என் மலர்
நீங்கள் தேடியது "SC ST Act"
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதேசமயம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 25-ம் தேதி இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, விரைவில் அனைத்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து தனி அமர்வில் விசாரிப்பதற்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், எஸ்சி,எஸ்டி சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், தடை விதிக்க மீண்டும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும், மத்திய அரசின் சீராய்வு மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் பிப்ரவரி 19-ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #SCSTAct #SC
நாடு முழுவதும் தலித் பிரிவினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.
அந்தவகையில் கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் 40,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 28.4 சதவீத வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38,510 வழக்குகளில் 27.2 சதவீத வழக்குகளிலும், 2016-ம் ஆண்டு பதிவான 40,718 வழக்குகளில் 25.8 சதவீத வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், போதிய சாட்சியம் இல்லாமை, இருக்கும் சாட்சியங்களும் பல்டியடிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.