்த ஆட்சியில் விவசாயிகளும், ஏழைகளும் அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லா பலன்களையும் அனில் அம்பானி, விஜய் மல்லையா போன்ற 10 பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் அளிக்கிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #RahulGandhi #Modi #Rafale
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் போர் விமான பேரத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) இந்தியாவில் 108 போர் விமானங்களை தயாரிப்பதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்டது.
ஆனால், பா.ஜனதா ஆட்சியில், எச்.ஏ.எல்.-ஐ விலக்கி விட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை சேர்த்துள்ளனர். பிரான்ஸ் அரசோ அல்லது விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேசன் நிறுவனமோ, எச்.ஏ.எல்.-ஐ ஒதுக்கச் சொன்னார்களா?

யாருக்குமே தெரியாமல், இந்த மாற்றத்தை செய்துள்ளனர். இந்திய விமானப்படையையோ, ராணுவ மந்திரியையோ கலந்து பேசாமல், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்பதைக்கூட அருண் ஜெட்லியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அதற்கு முன்பு, மார்ச் 28-ந் தேதிதான், அனில் அம்பானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.
மேலும், விமானத்தின் விலையையும் ஒரு விமானத்துக்கு ரூ.1,670 கோடியாக உயர்த்தி உள்ளனர். இவற்றுக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ராணுவ மந்திரியோ, நிதி மந்திரியோ சொல்லத் தேவையில்லை. பிரதமரின் பொய்கள் அம்பலமாகி விட்டதால்தான் அவர் மவுனம் காக்கிறார். அவர் தப்ப முடியாது.
நூற்றாண்டு கால மிகப்பெரிய ஊழல், ரபேல் போர் விமான ஊழல் ஆகும். இந்த ஊழலை மூடி மறைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிக்கப்படும்.
பிரதமரின் பொய்களை மூடி மறைப்பதற்காக, எச்.ஏ.எல். நிறுவனம் போர் விமானம் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தை இழிவுபடுத்தி விட்டார். இந்த விமானங்களை தயாரிக்கும் திறன் பெற்ற ஒரே நிறுவனம், எச்.ஏ.எல். மட்டுமே.
இந்த விவகாரத்தில், அவர் மட்டுமின்றி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பிரதமரின் பொய்களை மறைக்க ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். திரும்பத்திரும்ப பொய் சொல்கிறார்கள். இது, இந்த அரசின் இயல்பை காட்டுகிறது.
இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார். #Rafale #Congress #AnandSharma #Modi

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. காங்கிரஸ் காலத்தில் போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றி 2015-ம் ஆண்டு பாஜக புதிய ஒப்பந்தத்தை போட்டது. அதில் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அம்பானிக்காக பிரதமர் மோடி மக்களையும், ராணுவத்தையும் ஏமாற்றி விட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் 27-ம் தேதி காங்கிரஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் மாபெரும் பேரணி நடைபெறும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஷோக் சவான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடிக்கு நண்பரின் தொழில் மீது இருக்கும் ஆர்வம் நாட்டின் மீது இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியும், அவர்களை தவறான வழியில் வழிநடத்தியும் வரும் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். #RafaleDeal #PMModi #Congress #Maharashtra #AshokChavan
‘ரபேல்’ போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்தும் வருகிறார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ‘ரபேல்’ போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

ஆனால் அதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ மறுத்தார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரபேல் போர் விமானத்தை இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது” என்று கூறினார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ஊழலை பாதுகாக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ரபேல் மந்திரி (நிர்மலா சீதாராமன்) பொய் சொல்லி இப்போது அகப்பட்டுக்கொண்டு விட்டார். ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற திறன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கிடையாது என அவர் கூறியதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜூ மறுத்துள்ளார். எனவே அவரது நிலை ஏற்கத்தக்கது அல்ல. அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறி உள்ளார். #Rafale #DefenceMinister #NirmalaSitharaman #RahulGandhi