என் மலர்
நீங்கள் தேடியது "Rasam"
உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 4 டம்ளர்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
ரசப் பொடி செய்ய :
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பூண்டு - 2
தாளிக்க :
கடுகு,
உளுத்தம் பருப்பு,
வரமிளகாய் - 1,
கறிவேப்பிலை

செய்முறை :
சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.
இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.
இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.
சூப்பராக சிக்கன் எலும்பு ரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 4 டம்ளர்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
ரசப் பொடி செய்ய :
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பூண்டு - 2
தாளிக்க :
கடுகு,
உளுத்தம் பருப்பு,
வரமிளகாய் - 1,
கறிவேப்பிலை

செய்முறை :
சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.
இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.
இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.
சூப்பராக சிக்கன் எலும்பு ரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.
மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.
புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புதினா - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.
மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.
புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதிக உடல் எடை உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்,
புளி - 1 நெல்லியளவு,
சீரகம், மிளகு - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி, தூள்
பெருங்காயம் - 2 கிராம்,
பூண்டு - 6 பல்.

செய்முறை :
கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும்.
பூண்டை தட்டி வைக்கவும்.
நன்கு வெந்ததும், மேலும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். தண்ணீரில் கொள்ளு கரைந்து கெட்டியான கொள்ளுத்தண்ணீர் கிடைக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்த புளி கரைசலை சேர்க்கவும்.
அடுத்து அதில் பொடித்த மிளகு, சீரகம், தட்டி வைத்த பூண்டை போடவும்.
புளியின் பச்சை வாடை போனவுடன், கொள்ளுத் தண்ணீரை ஊற்றி கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நுரைத்து வரும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
சூப்பரான கொள்ளுரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொள்ளு - 1 கப்,
புளி - 1 நெல்லியளவு,
சீரகம், மிளகு - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி, தூள்
பெருங்காயம் - 2 கிராம்,
பூண்டு - 6 பல்.

செய்முறை :
கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும்.
பூண்டை தட்டி வைக்கவும்.
நன்கு வெந்ததும், மேலும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். தண்ணீரில் கொள்ளு கரைந்து கெட்டியான கொள்ளுத்தண்ணீர் கிடைக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்த புளி கரைசலை சேர்க்கவும்.
அடுத்து அதில் பொடித்த மிளகு, சீரகம், தட்டி வைத்த பூண்டை போடவும்.
புளியின் பச்சை வாடை போனவுடன், கொள்ளுத் தண்ணீரை ஊற்றி கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நுரைத்து வரும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
சூப்பரான கொள்ளுரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.
இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
துவரம்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.
இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.