என் மலர்
நீங்கள் தேடியது "Rohingya"
- பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோர் குறிவைக்கப்படக்கூடாது.
- சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வன்தேசத்தினருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளருமான சாம் பிட்ரோடா பேசியுள்ளார். பாஜகவினர் இந்த கருத்தை சர்ச்சையாகி வருகின்றனர்.
பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விவகாரம் அரசியல் களத்தில் துருப்புசீட்டாக மாறிவருகிறது.
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் தலைநகரை சட்டவிரோத வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகளிடம் இருந்து விடுவிப்போம் என பாஜக வாக்குறுதியில் தெரிவித்துள்ள்ளது. வங்கதேசத்தினருக்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆம் ஆத்மி பெற்றுத்தந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் சாம் பிட்ரோடா பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைப்பதை விட்டுவிட்டு காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அவர்கள் [ புல்மேபியர்ந்தோர் ] இங்கு வர மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தது தவறுதான். ஆனால் நாம் வங்கதேசத்தினறையும், சிறுபான்மையினரையும் குறிவைப்பதில் மட்டுமே தீவிரமாக உள்ளோம்.
எல்லோரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதனால் நாம் சில சிரமங்களுக்கு உள்ளானாலும் அதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. நாம் நமது வளங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது கிடையாது. அவர்கள் தங்கள் வயிற்றை நிரைப்பிகொள்ளத்தான் வழி தேடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து பாஜக வாய்க்கு அவலாக மாறியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, சட்டவிரோதமான குடியேறிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியின் வலது கை சாம் பிட்ரோடா கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ், நமது நாட்டில் சட்டவிரோதமானவர்களைக் குடியமர்த்துவதற்கு எப்படி ஓவர் டைம் வேலை செய்தது என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா! என்று குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ரோகிங்கியா முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து தங்கியிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகமையின் தரவுகளின்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் ரோகிங்கியா முஸ்லிம்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த அகதிகள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என இந்திய அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் 7 பேர் கடந்த ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது மியான்மரின் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஐநா அகதிகள் முகமையின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “அடைக்கலம் கேட்டுள்ள ரோகிங்கியா முஸ்லிம்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு 2013ம் ஆண்டில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் இப்போது நாடு கடத்தப்பட்டிருப்பதாக ஐநா அகதிகள் முகமை கூறியுள்ளது.
“தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா அகதிகளை சந்தித்து, அவர்களின் சூழ்நிலைகளை அறிந்துகொள்ளவும், தாய் நாட்டிற்கு திரும்புவது தொடர்பான அவர்களின் விருப்பத்தை கேட்கவும் அனுமதிக்கும்படி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், இந்திய அதிகாரிகளிடம் இருந்து பதில் வரவில்லை. அகதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும். மேலும், எந்த சூழ்நிலைகளில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என ஐநா அகதிகள் முகமை வலியுறுத்தி உள்ளது. #UNHCR #RohingyaRefugees
பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அந்நாட்டில் உள்ள ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிங்ய இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது.
பௌத்தர்களால் ரோகிங்யா இனத்தவர்கள் குறிவைத்துப் தாக்குதல் மற்றும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு பெரும்பாலான ரோகிங்யா மக்கள் அகதிகளாகப் படையெடுத்தனர்.
அவ்வாறு அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு வந்த ரோகிங்கிய அகதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அங்காங்கே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், 18 ஆயிரம் ரோகிங்கிய அகதிகள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கியா நாடுகள் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கியா நாடுகள் அகதிகள் முகமையில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கைது நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வசித்து வந்த ரோகிங்யா அகதிகள் 7 பேர் மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #UNHCR #Rohingya

மியான்மர் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது அங்கிருந்து வெளிவந்த ரோஹிங்கியா இன மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் ஐதராபாத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை போன்ற அடையாள அட்டைகளை பெற்ற ஒரு பெண் உட்பட 3 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் போலி ஆவணங்களை பெற்று அடையாள அட்டைகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதான ரோஹிங்கியாக்கள், அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #RohingyaRefugees