என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silambarasan TR"

    • பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
    • ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இப்பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இன்னும் திரைப்படம் வெளியாக 75 நாட்கள் மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர். போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
    • இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குக்கிறார்

    அண்மையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

    சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கலந்துக் கொண்ட நேர்காணலில் STR49 படத்தை குறித்து சில தகவல்களை கூறியுள்ளார் அதன்படி " இந்த படத்திற்காக பல இயக்குனர்களை நாங்கள் தேடினோம். அப்பொழுது நடிகர் சிம்பு தான் இயக்குனர் ராம்குமாரை பரிந்துரைத்தார். இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இது இருக்கும்" என கூறியுள்ளார்.

    சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்.
    • அறிமுக வீடியோ உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.

    இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

    கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மற்றும் பிரதீப் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

     


    இது தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிம்பு ரசிகர்களுக்கு வணக்கம். புதிய படத்தின் அறிமுக வீடியோவை பார்த்துவிட்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது எஸ்.டி.ஆர். தான். ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்."

    "நான் அவருக்கு சொன்ன கதை முற்றிலும் வேறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அந்த கதைக்கு தயார் என்றால், அதனை துவங்கிவிடலாம்," என்று குறிப்பிட்டுள்ளார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிம்புவின் பிறந்தநாளன்று பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
    • இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தனர். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.

    இப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    இந்த படத்தின் அறிவிப்பை சிம்புவின் பிறந்தநாளன்று பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது அந்த தகவலை உறுதி படுத்தும் வகையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அடுத்த படத்தின் அப்டேட் பிப்ரவரி 3 வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த 3 படங்களின் அப்டேட்டையும் அன்று தெரிவிக்கவுள்ளார்.

    டிராகன் திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது . சிம்பு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் வழித்துணையே பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'டிராகன்' படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய 'ஏன் டி விட்டு போன' என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை கோ சேஷா எழுதியுள்ளார்.

    டிராகன் திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கும் என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2004 ஆம் ஆண்டு ஏ. ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் வெளியானது.
    • இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

    2004 ஆம் ஆண்டு ஏ. ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

    இவர்களுடன் கவுண்டமனி, சிந்து, துல் குல்கர்னி, சந்தானம், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படம் மீண்டும் நாளை {ஜனவரி 31} வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாமகமடைந்துள்ளனர். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படமும் நாளை மீண்டும் வெளியாகவுள்ளது.

    சிம்பு தற்பொழுது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படத்தில், தக் லைஃப் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர்48' படத்தில் நடித்து வருகிறார்.
    • சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.

    அதைதொடர்ந்து இவர் 'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வரவேற்பை பெற்றது. அஸ்வத் தற்போது இயக்கி வரும் 'டிராகன்' படம் ரிலீஸ் ஆன பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர்48' படத்தில் நடித்து வருகிறார். கமலுடன் இணைந்து 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.


    இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    சிம்புவின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் சிம்பு ரத்தக்கறை இருக்கும் கத்தியை எடுத்து என்ஜினீரியிங் புக் உள்ளே மறைத்து வைத்து இருக்கிறார்.

    அதனால் சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.


    • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
    • இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

    'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வரவேற்பை பெற்றது. இன்னொரு பக்கம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர்48' படத்தில் நடித்து வருகிறார். கமலுடன் இணைந்து 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.

    சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    சிம்புவின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சிம்பு பொறியியல் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகர்களுக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது . இதற்கான போஸ்டரை தயாரிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் 1 நிமிட நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வீடியோவை அனுப்ப வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராம் ரீல்சை அனுப்பக்கூடாது எனவும் மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணை {8825807965} கொடுத்துள்ளனர். நடிப்பில் ஆர்வம் மிக்க நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
    • சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.

    பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.

    அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

    இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.

    இந்நிலையில், கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திர புத்திரி' பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். இப்பாடலும் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட சாய் அபியங்கர் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அவர் கூறியதாவது " எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். அவ்வப்போது என் நண்பர்களோடு திரைப்படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மேலும் ஒரு மலையாள திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன். என் பாடலை கேட்டு நடிகர் சிம்பு அழைத்து பாராட்டினார்." என கூறீனார்.

    மேலும் சாய் அபியங்கர் சிம்பு நடிக்கும் STR49 மற்றும் STR51 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் வைபாகவும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'.
    • ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    'டிராகன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    'டிராகன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரன்-டைம் 2 மணி 35 நிமிடங்கள் ஆகும். இந்த நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் டிராகன் - ப்ளாக்பஸ்டர் என பதிவிட்டுள்ளார்.

    அதற்கு நன்றி தெரிவிக்கு வகையில் பிரதீப் ரங்கநாதன் " நீங்கள் நேரம் எடுத்து எங்கள் திரைப்படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்
    • இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் வின்னைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் வின்னைத்தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் 1000 நாட்களை கடந்து இன்றும் ஓடிக்கொண்டி இருக்கிறது. இன்றும் வார இறுதியில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் குறித்து சிம்பு மற்றும் திரிஷா படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து, இப்பட வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×