என் மலர்
நீங்கள் தேடியது "scrub"
- முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
- முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்யணும்... என்ன செய்யக்கூடாது என்று தெரியுங்களா? இன்றைய காலத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்கும் முகத்தை காண்பது என்பது அரிதானது.
அவற்றை நீக்குவதற்கு என்னதான் அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தாலும், சருமத்தில் இருந்து அவை முழுவதும் நீங்கிவிடுவதில்லை. மேலும் எவ்வளவு தான் விலை உயர்ந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தினாலும், இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைக்க பல நாட்கள் ஆகின்றன.
எனவே அழகான முகத்தை இரண்டே நாட்களில் பெறுவதற்கு சில அழகான டிப்ஸ் இருக்கிறது. முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும்.
இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்துவிடும். ஆகவே குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அதிலும் அந்த துணியை சூடான நீரில் நனைத்து பிழிந்து, பின் துடைக்க வேண்டும். மேலும் அவ்வாறு செய்யும் போது, அந்த துணியை நீரில் நனைத்து பிழிந்ததும் முகத்தில் வைத்து, ஒரு நிமிடம் வைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் செய்தது போல் இருக்கும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால், 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது, அப்போது சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.
கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக்கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம்.
சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க, வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சர்க்கரை ஸ்கரப் மிகவும் சிறந்தது. அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்தால், முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாவதோடு சருமத்தின் நிறம் கூடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு - 6 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
ஒரு பௌலில் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வட்டமாக மசாஜ் செய்யவும். சர்க்கரை கரையும் அளவிற்கு முகத்தில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்து முடித்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். கரும்புள்ளிகள் மற்றும் கருமை நிறத்தை போக்க இந்த ஸ்க்ரப் செய்யலாம்.
* தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள வறண்ட செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்கிவிடும்.
தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரபை முகத்தில் 10 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து முடித்தபின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.
சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.
தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.