என் மலர்
நீங்கள் தேடியது "Seenu Ramasamy"
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'.
- இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.

இடம் பொருள் ஏவல்
இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது.

இடம் பொருள் ஏவல்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈரக்காற்றே வீசு என்ற பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
- சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
- சமீபத்தில் இதில் தனியார் ஊழியர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனுராமசாமி
அண்மையில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து மாங்காட்டில் தனியார் நிறுவன ஊழியர் இதே போல் தவறி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு தொடர் விபத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்துகள் குறித்து இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சீனுராமசாமி
அதில், "நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். முழு நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி -ஹீராபென்
இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து இயக்குனர் சீனுராம்சாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு. பாசத்தில் நிகரற்றது. எந்நேரமும் தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான். மாண்புமிகு பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.
இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு.
— Seenu Ramasamy (@seenuramasamy) December 28, 2022
பாசத்தில்
நிகரற்றது.
எந்நேரமும் தாயின் கவலை
பிள்ளையின்
உணவு பற்றியது
தான்.
மாண்புமிகு
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள்
விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.@PMOIndia pic.twitter.com/kLVqOsrTIx
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாமனிதன்’.
- இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

மாமனிதன்
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாமனிதன்
இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகி, சிறந்த எடிட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சாதனையாளர் என நான்கு விருதுகளை வென்றுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் M.சுகுமார்
— Seenu Ramasamy (@seenuramasamy) December 29, 2022
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்
நாயகி காயத்ரி சங்கர்
தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா
இவ்விருதாளர்களுக்கு
அன்பின்
வாழ்த்துகள்.@thisisysr @YSRfilms @VijaySethuOffl @SGayathrie @sreekar_prasad @mynnasukumar @onlynikil @Riyaz_Ctc #Maamanithan on @ahatamil https://t.co/2JCQY8iw5U
- 'மாமனிதன்' திரைப்படம் தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
- இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.

யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.
- இப்படம் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.

மாமனிதன்
யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சமீபத்தில் இப்படம் 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றது. இதையடுத்து 56-வது ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 25 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இதில் 'மாமனிதன்' திரைப்படம் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மாமனிதன்
மேலும், அந்த பதிவில், "இதில் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா. பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும் அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடல் நான் இருப்பதனால் Meastro கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதில் @ilaiyaraaja
— Seenu Ramasamy (@seenuramasamy) March 3, 2023
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா
பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும்
அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடல் நான் இருப்பதனால்
Meastro கலந்து கொள்ள வேண்டுகிறேன். https://t.co/shE3NrE7yr
- புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
- இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்பட்டது.

சீனு ராமசாமி
இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விசயம் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர்.
— Seenu Ramasamy (@seenuramasamy) May 27, 2023
இன்று இந்தியாவின் புதிய
பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம்
செங்கோலை
போற்றும்
பிரதமர் @narendramodi
அவர்களே
உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்
பெரிய விசயம் ?
- சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கூடல் நகர் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் இப்படம் குவித்தது.

சீனு ராமசாமி
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்றை இணைத்து அவர் பதிட்டிருப்பது,
மேடைக்
கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்
இவரை வியந்தேன்
நெகிழ்ச்சியாகவும்
இருந்தது,
இந்த பாடலை நீங்கள் கேட்டு
ருப்பீர்கள்
இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு
பாடி நம் இதயத்தை கனக்கச்
செய்கிறார் அவர்
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..
துன்பம்
சுவையாக மாறுகிறது
அதை இனிப்போடு நாம்
எதிர்கொண்டால் என்பதை இவர்
பாடிய விதத்தை
காணுங்கால்
அறியலாம்.
குரு வணக்கம்
தேச வணக்கம்
சொல்லி முடிகிறது
கணீர் கச்சேரி
என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
மேடைக்
— Seenu Ramasamy (@seenuramasamy) May 29, 2023
கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்
இவரை வியந்தேன்
நெகிழ்ச்சியாகவும்
இருந்தது,
இந்த பாடலை நீங்கள் கேட்டு
ருப்பீர்கள்
இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு
பாடி நம் இதயத்தை கனக்கச்
செய்கிறார் அவர்
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..
துன்பம்
சுவையாக மாறுகிறது
அதை…
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே மூன்று ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழக அரசு சிறப்பு ரயில் மூலம் தமிழகம் கொண்டு வந்தது. இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டிருப்பது,
தொலைந்து போயிருக்கலாம்
ஆறுதலாவது உண்டு,
தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும்
திரும்ப வரலாம்மென்ற நினைப்பு,
நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும்.

சீனு ராமசாமி
வாழ
போனவர்கள்
திரும்ப வருகையில் நிகழும்
பயணங்கள் மீதான
காலத்தின் விபரீதப் போர்
கோர விபத்துகள்,
விபத்துக்கு பின்னிருக்கும்
ஒரு கவனமின்மை
அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை,
இறப்பின்
அஞ்சலி செலுத்தும் நேரமிது.
பிழைத்தவர்கள்
மறுபடி
பிழைக்கச்
செய்யும்
தருணமிது
தப்பியவர்கள்
இல்லம் வரும்
மாலையிது.
சுற்றி வந்து
கைகொடுத்த கிராமத்து மனிதத்தை
வாழ்த்தும் நிமிடமிது என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
- சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடிமுழக்கம்’.
- இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இடிமுழக்கம்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாளான இன்று இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் எங்கள் ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வந்து குரல் கொடுத்த வெற்றித்தமிழன் ஜிவி பிரகாஷுக்கு இடிமுழக்கம் படக்குழுவின் சார்பில் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வந்து
— Seenu Ramasamy (@seenuramasamy) June 13, 2023
குரல் கொடுத்த #வெற்றித்தமிழன் @gvprakash க்கு #இடிமுழக்கம் படக்குழுவின் சார்பில் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்.@SGayathrie @Actor_ArulDass @NRRaghunanthan @thamizh_editor @Vairamuthu @SonyMusicSouth @CtcMediaboy @SureshChandraa… pic.twitter.com/uvTS2SeXcd
- 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கப்பட்டது.
- இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது, கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'. இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'
— Seenu Ramasamy (@seenuramasamy) June 18, 2023
இளைய தளபதி @actorvijay
உங்களை வாழ்த்துகிறேன்.
தங்கள் நடிப்பில்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல்
தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின்
Content Based Realistic படங்களை
தயாரித்து
சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர… pic.twitter.com/GJRZovMIxV
- இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாமனிதன்.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் குவித்தது.
கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் படங்களை இயற்றி தனக்கான இடத்தை பிடித்தார். மாமனிதன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, 'தர்மதுரை' எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும் இதில் இடம்பெற்ற 'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து' பாடல் 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம் என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி, மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும் 'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடலை தர்மதுரை படத்திற்காக பதிவு செய்தோம். மூத்தோர்கள் அன்பே ஆசிகள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.