என் மலர்
நீங்கள் தேடியது "shivan"
- இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
- “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.
திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.
இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.
மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.
ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.
இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
ஆகாயம் - சிதம்பரம் கோவில்
நீர் - திருவானைக்காவல் கோவில்
நெருப்பு - திருவண்ணாமலை கோவில்
"மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
"ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.
இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.
இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.
கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
ஓம் நம சிவாய!...
- ஸ்ரீமந் நாராயணனே, ராம மற்றும் கிருஷ்ண அவதாரத்தின் போது பித்ரு பூஜை செய்ததாக கூறப்படுகிறது
- மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம்.
பித்ரு வழிபாடு
ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை.
ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.
ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர்.
அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்று கொடுத்தது. அந்த வரிசையில்தான் ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும் மாதமாகிய புரட்டாசியில் மகாளய பட்ச அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் பித்ரு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக மகாளய பட்சத்தின் சிறப்புப் பற்றி கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி ஸ்ரீமந் நாராயணனே, ராம அவதாரத்தின் போதும், கிருஷ்ண அவதாரத்தின் போதும் பித்ரு பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் இவற்றையெல்லாம் மறந்து விட்டோம். முந்தைய யுகங்களில் வாழ்ந்தவர்கள், மிக சரியான முறையின் பித்ரு வழிபாடுகளை செய்ததால், மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம். தற்போதைய கலியுகத்தில் அவை சாத்தியம் இல்லாமல் போய் விட்டது என்கிறார்கள்.
என்றாலும் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.
- இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன.
- பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை.
மங்களம் தரும் மலர்கள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ, அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது.
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு வித, விதமான மலர்களை சூடி அழகு பார்த்தனர். அர்ச்சனை செய்தனர். இதை பழங்கால பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இறை மூர்த்தங்கள் மலர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் நம் மூதாதையர்கள் உறுதியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.
சில குறிப்பிட்ட மலர்கள், அறிவியல் பூர்வமாக மனித குலத்துக்கு நன்மை செய்வதை ஆதி தமிழர்கள் அறிந்து இருந்தனர். தாமரை மலர்த்தண்டு குளோரின் வாயு உற்பத்தி செய்வதை கண்டுபிடித்திருந்தனர்.
எனவே குறிப்பிட்ட மலர்களை இறை வழிபாடு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்தனர்.
குவளை மலரை பறித்து பயன்படுத்தக் கூடாது என்ற விதி இப்படித்தான் ஏற்படுத்தப்பட்டது. உலகில் உள்ள இயற்கை படைப்புகள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில், மலர்கள் இறைவனுக்கு உகந்தவைகளாக உள்ளன.
இயற்கையின் படைப்பில் மலர்களின் இயல்பைப் பார்த்தால் அவற்றின் தியாகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ஓரிரு நாட்களே ஆயுள் கொண்ட மலர்கள் இறைவனுக்காகவே பூத்ததோ என்று எண்ணத் தோன்றும்.
ஆலயங்களில் நறுமணம் ஏற்படுத்தவும், அலங்காரம் செய்யவும், ஆத்மார்த்தமாக வழிபடவும் மலர்களின் பங்களிப்பு நிகரற்றது. மலர்கள் இல்லாத வழிபாட்டை நினைத்துப் பார்க்க இயலாது.
மகிமைகள் பல நிறைந்த பூக்களை, இறைவழி பாட்டுக்கு சங்க கால தமிழர்கள் பயன்படுத்தியதற்கும், நாம் பயன்படுத்தியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
சங்க காலத்தில் 99 வகையான பூக்கள் பயன்பாட்டில் இருந்ததை கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் 261 அடிகள் கொண்ட பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 99 வகை பூக்களில் பல இன்று காணாமல் போய் விட்டன. பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை. மிக சொற்பமான வகை மலர்களையே நாம் பயன்படுத்துகிறோம்.
புராணங்கள் புனையப்பட்ட பிறகு ஒவ்வொரு கடவுளுக்கும், இந்தந்த வகை பூக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற நியதி உருவாகி விட்டது.
எனவே சில வகை மலர்களின் பயன்பாடு குறைந்து போனது.
என்றாலும் இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் இந்த மலர்கள் இன்று இறைவழிபாட்டை அர்த்தமுள்ளதாக, ஆத்மார்த்தமானதாக மாற்றியுள்ளன.
