என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siva"

    • இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் மிர்சி சிவா நடிக்கும் திரைப்படம் ‘சலூன்’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    'சென்னை 28', 'தமிழ் படம்', 'கலகலப்பு' போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் மிர்சி சிவா. இவர் சமீபத்தில் நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது 'கன்னிராசி', 'தர்மபிரபு' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் 'சலூன் - எல்லா மயிரும் ஒன்னுதான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


    சலூன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் யோகி பாபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிர்சி சிவா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுவை-விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுவை-விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    சாலையின் இருபுறமும் 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடக்கிறது. அதில் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.என். பாளையம் பஞ்சாயத்து தட்டாஞ்சாவடி மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களை காலி செய்துவிட்டு வாய்க்கால் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.

    எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்பகுதி மக்களுடன், தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே அப்பகுதியில் வசிக்கும் 18 குடும்பத்திற்கு பட்டா பெற்றுத்தந்த பின் காலி செய்ய வேண்டும், அதன்பின் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. ஆதிதிராவிடர் அணி மாநில துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், எழில்மாறன், தங்ககதிர்வேல், சந்தோஷ்குமார், மதிவதணன், முத்தழகன், தமிழ்வாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுவை அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது.
    • 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 அளிப்பது ஏமாற்றும் வித்தையாகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி..மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    புதுவை அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வெறும் ரூ. 500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு அளிப்பதாக கூறியிருப்பது மக்களை மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

    தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவைகளோடு ரூ.ஆயிரம் வழங்குவது என அறிவித்துள்ளது. 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 அளிப்பது ஏமாற்றும் வித்தையாகும்.

    தமிழகத்தைப்போல் புதுவையிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மாத அரிசிக்கு பதிலாக பணத்தை பொங்கலுக்கு முன்பு வழங்க வேண்டும்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தலித் மக்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைகால வேட்டி, சேலை திட்டத்தின் தொகையையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக காலத்தோடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காசேதான் கடவுளடா'.
    • இப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    காசேதான் கடவுளடா

    இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் தன்னை சந்தித்து 'காசேதான் கடவுளடா' படத்தை எடுப்பதற்காக ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

    இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


    காசேதான் கடவுளடா

    இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜ் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தொகை கொடுப்பட்டிருக்கிறது. மீதி தொகை கொடுக்கும் வரைக்கும் இந்த படம் வெளியிடப்படாது என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி ராஜ் மோகன் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற 14.03.2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மாபெரும் நிகழ்வில் ஒரு பிரமாண்ட திட்டம். காத்திருப்பு முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இறுதி சடங்குகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு நடிகர் சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    • சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கங்குவா

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.


    கங்குவா போஸ்டர்

    இந்நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த மோஷன் போஸ்டர் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'கங்குவா' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூது கவ்வும் -2’.
    • இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    சூது கவ்வும் 2

    சூது கவ்வும் 2

    இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த போஸ்டரில், 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


    சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர்

    சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர்

    இந்நிலையில் சூது கவ்வும்-2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • கொடைக்கானலில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

     

    கங்குவா படக்குழு

    கங்குவா படக்குழு


    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    கங்குவா

    கங்குவா

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 வாரங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படத்தின் முக்கியமான வரலாற்று பகுதிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.


    கங்குவா

    கங்குவா

    இந்நிலையில் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. முழுவீச்சில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு மழையிலும் இடைவிடாமல் நடந்துள்ளதாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் சூர்யா அனைவருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    வாடிவாசல்

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஆனால், வெற்றிமாறன், சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்ததால் சூர்யா கங்குவா படத்தில் நடிக்கத் தொடங்கினார். 'விடுதலை' படப்பிடிப்பு முடிந்ததும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 'விடுதலை' இரண்டாம் பாகம் பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதால் 'வாடிவாசல்' படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கங்குவா படக்குழு

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கங்குவா

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் சூர்யா, திஷா பதானியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை படப்பிடிப்பு முடிந்தது மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், கங்குவா படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததாகவும் இதனை ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிரேம் ரக்ஷித் வடிவமைத்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பாடல் மற்றும் பாடலின் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளதாகவும் இதில் சூர்யாவின் தோற்றமும் அவருடைய திரை ஆளுமையும் மிக நேர்தியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×