என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahane"

    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என எம்எஸ்கே பிரசாத் எச்சரித்துள்ளார். #BCCI #TeamIndia
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. விராட் கோலி 593 ரன்கள் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே டக்அவுட் ஆனார். மற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இளம் வீரர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளில் இறங்க வேண்டும்.

    இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கனும். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.



    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கனும்.

    போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகு, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேடவேண்டியது அவசியமானது’’ என்றார்.
    இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான் தொடரை இழக்க காரணம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #Sehwag
    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் கடுமையாக போராடிய போதிலும் வெற்றியை பறிக்க முடியவில்லை.

    இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.



    இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.



    இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.
    நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள் என ரகானே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்டில் இந்தியா மூன்றில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

    இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டியது. துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்தது. கடைசி டெஸ்ட் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.



    இந்த டெஸ்ட் குறித்து இந்திய துணைக் கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘நான்கள் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகத்தான் விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்’’ என்றார்.
    இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும் என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறினார். #Rahane
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ‘இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், பந்தை அடிக்காமல் வெளியே விடும் யுக்தியை நீண்ட நேரம் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசிய நிலையில், பேட்ஸ்மேன்கள் ஒரு குழுவாக அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது தான் வருத்தம் அளிக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. தற்போது 1-3 என்ற கணக்கில் பின்தங்கி நிற்கிறோம். தொடரை உயர்ந்த நிலையில் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 3-2 என்ற கணக்கில் முடித்தால் உண்மையிலேயே அது சிறப்பாக இருக்கும்’ என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறினார். #Rahane

    இங்கிலாந்து தொடரை இழந்தது குறித்து ரவி ஷாஸ்திரி, பாங்கர் பதில் அளிக்காவிடில் வெளிநாட்டு தொடரை வெல்லது இம்பாசிபில் என கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இங்கிலாந்து மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.

    தற்போதைய இந்திய அணியால் இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்ற முடியும் என்று முன்னாள் வீரர்கள் நம்பினார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், மோசமான பேட்டிங்கால் இந்தியா தோல்வியை சந்தித்ததால், அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரவி ஷாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது இயலாத காரியம் ஆகிவிடும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்திய வீரர்களின் பேட்டிங் திறமை குறைந்து விட்டது என்று நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. புஜாரா அல்லது ரகானே ஆகியோரிடம் உறுதிப்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. நான்கு வருடத்திற்கு முன்பு, அடிலெய்டில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த உத்வேகம் இந்த தொடரில் இல்லை. புஜாராவிற்கும் அப்படித்தான்.

    ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடியபோது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதற்கு தலைமை பயிற்சியாளரான ரவி ஷாஸ்திரி முழு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பதில் அளிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது நடக்கக்கூடிய விஷயமாக இருக்காது’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் 84 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி (103), புஜாரா (72), ஹர்திக் பாண்டியா (52 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா ஒட்டுமொத்தமாக 520 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள்.



    5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 19 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    விராட் கோலியை போன்று மற்ற பேட்ஸ்மேன்கள் கவர் டிரைவ் ஷாட் அடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் ஸ்கோர் 224 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.



    புஜாரா எதிர்முனையில் விளையாடிய விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் விராட் கோலியை போன்று மற்ற வீரர்கள் ‘கவர் டிரைவ்’ ஷாட் ஆடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் கடினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.



    மேலும் சிறப்பாக விளையாடியது குறித்து புஜாரா கூறுகையில் ‘‘கவுன்ட்டி போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் உதவியது. கவுன்ட்டி போட்டி மூலம் அதிக அளவில் கற்றுக் கொண்டேன். கவுன்ட்டி போட்டியில் அதிக அளவில் ரன்கள் குவிக்காவிடிலும், சவாலான ஆடுகளத்தில் விளையாடினேன். அது எனக்கு மிகவும் உறுதியை அளித்தது’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 521 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 191 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 197 பந்தில் 103 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் சேர்த்திருந்தது. 449 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.



    கோலி ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ரன்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பந்தை இந்தியா களம் இறக்கியது. அவர் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 

    ரஹானே 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய சமி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 110 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்களை எட்டிய போது, இந்திய அணி டிக்ளேர் செய்தது. பாண்டியா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    இதன் மூலம் இந்திய அணி 520 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 
    இங்கிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #ViratKohli #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.



    92-வது ஓவரை பிராட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிராட் வீசிய 94-வது ஓவரில் அஸ்வின் ஸ்டம்பை பறிகொடுத்தார். அஸ்வின் 17 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷமியை 3 ரன்னிலும், பும்ராவை டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    2-வது இன்னிங்சில் விராட் கோலி 4-வது வீரராக களம் இறங்காததற்கு தொடக்க ஜோடி நீண்ட நேரம் நிற்காததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவ்வப்போது பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான் அவர் வெளியில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி பீல்டிங் செய்யவில்லை. ரகானேத்தான் கேப்டனாக செயல்பட்டார்.



    இங்கிலாந்து டிக்ளேர் செய்ததும் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரில் முரளி விஜயும், 7-வது ஒவரில் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுக்கள் வீழந்த பின்னர் விராட் கோலிதான் களம் இறங்குவார். ஆனால் ரகானே களம் இறங்கினார்.

