என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCB"

    • பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது.
    • இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.

    பெங்களூரு:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

    லிவிங்ஸ்டன் 40 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 21 பந்தில் 33 ரன்னும் (5 பவுண் டரி, 1 சிக்சர்), டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய்கிஷோர் 2 விக்கெட்டும், அர்ஷத்கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 170 ரன் இலக்கை 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோஸ் பட்லர் 39 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 36 பந்தில் 49 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூதர் போர்டு 18 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், ஹாசல்ஹவுட்டுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன்கில் கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டுகிறேன். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது. இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.

    இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் வரை எடுக்கலாம்.அதே நேரத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றலாம். 7 முதல் 8 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கைக் கொடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றி பெற முடிந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக அமைந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு அணி முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறும்போது, '20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது' என்றார்.

    குஜராத் அணி 4 போட்டி யில் ஐதராபாத்தை 6-ந்தேதி எதிர்கொள்கிறது. பெங்களூரு அணி அடுத்த ஆட்டத்தில் மும்பையை 7-ந்தேதி சந்திக்கிறது.

    • ஆர்சிபி 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
    • லிவிங்ஸ்டன் 54 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 33 ரன்களும் அடித்தனர்.

    ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் இரண்டாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷத் கான் வீசிய பந்து லெக் சைடு தூக்கி அடிக்க முயன்ற விராட் கோலி பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 6 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி 13 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது

    அடுத்து பில் சால்ட் உடன் ரஜத் பட்டிதார் களம் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறினார்.

    பில் சால்ட் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய நிலையிலும் 14 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

    ரஜத் படிதார் 12 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதனால் 420க்கு 4 என இருந்த ஆர்சிபி 94-க்கு 5 என ஆகியது. சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த குருணால் பாண்ட்யா 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    7-ஆவது விக்கெட்டுக்கு லிவிங்ஸ்டன் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சித்த போதிலும் குஜராத் பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

    ஆர்சிபி 17 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்தது. 18-ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸ் கொடுக்க ஆர்சிபி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 3 சிக்சரையும் அடித்த லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.

    19-ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் முகமது சிராஜ் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 16 ரன்கள் விளாசிய டிம் டேவிட் கடைசி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • ஆர்சிபி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • சொந்த மைதானமான சின்னசாமியில் முதன்முறையாக விளையாடுகிறது.

    ஐபிஎல் 2025 சீசனின் 14-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி விவரம்:-

    பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால்.

    குஜராத் டைட்டன்ஸ்:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

    • பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் அமர்க்களமான தொடக்கம் கண்டுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை துவம்சம் செய்தது. அடுத்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    வெளியூரில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்து 'கெத்து' காட்டியிருக்கும் பெங்களூரு அணி சொந்த ஊரில் களம் காணும் முதல் ஆட்டத்திலும் தனது உத்வேகத்தை தொடர்ந்து 'ஹாட்ரிக்' வெற்றியை தன்வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதாரும், பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார், யாஷ் தயாள், குருணல் பாண்ட்யாவும் வலுசேர்க்கிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் 196 ரன்கள் எடுத்த குஜராத் அணி 160 ரன்னில் மும்பையை முடக்கியது.

    2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜோஸ்பட்லர், ரூதர்போர்டு ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இரு ஆட்டங்களிலும் அரைசதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார். பந்து வீச்சில் முகமது சிராஜ், கசிசோ ரபடா, ரஷித் கான், சாய் கிஷோர் மிரட்டக்கூடியவர்கள்.

    சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவானது என்பதால் ரன் வேட்டையை எதிர்பார்க்கலாம். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள்.

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் திவேதியா, ரஷித் கான், ரபடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கடைசி இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    • சென்னை 7-வது இடத்திலும், கொல்கத்தா கடைசி இடத்திலும் உள்ளது.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலையை இங்கு காணலாம்.

    2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும் உள்ளது.

    அடுத்த இடங்களில் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3-வது இடத்திலும், குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது. ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியுடன் பஞ்சாப் 5-வது இடத்தில் உள்ளது.

    6-வது இடத்தில் இருந்த கொல்கத்தா, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கடைசி இடத்தையும், 10-வது இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. சென்னை 7-வது இடத்திலும், ஐதராபாத் 8-வது இடத்திலும், ராஜஸ்தான் 9-வது இடத்திலும் உள்ளன.

    இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியருக்கான புளு நிற தொப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நூர் அகமதுவிடம் உள்ளது. அவர் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்டார்க் (2 போட்டி 8 விக்கெட்), கலீல் அகமது (3 போட்டி 6 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரனிடம் உள்ளது. அவர் 2 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சாய் சுதர்சன் 137, டிராவிஸ் ஹெட் 136 ஆகியோர் உள்ளனர்.

    • சி.எஸ்.கே. அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாவில் அதிக Follower-களை ஆர்.சி.பி. பெற்றது
    • எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி சி.எஸ்.கே. தான்.

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.

    அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

    அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.

    தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது.

    அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
    • பெங்களூரு அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்திய பெங்களூரு, 2 ஆவது போட்டியில் சென்னையை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.

    இப்போது 3 ஆவது போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது,. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.

    லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதாவது ஒரு போட்டி பெங்களூரில் அடுத்த போட்டி வெளியூரில் என ஆர்.சி.பி. அணி விளையாடும் போட்டிகளில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒருபோட்டி பெங்களூரில், அடுத்த வெளியூரில், மறுபடியும் பெங்களூரில் அடுத்தப்போட்டி வெளியூரில்.. இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.

    இதுபோன்ற ஒரு சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்.

    கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர். அணியை வீழ்த்தினார்கள். சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தினார்கள். தற்போது நல்ல ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதல் இடத்தில உள்ளது" என்று தெரிவித்தார்.

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியிருந்தது.
    • 2008-க்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

    ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும். ஆனால், பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கமாட்டார்கள்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமநிலையற்ற ஒரு அணியாகத்தான் திகழும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியை பார்க்கும்போது சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி உள்ளனர். அதன்பின் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் ஹெசில்வுட், புவி, யாஷ் தயால் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சீசன்களை விட தற்பேதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    கடந்த சீசன்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்சிபி அணிக்கு பேலன்ஸ் தேவை எனப் பேசியிருந்தேன். இது பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டர்களை பற்றியது கிடையாது. ஐபிஎல் அணிகள் மற்றும் ஆப்சன்களில் சமநிலையை கொண்டுள்ளது பற்றியது.

    நான் புவியை பார்த்தேன். அவர் விளையாட போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுபோன்ற அட்டகாசமான மாற்று வீரர்களைத்தான் அணி விரும்பும். முதல் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது போட்டியில் வேறொரு வீரருக்காக களம் இறக்கப்பட்டார். இதுபோன்ற பேலன்ஸ், பந்து வீச்சில் பலம் அணிக்கு தேவையானது. ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே சிறந்தது.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    • சென்னை அணிக்கு எதிராக ஜித்தேஷ் 12 ரன்கள் எடுத்தார்.
    • சென்னை என்றவுடன் தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் தான் நினைவுக்கு வரும் என போட்டிக்கு முன்னர் ஜித்தேஷ் கூறினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது களத்தில் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆகி வெளியே செல்லும் போது தோசை இட்லி சாம்பர் சட்னி என்ற பாடல் ஒலித்தது. இதனை கேட்டதும் ரசிகர்கள் ஆர்பரித்து அவரை கிண்டலடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ஆர்சிபி எடுத்த வீடியோவில் சென்னை என்றால் உங்களுக்கு நியாபகம் வருவது என்ன என்று கேள்வி எழுப்பிய போது இந்த பாடல் தான் எனக்கு நியாபகம் வரும் என ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார்.

    அதனால் தான் அவர் அவுட் ஆகி வரும் போது டிஜே இந்த பாடலை ஒலித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர்.

    ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆர்சிபி அணி சார்பில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஆட்டத்தின், 5வது ஓவரின்போது நூர் அகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.

    அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, கீப்பராக நின்றுருந்த டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார்.

    முன்னதாக, சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான ஆட்டத்தின்போது சூர்யா குமார் யாதவை இதேபோன்று டோனி அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றி தேவையாகும்.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    சென்னை அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. இதில் மும்பையை 155 ரன்னில் கட்டுப்படுத்திய சென்னை அணியினர் அந்த இலக்கை 5 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தனர். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவின் 4 விக்கெட் அறுவடையும், ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் வெற்றியை எளிதாக்கின. அதே உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் டோனி முதலாவது ஆட்டத்தில் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை சுழற்றுவதை பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் தூக்கலாகவே இருக்கும். அதனால் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட்டும், விராட் கோலியும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா (3 விக்கெட்), ஹேசில்வுட் (2 விக்கெட்) கலக்கினர். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு உகந்தது என்பதால் நூர் அகமது, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்வதை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் வேகம் அமையும். மும்பைக்கு எதிராக இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினர். அதனால் இந்த விஷயத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் அதிக விழிப்போடு இருப்பார்கள். குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா ஆகியோருடன் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக மொகித் ரதீயை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் உடல்தகுதியை பெற்றால் அது பெங்களூருவின் பந்து வீச்சை வலுப்படுத்தும்.

    பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் நேநற்று நிருபர்களிடம் கூறுகையில், 'விராட் கோலி, சமீபத்தில் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். சுழற்பந்து வீச்சில் ஆடாமல் எப்படி அதிக ரன் எடுத்திருக்க முடியும். அவர் நல்ல நிலையில் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். இப்போது கூட தனது பேட்டிங் நுணுக்கத்தில் மேலும் ஒரு ஷாட்டை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதை பார்த்தேன்.

    அவர் தொடர்ந்து தனது ஆட்டத்திறனை மேம்படுத்த விரும்புகிறார். எப்போதும் போலவே சாதிக்கும் வேட்கையுடன் உள்ளார். உண்மையிலேயே அவர் சிறப்பு வாய்ந்த ஒரு வீரர்' என்று குறிப்பிட்டார்.

    ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. கடந்த சீசனில் சென்னை அணி பெங்களூருவில் நடந்த லீக்கில் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்றதால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அதற்கு பழிதீர்க்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.

    மொத்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. அதனால் மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பும், விசில் சத்தமும் சென்னை வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், நாதன் எலிஸ் அல்லது பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது.

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் அல்லது மொகித் ரதீ, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் அல்லது புவனேஷ்வர்குமார் அல்லது ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ரசிகர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ்களை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.

    எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.

    இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×