என் மலர்
நீங்கள் தேடியது "Rakul Preet Singh"
- எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
- ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங், தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் பேசுகிறார்கள். எப்போது திருமணம் நடந்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கூகுள் அலர்ட்ஸ் மூலம் அவை எனக்கு வந்து சேருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் என் திருமணம் நடந்து விட்டதாக தகவல் பரப்பினார்கள். அது எப்படி நடந்தது என்று அவர்களையே கேட்கவேண்டும் என நினைக்கிறேன். எதுவும் உண்மை இல்லை" என்றார். இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக ரகுல் பிரீத் சிங் கடந்த 2021-ல் அறிவித்தார். அப்போது இருந்தே இவர்கள் திருமணம் குறித்த தகவல் வலைத்தளத்தில் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்கள் ரகுல் பிரீத் சிங் கைவசம் உள்ளன.
- தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
- இவர் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ், சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் காதல் குறித்த கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, காதல் அளவற்ற ஒன்று, அதை உங்களால் விவரிக்க முடியாது. நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்கும்போது, நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். காதல் என்பது ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கக் கூடிய ஒன்று, இது ஒரு தோழமை, இருவரும் ஒருவருக்கொருவர் உதவி இருவரின் கனவுகளையும் எட்ட வேண்டும் என்று கூறினார்.
- சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார்.
- பட்டாசு வெடிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் என எனது தந்தை கூறினார்.
தமிழில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருந்தார்.
அவர் கூறும்போது 'சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்றார். அவர் சொன்னது சரி என்று தோன்றியது. அன்று முதல் இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை'' என்றார்.
இந்த பேச்சு வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் ரகுல் பிரீத் சிங்கை சாடி வசைபாடி வருகிறார்கள்.
விலை உயர்ந்த ஆடை அணிகிறீர்களே, சாதாரண உடை அணிந்து பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்வீர்களா? நீங்கள் விலை உயர்ந்த உணவு சாப்பிடாமல் சாதாரண உணவை சாப்பிடலாம் இல்லையா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
- இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அஜய் தேவ்கன் நடிக்கும் தி தி ப்யார் தி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சம்பவத்தை பற்றி பதிவிட்டு இருந்தார் அதில் அவர் " நான் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஜிம்மில் 80 கிலோ எடையை வைத்து டெட் லிஃப்ட் செய்தேன். அதை தூக்கும் பொழுது எனது கீழ் முதுகு தண்டில் சிரிய வலி ஏற்ப்பட்டது ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் அதை தூக்கினேன் அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. உடற்பயிற்சி முடித்த பிறகு நேராக ஷூட்டிங்கிற்கு சென்றேன். அன்று மாலை எனக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது என்னால் குணிந்து என் உடையைக்கூட அணிய முடியவில்லை. தசை பிடிப்பு தானே சரியாகிவிடும் என இருந்தேன். ஆனால் அக்டோபர் 10 ஆம் தேதி என் பிறந்தநாள் பார்ட்டிக்கு ரெடியாகி கொண்டிருக்கும் பொழுது திடீர் என் இடுப்பின் கீழ் உள்ள பகுதி என்னை விட்டு பிரிந்தது போல ஒரு உணர்வு. நான் மயங்கினேன். 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். நான் இன்னும் பூர்ண குணமடையவில்லை. நாட்கள் கடக்க கடக்க அது சரியாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே படங்களில் நடித்த் பிரபலமடைந்தவர் ரகுல்பிரீத் சிங்.
- தற்போது தனது காதல் குறித்து நடிகை ரகுல்பிரீத் சிங் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங் சமீபத்தில் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதாக பகிரங்கப்படுத்தினார்.

ரகுல்பிரீத் சிங்
தற்போது காதல் உறவு குறித்து ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ''சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஒருவித மனநிலை. ஆனால் நான் அப்படி இல்லை. காதலை வெளிப்படுத்தினேன். எனது வாழ்க்கையை இரட்டை வழியில் கொண்டு செல்ல விரும்பவில்லை. கேமரா முன் நடிக்கும்போது நிஜவாழ்க்கையில் நடிக்க தேவை இல்லை. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

ரகுல்பிரீத் சிங்
எல்லோருக்கும் வாழ்க்கையில் துணை முக்கியம். நானும், ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. பயத்தின் காரணமாக சில விஷயங்களை மறைத்து சிக்கலாக்குகின்றனர். எனக்கு பயம் இல்லாததால் காதலை மறைக்கவில்லை" என்றார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
- இவர் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். 'தடையற தாக்க' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து 'தேவ்' படத்தில் நடித்தவர், சூர்யாவுடன் 'என்.ஜி.கே' படத்திலும் நடித்தார்.

ரகுல் ப்ரீத் சிங்
தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கருத்துக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.
Filmfare 🖤 pic.twitter.com/cZ7jckBLcC
— Rakul Singh (@Rakulpreet) August 31, 2022
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.
- இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.

இந்தியன் 2
பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்
இந்நிலையில், 'இந்தியன்-2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளதாகவும் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏
— Suriya Sivakumar (@Suriya_offl) May 31, 2019