    இதனால் விராட் கோலி முகுது வலி காரணமாகத்தான் களம் இறங்கியவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அவர் இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது கடைசி 37 நிமிடங்கள் பீல்டிங் செய்யவில்லை. இதனால் 37 நிமிடங்கள் கழித்துதான் களம் இறங்க முடியும்.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் 28 நிமிடத்திற்குள் ஆட்டமிழந்தனர். இன்னும் 9 நிமிடங்கள் இருந்ததால் அவரால் களம் இறங்க முடியவில்லை. இதனால் ரகானே களம் இறங்கியதாக கூறப்படுகிறது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.

    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார்.

    பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரகானே 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.

    6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2-வது நாள் தேனீர் இடைவேளைக்கு சற்றுமுன் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - ஹர்திக் பாண்டியா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும் விராட் கோலி மறுமுனையில் அரைசதம் அடித்தார். 7-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 ரன்னுடனும், அஸ்வின் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கையில், இந்திய அணியின் துணைக் கேப்டன் ரகானே அளித்த பேட்டியின் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது. #ENGvIND #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரகானே பேட்டியளித்தார்.

    ரகானேயின் முழுப்பேட்டி பின்வருமாறு:-

    இங்கிலாந்து மண்ணில் விளையாடும்போது திறமையை விட, மனநிலைதான் மிகமிக முக்கியமானது. இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி மாறிக் கொள்வது, சூழ்நிலையை உடனடியாக கையாள்வது என்பதெல்லாம் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துதான் அமையும். ஆகவே, உங்களுடைய திறமையை பற்றி சிந்திப்பதை விட இது முக்கியமானது.

    எங்களை பொறுத்தவரையில் போட்டியின் முடிவைவிட, சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஏனென்றால், சில நேரத்தில் முடிவை நோக்கி நாம் சென்றால், அதுவே நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும். இந்த முறை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒவ்வொரு வீரர்களும் அவர்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே இதுபோன்ற சவால்கள் மற்றும் வெளிநாட்டு தொடரை மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன். என்னுடைய மனநிலை எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு டெஸட், ஒரு போட்டி என்ற நினைப்பில்தான் களம் இறங்குவேன். இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும். ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் இருக்கும். நியூசிலாந்தில் ஸ்விங் இருக்கும். இது எல்லோருக்கும் தெரியும். இந்த தொடரை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இங்கிலாந்தில் உள்ள சீதோசன நிலையில் கம்யூனிகேசன் மிகவும் முக்கியமானது. நீங்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது உங்களது பார்ட்னர் களத்தில் இருப்பார். அப்போது இருவரும் சிறந்த முறையில் பேசிக் கொள்ள வேண்டும்.

    யாராவது ஒரு பேட்ஸ்மேன் 70 அல்லது 80 ரன்கள் எடுத்திருக்கும்போது, சீதோசன நிலை மாறினால், அவர்கள் ரன்குவிப்பதை விட, நிலைத்து நின்று விளையாட முடிவு செய்ய வேண்டும். சூழ்நிலை மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஒரு பந்து வீச்சாளருக்கு ஒரு ஸ்பெல் சிறப்பாக அமைந்து விட்டால், அதன்பின் அந்த அணி சிறப்பான நிலையை எட்டிவிடும். பேட்டிங் யுனிட் அவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். இதை ஏற்றுக் கொள்வது முக்கியமானது.



    இங்கிலாந்தில் பொறுமை என்பதுதான் முக்கியமானது. இது வெதரை சார்ந்தது. சூரியன் நன்றாக பிரகாசித்தால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால், மேகமூட்டமாக காணப்பட்டால் பந்து வீச்சாளர்கள் அசத்துவார்கள்.

    தவான் மற்றும் புஜாரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இருவரும் குவாலிட்டி வீரர்கள். ஒரு இன்னிங்சில் விளையாடி விட்டால், அவர்களது ரிதத்தை பெற்று விடுவார்கள். நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம். இறுதியாக யார் யாருக்கெல்லாம் இடம் என்பதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர்தான் முடிவு செய்வார்கள்.

    யாரெல்லாம் விளையாடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அதேபோல் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரையும் மறந்து விடக்கூடாது. அவர்கள் நமக்காக டெஸ்ட் போட்டியில் அபாரமான சாதனைகளை படைத்துள்ளனர்.



    இங்கிலாந்து எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், அது பந்து வீச்சாளர்களுக்கு ஈசியாக இருக்கும் என்பது அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு பொறுமை தேவை. சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். இரண்டு முனைகளிலும் இருந்து விக்கெட் வீழ்த்த முயற்சி செய்வதை விட தங்களது சொந்த திறமை மீது உறுதியாக இருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது மூன்று போட்டிகளிலும் 60 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுபோல், இந்த தொடரிலும் ஒவ்வொரு போட்டியில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடரில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்துவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    அதேசமயத்தில் ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்திவிடக் கூடாது. அதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பந்து வீச்சு உலகின் தலைசிறந்தது என்று நம்ப வேண்டும்.



    எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். முகமது ஷமி, உமேஷ் யாதவ் 2014 தொடரில் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    எங்களது பந்து வீச்சால் எதிரணிக்கு கொடச்சல் கொடுக்க முடியும். ஆனால், பொறுமையாக, சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வது அவர்களுக்கு சவாலாக இருக்கும்.

    இவ்வாறு ரகானே கூறினார்.
    ×