என் மலர்
நீங்கள் தேடியது "Rangaswamy"
- புதுச்சேரியில் இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
- பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று 40வது இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவரும், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுசெயலாளருமான ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிவுடன் இணைந்து கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பொதுவாக விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது
* புதுச்சேரி முதலமைச்சர் மிகவும் எளிமையாக இருக்கிறார். பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் பராக் ஒபாமா கூடைப்பந்து வீரர். அவர் தினமும் தன்னுடைய விளையாட்டை விளையாடுவார்.
* நிர்வாகத்தில் எளிமையாகவும், எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருக்கக்கூடிய தலைவராக சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி.
* த.வெ.க. பற்றிய கேள்விக்கு no அரசியல் என்று கூறினார்.
- பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன்.
- தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெற போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இலக்கியச் செல்வர் என்று அனைவராலும் போற்றப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தையுமான குமரி அனந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.
சிறந்த தேசப் பற்றாளராக விளங்கிய அவர், நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த பற்று கொண்டு தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனிற்காகவும் பல அரும்பணிகளை ஆற்றிய அவர், தமிழில் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரிய குமரி அனந்தன், விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெறவும் போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.
தமிழுக்குத் தொண்டாற்றி பெரும் தமிழ்ப்பற்றாளராக விளங்கிய தகைசால் தமிழர் குமரி அனந்தன் அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
- மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்கவும், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை கடந்த 4 மாதங்களாக லே ஆப் கொடுத்து மூடிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை வாய்ப்பை இழந்து மிகவும் வறுமையில் வாடுகிறார்கள்.
எனவே, அரசே ஆலையை ஏற்று இயங்க செய்து, வேலையை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
மேலும், நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்கி, புதிய தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். ஆலையில் உள்ள ரூ.1 ½ கோடி மதிப்புள்ள நூல் பண்டல்களை விற்பனை செய்ய வேண்டும்.
நஷ்டத்தை குறைக்க தொழிலாளர்கள் புதிய வேலை பளுவை ஏற்கவும் தயாராக உள்ளனர். எனவே ஆலை புனரமைப்பிற்கு அரசு நிதி வழங்க வேண்டும்.
மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்கவும், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
உணவு விடுதியை திறக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஆலையை திறந்து இயக்க உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது செந்தில்குமார் எம்எல்ஏ, தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், ஸ்பின்கோ தொழிற்சங்க நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, ரமேஷ், ராஜாராம், வெங்கடகிருஷ்ணன், செல்வம், ராஜசேகர், ஆறுமுகம், நாகராஜ், ராமமூர்த்தி, சுப்புராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- புதுவை, தமிழக வணிகவரி துறை அதிகாரிகளுக்கு 2 வார புத்தாக்க பயிற்சி முகாம், ஆராய்ச்சி துறை கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது.
- மக்கள் மனம் கோணாமலும், சுமை தெரியாமலும் வரியை வசூலிக்க வேண்டும்.இன்னும் 3 மாத காலம் உள்ளது. அதற்குள் கூடுதலாக வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பதன் மூலம்தான் மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகளை செய்ய முடியும்.
புதுச்சேரி:
புதுவை, தமிழக வணிகவரி துறை அதிகாரிகளுக்கு 2 வார புத்தாக்க பயிற்சி முகாம், ஆராய்ச்சி துறை கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது.
புதுவை அரசின் வணிகவரித்துறை, மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை தேசிய சுங்கம், மறைமுக வரி, போதை பொருள் தடுப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் புதுவை வணிகவரித்துறை ஆணையர் ராஜசேகர் வரவேற்றார்.
சென்னை நிறுவன முதன்மை கூடுதல் இயக்குனர் உதயபாஸ்கர் தொடக்கவுரையாற்றினார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மத்திய அரசு கடந்தகாலத்தில் 70:30 என்ற விகிதத்தில் நிதி அளித்தது. தற்போது மத்திய அரசு வழங்கும் நிதி குறைந்துவிட்டது. மாநில அரசின் வருவாயை பெருக்கிக்கொள்ளுங்கள் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல ஆண்டாக புதுவையில் வரிகள் உயர்த்தப்படவில்லை.