காய்ந்து போன மலர்கள், மனிதர்களால் முகர்ந்து பார்க்கப்பட்ட மலர்களை ஒரு போதும் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது. அது போல் சுத்தம் இல்லாத இடத்தில் உள்ள பூக்களை தொடவே கூடாது.
மலர்களை இறைவனுக்கு படைக்கும்போது கிள்ளி சாத்தக்கூடாது. முழு மலராகவே சாத்தவேண்டும். இலைகளை கிள்ளி சாத்தலாம். வில்வம், துளசி ஆகியவற்றை தளமாகவே படைக்க வேண்டும்.
இந்த வரிசையில் எந்தெந்த மலர்களை, எந்தெந்த தெய்வத்துக்கு, எந்தெந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சில முறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
காலை வழிபாட்டின் போது தாமரை, துளசி, மல்லிகை, நந்தியாவட்டை, முல்லை, மந்தாரை, செண்பகம் ஆகிய மலர்களை கொண்டு வழிபடலாம்.
மதிய நேரத்தில் துளசி, வில்வம், சங்கு புஷ்பம், அரளி, வெண்தாமரை, ஓரிதழ் தாமரை, மருதாணி ஆகியவற்றை கொண்டு பூஜை செய்வது நல்லது.
மாலை நேரத்தில் ஜாதிமுல்லை, துளசி, வில்வம், செந்தாமரை, அல்லி, மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற பூக்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும்.
இத்தனை வகை மலர்களில் தாமரைப்பூதான் மிக, மிக சிறப்பானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால், மகாலட்சுமியின் மனம் கவர்ந்த தாமரை பூவுக்கு "தெய்வ மலர்" என்றும் ஒரு பெயர் உண்டு.
அதனால்தான் தாமரைப் பூவை பெண்கள் தலையில் சூட அனுமதிக்கப்படுவதில்லை. திருமாலுக்கு தாமரை போல பவளமல்லி, சாமந்தி ஆகிய மலர்களும் மிகவும் பிடித்தமானதாகும்.
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது நாகலிங்கப்பூவும், வில்வவுமாகும். முருகப்பெருமானுக்கு கடம்ப மலர், குறிஞ்சிப் பூ, செவ்வலரி பூ ஆகிய பூக்கள் மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகருக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா மலர்கள் மிகவும் பிடித்தமானது. அம்மனுக்கு செவ்வரளி, மல்லிகை மிகவும் உகந்தது. இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த பூ எது என்பதை அறிந்து கொண்டு படைக்க வேண்டும்.
அதுதான் இறை அருளை முழுமையாக பெற உதவும்.
இறைவனுக்கு பிடித்தம் இல்லாத, விருப்பம் இல்லாத பூக்களை ஒரு போதும் படைக்க கூடாது.
எனவே எந்தெந்த தெய்வத்துக்கு எந்தெந்த பூக்கள் பிடிக்காது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியவை பெருமாளுக்கு பிடிக்காது.
செம்பரத்தை, தாழம்பு, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவையாகும். மந்தாரம், அறுகு வெள்ளெருக்கு ஆகியவை அம்மனுக்கு படைக்க உகந்தது அல்ல.
சூரிய வழிபாடு செய்யும் போது மறந்தும் கூட வில்வத்தை படைத்து விடக்கூடாது. அது போல விநாயகருக்கு துளசி ஆகாது. பவளமல்லி சரஸ்வதி தேவிக்கு பிடிக்காத பூவாகும்.
சில பூக்களை எந்த சாமிக்கும், எப்போதும் பயன்படுத்த கூடாது என்று விதி உள்ளது. உதாரணத்துக்கு துலுக்க சாமந்திப்பூவை சாமிக்கு படைக்கக்கூடாது.
அது போல வானகமலர், மாதுளை மலர், பூசணிபூ, மலை ஆலமரப்பூ, பொன்னாங்கண்ணி பூ, விளாபுளி பூ, குமிழம் பூ, குருகத்தி பூ ஆகிய பூக்களை பூஜைக்கு ஒரு போதும் பயன்படுத்தவே கூடாது.
