என் மலர்
நீங்கள் தேடியது "Reliance"
ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் விவாதத்தை ஒளிபரப்பிய ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #Rafale #Reliance
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே இன்று குறிப்பிட்டுள்ளார். #Rafaledeal
பாரிஸ்:
ரபேல் பேர ஊழலில் பிரதமர் மோடியின் நண்பருக்கு நேரடியாக 1.30 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பு ஒன்றையும் தனது டுவிட்டர் பதிவில் ராகுல் காந்தி இணைத்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானம் தயாரிக்கும் நிறுவனம் கேட்டு கொண்டதால் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே இன்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.
இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது கருத்து தொடர்பாக பரிசீலித்து வருவதாக ராணுவ அமைச்சகம் இன்றிரவு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி இன்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயல்பட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு துரோகம் செய்ததுடன், நாட்டுக்காக நமது ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தத்தையும் அவர் அவமதித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Rafaledeal #rahulgandhi #pmmodi #FrancoisHollande
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முகேஷ் அம்பானி இன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் இந்த பதவியில் அவர் நீடிப்பார். #Reliance #MukeshAmbani
மும்பை:
இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான திருபாய் அம்பானி கடந்த 2002-ம் ஆண்டு காலமானார்.
அவரது மறைவுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி ஏற்று கொண்டார்.
உரத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட தொழில்களை வெற்றிகரமாக நிர்வகித்துவரும் ரிலையன்ஸ் குழுமம் தொலைத்தொடர்பு துறையிலும் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த குழுமத்தின் பங்குதாரர்களின் 41-வது ஆண்டாந்திர கூட்டம் கடந்த 5-ம் தேதி மும்பையில் நடைபெற்றது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் பதவிக்காலம் வரும் 19-4-2019 அன்றுடன் முடிவடையும் நிலையில், அவரையே மீண்டும் தலைவராக நியமிக்க கோரும் தீர்மானம் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஆதரித்து 98.5 சதவீதம் பங்குதாரர்களும், எதிராக 1.48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
இதையடுத்து, மேலும் ஐந்தாண்டு காலத்துக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவராக முகேஷ் அம்பானி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சுமார் 59 லட்சம் ரூபாய் அளவிலான இதரப் படிகளுடன் அவர் இந்த பதவியில் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Reliance #MukeshAmbani
இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான திருபாய் அம்பானி கடந்த 2002-ம் ஆண்டு காலமானார்.
அவரது மறைவுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி ஏற்று கொண்டார்.
உரத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட தொழில்களை வெற்றிகரமாக நிர்வகித்துவரும் ரிலையன்ஸ் குழுமம் தொலைத்தொடர்பு துறையிலும் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த குழுமத்தின் பங்குதாரர்களின் 41-வது ஆண்டாந்திர கூட்டம் கடந்த 5-ம் தேதி மும்பையில் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து 98.5 சதவீதம் பங்குதாரர்களும், எதிராக 1.48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
இதையடுத்து, மேலும் ஐந்தாண்டு காலத்துக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவராக முகேஷ் அம்பானி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சுமார் 59 லட்சம் ரூபாய் அளவிலான இதரப் படிகளுடன் அவர் இந்த பதவியில் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Reliance #MukeshAmbani
மும்பையில் நடைபெற்ற வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.42,553 கோடி செலுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். #MukeshAmbani
மும்பை :
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உலகின் 19-வது பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளதாவது :-
“ஜியோ தொடங்கப்பட்ட 22 மாதங்களில் 21 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இதோடு நிற்காமால் பல்வேறு சலுகைகளை சாமானிய மக்களுக்கு ஜியோ வழங்க உள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரத்து 999 மதிப்புடைய ஜியோ போன் 2 சந்தைப்படுத்தப்படுகிறது.
ஜியோ ஜிகா பைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற பைபர் கேபிள் இணைப்புடன் கூடிய புதிய ப்ராட்பேண்ட் சேவை ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தைப்படுத்தப்படும். இதன்மூலம் 1100 நகரங்களில் உள்ள வீடுகள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு உயர்தர இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் கிராமங்களை சீர்திருத்தும் முயற்சியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 15 மாநிலங்களில் உள்ள 13 ஆயிரத்து 550 கிராமங்களில் உள்ள சந்தைகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியாக ரூ.42 ஆயிரத்து 553 கோடி செலுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 20.6 சதவிகதம் அதிகரித்து 36 ஆயிரத்து 75 கோடியாக உள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார். #MukeshAmbani
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உலகின் 19-வது பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளதாவது :-
“ஜியோ தொடங்கப்பட்ட 22 மாதங்களில் 21 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இதோடு நிற்காமால் பல்வேறு சலுகைகளை சாமானிய மக்களுக்கு ஜியோ வழங்க உள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரத்து 999 மதிப்புடைய ஜியோ போன் 2 சந்தைப்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே சந்தையில் உள்ள ஜியோ 1 போனில் இல்லாத வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஜியோ போன் 2 இருக்கும். தங்களிடம் உள்ள பழைய போன்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து அதனுடன் 501 செலுத்தி ஜியோ போன் 2-வை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். குறுகிய காலத்தில் 10 கோடி ஜியோ போன் வாடிக்கையாளர்களை ஈர்த்து மேலும் ஒரு சாதனை படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஜிகா பைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற பைபர் கேபிள் இணைப்புடன் கூடிய புதிய ப்ராட்பேண்ட் சேவை ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தைப்படுத்தப்படும். இதன்மூலம் 1100 நகரங்களில் உள்ள வீடுகள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு உயர்தர இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் கிராமங்களை சீர்திருத்தும் முயற்சியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 15 மாநிலங்களில் உள்ள 13 ஆயிரத்து 550 கிராமங்களில் உள்ள சந்தைகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியாக ரூ.42 ஆயிரத்து 553 கோடி செலுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 20.6 சதவிகதம் அதிகரித்து 36 ஆயிரத்து 75 கோடியாக உள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார். #MukeshAmbani