மக்கள் மனம் கோணாமலும், சுமை தெரியாமலும் வரியை வசூலிக்க வேண்டும்.இன்னும் 3 மாத காலம் உள்ளது. அதற்குள் கூடுதலாக வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பதன் மூலம்தான் மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகளை செய்ய முடியும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அருண் பிரசாத் நன்றி கூறினார். விழாவில் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையர் பத்மஸ்ரீ, துணை இயக்குனர் அஜய்பிரசாத், வணிகவரித்துறை அதிகாரிகள், பயிற்சி நிறுவன அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் மோடி 20, அம்பேத்கரும், மோடியும் என்ற 2 புத்தக வெளியீட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
விழாவில் அரசு செயலர் வல்லவன் வரவேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுவை கவர்னர் தமிழிசை நூல்களை வெளியிட, முதல்-அமைச்சர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜீவ்வர்மா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை எல்லோரும் படிக்க முடியாது. எனவே நாமெல்லாம் படிப்பதற்காக தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளனர். 2001-ல் குஜராத் முதல்-அமைச்சராக மோடி இருந்தார். அப்போது நான் புதுவையின் முதல்-அமைச்சராக காங்கிரஸ் சார்பில் இருந்தேன்.
மத்திய அரசு சார்பில் நடந்த கூட்டங்களில் நானும், அவரும் பங்கேற்றுள்ளோம். கூட்டத்திற்கு வரும்போது மிக சாதாரணமாகவும், எளிமையாகவும் வருவார். தனக்கான நேரம் வரும்போது ஆணித்தரமாகவும், அச்சமின்றியும் பேசுவார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் நீங்கள் பிரதமராகி இதையெல்லாம் செய்யுங்கள் என சொல்வார்கள்.
13 ஆண்டுக்கு பிறகு அது நிறைவேறிவிட்டது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் செய்த திட்டங்கள், அவரை பிரதமராக உயர்த்தியுள்ளது. பிரதமராக உயர்ந்த பிறகும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துகிறார்.
இன்றைக்கு உலகிற்கே தலைமை தாங்கும் நாடாக இந்தியாவை கொண்டு வந்துள்ளார். அவரின் கடின உழைப்பு, பக்திதான் இதற்கு காரணம். குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் அவர் தொகுதியில்நான் பிரச்சாரம் செய்தேன்.
அடுத்து நடந்த மத்திய அரசு கூட்டத்தில் நான் பங்கேற்ற போது அதை சுட்டிக்காட்டி என் முதுகில் தட்டி உன் கட்சி வேலையை செய்தாய் என கூறினார்.
அவருக்கு என் மீது பிரியம் உண்டு. அவரை சந்திக்கும்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர் மாநில அந்தஸ்தை நிச்சயமாக வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன.
- 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.
உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.
196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.
- புயல் மழை எச்சரிக்கையையொட்டி புதுவை கடற்கரை பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
- ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புயல் மழை எச்சரிக்கையையொட்டி புதுவை கடற்கரை பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பால் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஊர் பஞ்சாயத்தார் உடனிருந்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, கடல் அரிப்பால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.
கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டும் பணி மீண்டும் தொடங்கும் என்று கூறினார்.
- மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்காலம், மழை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வா தாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
- புதுவை சட்டபையில் நடந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்காலம், மழை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வா தாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக பதிவு செய்தவர்களிடம் சந்தா தொகையாக ரூ.ஆயிரத்து 500 வசூலிக்கப்படும். இதற்கு 2 மடங்கு இணையாக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் பங்குத்தொகை சேர்த்து ரூ.4 ஆயிரத்து 500 வீதம் மீனவ பயனாளிக்கு வழங்கப்படும். இதன் முதல் பகுதியாக புதுவையை சேர்ந்த 30 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 175, காரைக்காலில் 17 சங்கத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 815, மாகியை சேர்ந்த 352, ஏனாமை சேர்ந்த 559 உறுப்பினர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 977 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 வீதம் ரூ.8 கோடியே 53 லட்சத்து 96 ஆயிரத்து 500 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுவை சட்டபையில் நடந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், கென்னடி, பாஸ்கர், லட்சுமிகாந்தன், செந்தில்குமார், மீன்வ ளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
- அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.
சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் குமார் வரவேற்றார்.
