என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Department"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.
    • இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    சென்னை:

    ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பிளாட்பாரக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது.

    இந்த உயர்வினை கைவிட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.

    இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    ரெயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரெயில்வே வாரியம் குறைத்தது. அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு இயக்கப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது.

    இதன்மூலம் பெர்த்துகளின் எண்ணிக்கை 936-ல் இருந்து 780 ஆக குறைந்தது. பெர்த்துகள் குறைக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் ரெயில்களில் சீட் கிடைக்காமல் அவதிக்கு ஆளானார்கள்.

    இதற்கான கண்டனத்தை ரெயில் பயணிகள் பதிவு செய்து வந்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிட்டு உள்ளது.

    இதற்கு பதிலாக அதே ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. தற்போது ரெயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

    இதற்கு காரணம் இவற்றின் டிக்கெட் விலை தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

    உதாரணமாக நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் கட்டணம் ரூ. 225. இதுவே ஏ.சி. 3 அடுக்கு பெட்டியில் பயணிக்க ரூ. 650 ஆகும். இது 3 மடங்கு அதிகமாகும்.

    இந்த முடிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, சில ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம், அதன் பிறகே இந்த முடிவு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

    ரெயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரெயில்வேயின் வருமானத்தை உயர்த்த வாரியம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரெயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரெயில்களும் வழக்கமான பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புறநகர் மின்சார ரெயில்களில் எந்த நேரமும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டது.

    நாடு முழுவதும் ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ரெயில் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு நிறுத்தபட்டிருந்தது. தொற்று பரவல் காரணமாக ரெயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது.

    தற்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வைத் தொடர்ந்து உணவு வழங்குவதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ரெயில்


    இதுகுறித்து இந்திய ரெயில்வே உணவு, சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.) ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு விநியோக சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


    ரெயிலில் டீ விற்பனை செய்ய பயன்படுத்தும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ என அச்சிடப்பட்டிருந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #SadaptiTrain #ChowkidarTeaCups
    புது டெல்லி:

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்கள் பெயர்களுக்கு  முன்  ‘சவுகிதார்’ என இணைத்தனர்.



    இதையடுத்து கடந்த வாரம் இந்தியன் ஏர்லைன்ஸ் அனுமதி சீட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்று, தேர்தலுக்கான விளம்பரம் மேற்கொண்டதைபோல் இருந்தது. இதனை விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து அந்நிறுவனம் இந்த டிக்கெட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

    இந்நிலையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ விற்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ எனும் வாசகம் அச்சிடப்பட்டிருந்ததாக, பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவைப் பார்த்த பலர், டீ கப்கள் மூலம் பிரசாரம் செய்வதாக கருத்து தெரிவித்தனர். அதிக எதிர்ப்பு எழுந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் அந்த டீ கப்களை தடை செய்துள்ளது.

    இது குறித்து ரெயில்வே நிர்வாகம் கூறுகையில், ‘இந்த செயல் இன்று நடைபெற்றதாக தகவல் அறிந்தவுடன், அந்த கப்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. அந்த கடையின் நிர்வாகி மீதும், காண்டிராக்டர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றார். #SadaptiTrain #ChowkidarTeaCups

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்கள் இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரெயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


    இது தொடர்பாக இந்திய ரெயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம்.ராகவய்யா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் ரெயில்வே ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் 1,161 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. எனவே 80 நாள் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் 78 நாள் சம்பளத்தை போனசாக பெறுவதற்கு ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.

    ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    ×