என் மலர்
நீங்கள் தேடியது "RTI"
2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13.46 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MinistryofRailways #RTI
மும்பை:
மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரெயில்வே துறையின் செலவு குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரெயில்வே அமைச்சகம், பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13 கோடியே 46 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய ரெயில் பெட்டிகளின் துவக்க விழா, ரெயில் நிலையங்களில் புதிய பகுதி, கழிவறைகள் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.
காணொளி காட்சிக்கான கேபிள்கள் அமைப்பதிலும், மேடை, எல்.யி.டி. திரை போன்ற பலவற்றுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் சுரேஷ் பிரபு ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MinistryofRailways #RTI
மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரெயில்வே துறையின் செலவு குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரெயில்வே அமைச்சகம், பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13 கோடியே 46 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய ரெயில் பெட்டிகளின் துவக்க விழா, ரெயில் நிலையங்களில் புதிய பகுதி, கழிவறைகள் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.
காணொளி காட்சிக்கான கேபிள்கள் அமைப்பதிலும், மேடை, எல்.யி.டி. திரை போன்ற பலவற்றுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் சுரேஷ் பிரபு ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MinistryofRailways #RTI
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக பெறப்படும் பிரதிகளுக்கான விலையில் 36 ரூபாய்க்கு 7 ரூபாய் ஜி.எஸ்.டி. வரி சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. #GSTforRTI
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான அஜய் துபே என்பவர் அம்மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை முகமை அலுவலக கட்டுமானப்பணிகளுக்கு ஆன செலவினங்களின் மொத்த தொகை எவ்வளவு? என்பதை அறிந்துகொள்ள விரும்பி, தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக இதற்காக மனு செய்தார்.
அவருக்கான பதிலாக 18 பக்கங்களை கொண்ட செலவு கணக்கு அளிக்கப்பட்டது. இதற்காக ஒரு பக்கத்துக்கான ஜெராக்ஸ் கட்டணமாக 2 ரூபாய் என்ற விகிதத்தில் 18 பக்கங்களுக்கு 36 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டது.
மேலும், இந்த 36 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும் சேர்த்து மொத்தம் 43 ரூபாய் செலுத்த வேண்டும் என அம்மாநில தகவல் அறியும் உரிமை ஆணையாளர் அலுவகம் தெரிவித்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுநன்மைக்காக தகவல் அறியும் சட்டம் மூலம் சில விபரங்களை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக மேலிடத்தில் முறையீடு செய்யப்போவதாக மனுதாரரான அஜய் துபே குறிப்பிட்டுள்ளார். #GSTforRTI #GSTforinformation
மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான அஜய் துபே என்பவர் அம்மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை முகமை அலுவலக கட்டுமானப்பணிகளுக்கு ஆன செலவினங்களின் மொத்த தொகை எவ்வளவு? என்பதை அறிந்துகொள்ள விரும்பி, தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக இதற்காக மனு செய்தார்.
அவருக்கான பதிலாக 18 பக்கங்களை கொண்ட செலவு கணக்கு அளிக்கப்பட்டது. இதற்காக ஒரு பக்கத்துக்கான ஜெராக்ஸ் கட்டணமாக 2 ரூபாய் என்ற விகிதத்தில் 18 பக்கங்களுக்கு 36 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டது.
மேலும், இந்த 36 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும் சேர்த்து மொத்தம் 43 ரூபாய் செலுத்த வேண்டும் என அம்மாநில தகவல் அறியும் உரிமை ஆணையாளர் அலுவகம் தெரிவித்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுநன்மைக்காக தகவல் அறியும் சட்டம் மூலம் சில விபரங்களை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக மேலிடத்தில் முறையீடு செய்யப்போவதாக மனுதாரரான அஜய் துபே குறிப்பிட்டுள்ளார். #GSTforRTI #GSTforinformation
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எந்த திட்டமும் முடிக்கப்படவில்லை எனவும், 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவே இல்லை என்றும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. #AIIMS
புதுடெல்லி:
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மத்தியில ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014-15, 2015-16 மற்றும் 2017-18 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை என்றே தெரிகிறது.
குறிப்பாக 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஆர்.டி.ஐ. தகவல் மூலம் பெற்றுள்ள தகவலில், தமிழகத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனையை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையை கட்டிமுடிக்க அமைச்சரவையின் காலக்கெடு இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் சார்பில் 20-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே மத்திய அமைச்சகத்திடம் இருந்து பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் 21-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பிற மாநிலங்களில் திட்டத்தை முன்னெடுக்க ஆகும் தொகை எவ்வளவு? வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 1000 கோடிக்கும் அதிகமான செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக பட்சமாக ரூ. 278.42 கோடி மேற்கு வங்காளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்யாணியில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ரூ. 1,754 கோடி செலவில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் ரூ. 278.42 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை 2020-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்விவகாரத்தில் பணிகள் துரிதமாக நடைபெற்றால் மட்டுமே திட்டமிட்டப்படி மருத்துவமனையை கட்டியமைக்க முடியும். இதேபோன்றுதான் பிற மாநிலங்களுக்கான அறிவிப்பும் உள்ளது. பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் மருத்துவமனை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை எனவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற ஆர்.டி.ஐ கேள்விக்கு, அதற்கான ஆவணங்களை பராமரிக்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MEA #RTI
புதுடெல்லி:
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையராக இருந்தவருமான ஷைலேஷ் காந்தி, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்திற்கு சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் கேட்டிருந்தார்.
அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் எத்தனை?, அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு?, தனியார் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மேற்கொண்டால், அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு? ஆகிய கேள்விகளை ஷைலேஷ் காந்தி கேட்டிருந்தார்.
மேற்கண்ட கேள்விகளுக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அதிகாரி கடந்த 15-ம் தேதி பதில்களை அனுப்பியுள்ளார். அதில், பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை எனவும் மற்ற கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதியை சுட்டிக்காட்டி பதில் தெரிவிக்க முடியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களின் ரகசியம் பாதிக்கப்படும் என்றாலோ, பொதுமக்களின் தகவல்கள் கசியும் என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதிலளிக்க தேவையில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அவ்வாறு பதிலளித்துள்ளது.
மாறாக, கடந்த 2015-ம் ஆண்டு மனோரஞ்சன் ராய் என்பவர் 2012 முதல் 2013 வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களுக்கு, 2012-ல் 73,89,558 பாஸ்போர்ட்கள் மற்றும் 2013-ல் 58,17,515 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் முறையான பதிலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.