நமது வாழ்க்கையுடன் யோகக்கலை ஒன்றிணைந்து உள்ளது. யோகக் கலையானது அனைத்து நோய்களுக்கும் பிரதான மருந்தாக உள்ளதை அனுபவ ரீதியாகவே உணரமுடியும், இந்தக் கலையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளிலும் யோகக் கலையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். நமது கோவில்களில் இறைவன் யோக நிலையில் இருப்பதை காணலாம். மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவகளுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
- இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது.
- மாநாட்டில் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளுக்கு வினாடிவினா, கட்டுரை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது.
கொரோனாவுக்கு பிந்தையாக காலத்தில் விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் மாநாடு நடந்தது. மாநாட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார், பேராசிரியை கவிதா வாசுதேவன், உதவி பேராசிரியர் சுரேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள், சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். காசநோய், தட்டம்மை ஒழிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றாத நோய்கள், புகையிலை கட்டுப்பாடு, நோய்தடுப்பு சிகிச்சை உட்பல பல தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது. மாநாட்டில் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளுக்கு வினாடிவினா, கட்டுரை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டது. மாநாடை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
காய்ச்சல், தலைவலி என மருத்துவமனைக்கு செல்வோருக்கு அறுவை சிகிச்சை, விபத்து பிரிவு என பிரபலமான மருத்துவ பிரிவுகள் மட்டும்தான் தெரியும். ஆனால் சமூக மருத்துவம் என்ற பிரிவை பற்றி தெரியாது. இதற்காக மாநாடு நடத்துவது பாராட்டுக்குரியது.
நோய் வரும் முன் பாதுகாப்பதுதான் சமூக மருத்துவத்தின் முக்கிய பணி. நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. புதுவையில் 4 ஆயிரம் பேருக்கு ஒன்று உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகள் இன்றியமையாதது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, வீடுதேடி டாக்டர்கள் செல்ல வேண்டும் என கூறியிருந்தேன். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீதி, வீதியாக டாக்டர்களை நடக்கவிடுவதா? என கேட்டனர். மருத்துவம் என்பது சேவை.
சேவை செய்யத்தான் வந்துள்ளோம் என்பதை டாக்டர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வீடு, வீடாக மருத்துவம் செய்வதால் குறைந்துவிட மாட்டீர்கள்.
கிராமப்புறங்களில் பணியாற்றுவதை டாக்டர்கள் சங்கடமாக நினைக்கின்றனர்.
அதை யாரும் தவறாக நினைக்கக்கூடாது. கிராமப்புறங்களில் பணியாற்ற டாக்டர்கள் முன்வர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இங்கு 2 டாக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அங்கேயே சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும்.
இதற்காக அரசு அதிக அக்கறை எடுத்துள்ளது. இதேபோல மருத்துவக்கல்லூரி க்கு தேவையான பேராசிரி யர்களை நியமித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய, புதிய துறைகளை கல்லூரியில் தொடங்க முடியும். புதுவையில் மருத்துவ பல்கலைக்கழகம் அமையும்போது இதை எல்லோரும் பாராட்டு வார்கள். இந்தியளவில் மருத்துவ வசதி அதிகம் கிடைக்கும் இடமாக புதுவைக்கு விருது கிடைத்துள்ளது.
ஆனால் எனக்கு திருப்தியில்லை. இன்னும் சிறப்பான மருத்துவமும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
- இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்த 616 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை 16 ஆயிரத்து 769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவி த்தொகை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இம்மாதம் முதல் உதவித்தொகை பெற உள்ளனர். இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்த 616 ஆக உயர்ந்துள்ளது. முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திராநகர் தொகுதியில் புதிய பயனாளிகளுக்கு உதவித் தொகையை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், அரசு செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை முத்திரையர்பா ளையத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
- அரசு பள்ளி மாணவர்க ளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தோம். இத்திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பா ளையத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
உதவித் தொகை
புதுவையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். இம்மாதம் முதல் புதிதாக 16 ஆயிரத்து 769 பேர் உதவித்தொகை பெற உள்ளனர். சட்டசபையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.
அரசு பள்ளி மாணவர்க ளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தோம். இத்திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும். எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.
மாற்றுத்திறனா ளிகளுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட்டு பல துறைகளில் முதலிடத்தை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.