என் மலர்
நீங்கள் தேடியது "shreya ghoshal"
- ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- தொடக்க நாளில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்த தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.
- தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
- விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், ஜோனிதா காந்தி, ஆண்ட்ரியா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
வி.ஐ.டி சென்னையில் வைப்ரன்ஸ் - VIBRANCE 2024 சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், பின்னணி பாடகி ஆண்ட்ரியா, பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
விஐடி சென்னையில் நடைபெறும் சர்வதேச அளவிலான கலை திருவிழாவான வைப்ரஸின் லோகோவினை விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் வெளியிட்டார். கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், மாணவர் நல இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் விசுவநாதன், "தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மார்ச் 6,7,8,9-ம் தேதிகளில் விஐடி சென்னையில் நடைபெறுகிறது.
இதில், ஐ.ஐ.டி. என்.ஐ டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், ஜப்பான், பிரேசில், இலங்கை, மியான்மர், எத்தியோப்பியா, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

200 வகையிலான கலை போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் என மொத்தம் 250 போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தப் பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.
முக்கிய நிகழ்வாக வைப்ரன்ஸ் முதல் நாள் நடைபெறும் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார். பிரபல பின்னணி பாடகர் ஷ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டாம் நாள் (மார்ச் 7) பிரபல பாடகி ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

மூன்றாம் நாள்(மார்ச் 8) பிரிபல பாடகி ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி, புகழ் பெற்ற ஷ்ரே கண்ணா குழுவின் நடனமும் நடைபெறுகிறது. வைப்ரன்ஸ் நிறைவு விழாவில் (மார்ச் 9) பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் அவர் தெரிவித்தார்.
- பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
- கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.