பூஜைக்கு விலக்கப்பட்ட இந்த பூக்களை சில ஊர்களில் ஆலய பிரகார அலங்காரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கடம்ப மலர், ஊமத்தை பூக்களை இரவு பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாழம்பூவை அர்த்தசாம பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
பகலில் தாழம்பூவை பயன்படுத்தக்கூடாது. (உத்தரகோசமங்கை தலத்தில் மட்டும் விதி விலக்காக தாழம்பூ பயன்படுத்துகிறார்கள்)
பூக்களின் நிறத்துக்கும் வழிபாட்டுக்கும் கூட தொடர்பு உள்ளது.
வெண்மை நிறம் கொண்ட பூக்களை அர்ச்சித்து வழிபட்டால் முக்தி உண்டாகும். சிவப்பு வர்ண பூக்கள் வழிபாடு இன்பத்தை தரும்.
மஞ்சள் வண்ண பூக்களை இறைவனுக்கு படைத்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் விருத்தி ஏற்படும்.
பொதுவாக அன்று பறித்த மலர்களை அன்றே பூஜைக்கு பயன் படுத்தி விட வேண்டும். சிலர் இரவில் பூ வாங்கி மறுநாள் காலை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அதில் எந்த தவறும் இல்லை.
தாமரை பூவை 5 நாட்கள் வரை வைத்து கூட பூஜிக்கலாம். அரளிப்பூக்களை 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். அது போல விஷ்ணு கிரந்தி பூவையும் மூன்று நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
செண்பகம், சாமந்தி, மல்லி பூக்களை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். இறைவனுக்கு படைக்கும் மலர், இலைகளில் துளசி, வில்வம் இரண்டு மட்டும் விதிவிலக்கு பெற்றவை. விஷ்ணுவுக்கு மிக, மிக பிடித்தமான துளசியை மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
சிவனுக்கு மிகவும் பிடித்தமான வில்வத்தை 6 மாதம் வரை கூட பயன்படுத்தலாம். வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
சிவன் அதை ஏற்று அருள் புரிவார். வில்வத்துக்கு மட்டும் அந்த சிறப்பை சிவபெருமான் கொடுத்துள்ளார்.
- சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
- மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்
சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.
மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.
ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.
சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.
கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.
இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.
இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!
இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.
- ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
- திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
- புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
- இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
- புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
- சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.
- படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
- பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில்.
இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார்.
இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.
ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.
சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது.
போனாலும் பூஜை முறையும் தெரியாது.
தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.
ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது.
பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.
பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.
படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.
எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.
பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.
பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார்.
அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார்.
அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார்.
அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.
பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார்.
அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.
இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
- இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
- இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.
சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்த்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து,
எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.
துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானாமடைந்து சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும்.
அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம்.
இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5-&ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.
இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாம்.
இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.
ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின்
சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.
- கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.
- திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும்.
இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.
இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.
ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.
அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.
கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.
திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.
முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம்.
கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும்.
கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு.
ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.
- நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு.
- நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.
நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது.
நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.
பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.
நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு.
இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.
நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம்.
நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.
பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.
நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.
நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.
இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம்.
அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது.
இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.
நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும்.
அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
- திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள்.
- ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.
இல்லாள் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மற்றும் இதர விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வருவார் அவரை மலையப்பன் என்று அழைப்பர்.
துணைவியருடன் பவனி வரும் அவர்ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் இல்லறம்.
மனைவியைப் பிரிந்து விட்டால் ஒருவனுக்கு மதிப்பு இல்லை என்று பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்கிறார்.
திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள்.
ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.
லட்சுமியை பிரிந்ததால் திருமால் செல்வ மெல்லாம் இழந்தார்.
அவளைத் தேடி சீனிவாசன் என்ற பெயருடன் பூலோகம் வந்தார். மிகுந்த சிரமத்தின் பேரில் பத்மாவதியை மணந்தார்.
அதன்பின் அவருக்கு எல்லா வளங்களும் வந்து சேர்ந்தன.
மனைவியால் தான், ஒரு கணவனுக்கு மதிப்பு என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உலகுக்கு ஏழுமலையான் உணர்த்தினார்.
அதை பக்தர்களுக்கு நினைவுபடுத்தவே திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.