என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rukmini"

    • கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
    • ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.

    கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமை யாக்கிக்கொள்ள நினைத்தாள்.

    இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாக வில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.

    அப்போது தராசு சமமாகியது. கண்ணன், புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந் திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மையான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

    பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் மூலம் மிகவும் பிரபலமான ருக்மிணியின் பரத நாட்டியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. #Rukmini
    பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் நடித்தவர் ருக்மிணி. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

    லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' என்ற அரங்கில் உலகின் தலைசிறந்த டான்சர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணி அங்கே நடனமாடினார்.



    பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாக கொரியோகிராபி செய்து நடனமாடியிருந்தார். ருக்மிணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள். சென்ற வருடம் சிறந்த நடனத்தை கொடுத்ததற்காக நெதர்லாந்தின் கவுரவ குடியுரிமையும் கொடுக்கப்போகிறார்கள்.

    ×