என் மலர்
நீங்கள் தேடியது "robots"
- அரசு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- பல்வேறு ஓட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
பெங்களூரு:
மனிதனது மேம்பட்ட அறிவுத்திறனின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு தான் ரோபோ. இன்றைய கால கட்டத்தில் மனிதனுக்கு போட்டியாக ரோபோக்கள் உருவெடுத்துள்ளன. மனிதர்களை போல் அல்லாமல், ரோபோக்கள் சலிப்படையாது. மனிதர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்களில் ரோபோக்கள் வேலை செய்ய முடியும். மனிதர்களைப் போன்ற சுற்றுச்சூழல் தேவைகள் ரோபோக்களுக்கு இல்லை. ரோபோக்களுக்கு மனிதர்களை விட அதிக திறன் கொண்ட சில சென்சார்கள், ஆக்சுவேட்டர்கள் உள்ளன. நம்முடைய வேலைகளை நம்மை விட வேகமாகவும், குறைந்த செலவிலும் முடித்து விடுவதால் ரோபோக்களை விரும்புகின்றனர். சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. பராமரிப்பு செலவு மட்டும் தான்.
இதனால் கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பணிப்பெண்களுக்கு பதிலாக ரோபோக்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
7 மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் ஹெப்பலில் வசிக்கும் மனிஷா ராய் (வயது 35) என்ற பெண் தனது சமையல்காரருக்கு பதிலாக ஒரு சமையலறை ரோபோவை வாங்கினார். இப்போது நன்றாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ரோபோ வந்ததிலிருந்து எனது கணவர் நவீன் மற்றும் 2½ வயது மகள் நட்ஷித்ரா, ரோபோ தயாரித்த உணவை ருசிக்கிறார்கள். "எனது சமையலறை ரோபோ நறுக்கவும், வதக்கவும், வறுக்கவும், கிளறவும், ஆவியில் வேகவைக்கவும், பிசையவும் செய்கிறது. " நான் செல்போனை பயன்படுத்தி ரோபோவை இயக்குகிறேன். பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ரோபோவை பயன்படுத்த வேண்டும். ரோபோ காய்கறிகளை வெட்டுவது அல்லது வறுப்பது போன்ற பணிகளைச் செய்யும்போது நான் அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சமைக்கும் போது ரோபோ பல பணிகளை செய்ய அனுமதிக்கிறது என்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மீரா வாசுதேவ் என்ற பெண் 2 வகையான ரோபோக்களைப் பயன்படுத்துகிறார். நீங்கள் ஒரு துடைப்பத்தைப் பயன்படுத்தும்போது குனிய வேண்டியதில்லை. ஒரு துடைப்பத்தால் எடுக்க முடியாத மெல்லிய தூசியையும் அவை எடுத்துக்கொள்கின்றன என கூறினார்.

கோரமங்கலாவை சேர்ந்த 43 வயதான ரேணுகா குருநாதன் என்ற பெண் பாத்திரங்கழுவி மற்றும் தரையை சுத்தம் செய்யும் ரோபோ பயன்படுத்தி வருகிறார். அன்றாட வாழ்க்கைக்கு வெளியாட்களைச் சார்ந்து இருக்காமல் இருப்பது உண்மையிலேயே ஒரு விடுதலையான அனுபவம் என கூறினார்.
உயிரியல் அறிவியலில் முதுகலைப் பட்டதாரி மனிஷா கூறுகையில் "நான் என் வீட்டின் உதவியாளருக்கு மாதம் ரூ.2,500 சம்பளம் கொடுத்தேன். நான் ஒரு ரோபோ வாங்கியுள்ளேன். இப்போது நான் நிறைய சேமித்து வருகிறேன். வருடத்திற்கு ரூ.9,000 வரை," சேமிக்கிறேன். சமையல் ரோபோ வாங்க சுமார் ரூ.40,000 செலவாகும் என்றார்.
இதைத்தவிர அரசு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் கெம்பேகவுடா பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் ஒன்று. அங்கு பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் அந்த விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் கடந்த ஆண்டு முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுதவிர பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தென் இந்தியாவில் அதிகளவில் பெங்களூருவில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தம்பதிகள் ரோபோக்கள் மூலம் தங்களுக்கு தேவையான சமையலை செய்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். இதனால் வெளியாட்கள் இல்லாமல் அவர்கள் அன்றாட தேவையை நிறைவேற்றி கொள்கிறார்கள்.
புடாபெஸ்ட்:
ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஓட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுகிறது. வேண்டிய பானங்கள் மற்றும் தண்ணீரை சப்ளை செய்கிறது.
ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.
இதனால் ஓட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘ரோபோக்’களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது.
அதற்கு பதில் அளித்த ஓட்டல் நிர்வாகம் பணி புரியும் ‘ரோபோ’க்களை இயக்க தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது. 3 மாத சோதனைக்கு பிறகு அதை நிரந்தரமாக செயல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பயணிகள் பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விமான சேவை மையம் செயல்பட்டது.

அதற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தில் ரோபோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து 2 ரோபோக்கள் பரிசோதனைக்காக 3 மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்டு உள்ளன.
அந்த ரோபோக்கள் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் நேற்று சுதந்திர தினவிழா என்பதால் அந்த ரோபோக்கள் மூலம் விமான நிலையம் வரும் பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்க அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இதை தொடங்கி வைத்தனர். அந்த ரோபோக்கள் விமான நிலையம் வந்த மாணவ-மாணவிகள், குழந்தைகள், பயணிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தது.
இதை கண்டு மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு ரோபோக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-
தற்போது அந்த ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விமானத்தில் செல்ல எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும். விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.
இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.
இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்ய ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
