என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிஷா"

    • சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அடுத்தாக படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் இல் பெரிய திருவிழா செட் அமைத்து ஒரு பாடலை படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருவிழா பின்னணியில் சூர்யா மற்றும் திரிஷா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பாடலில் 500 நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மற்றும் பல கோடி செலவளித்து செட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் ஒரு ஃபேண்டசி கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

    இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கின்றனர்.

    படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    • சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
    • தற்போது திரிஷா சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு திரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்துக்கு சென்று இருக்கிறது. அந்த படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தற்போது திரிஷாவுக்கு படவாய்ப்புகள் மளமளவென குவிகின்றன.

     

    பொன்னியின் செல்வன் - திரிஷா

    பொன்னியின் செல்வன் - திரிஷா

    லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் சம்பளத்தை திரிஷா உயர்த்திவிட்டதாகவும், இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -1'.
    • 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    திரிஷா

    திரிஷா

     

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை திரிஷா கலந்துக் கொள்ளாதது பல கேள்வியை எழுப்பியது.

    காலில் காயம் ஏற்பட்ட திரிஷா

    காலில் காயம் ஏற்பட்ட திரிஷா

     

    இந்நிலையில் திரிஷா இந்த வெற்றி விழாவில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரிஷாவுக்கு கால் முறிவுஏற்பட்டதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிவிழாவுக்கு வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற திரிஷா அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் பாதியிலேயே நாடு திரும்பியதாகவும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், திரிஷாவும் தனது வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணமாகவே அவர் இவ்விழாவில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் என்று உறுதியாகியுள்ளது.

    • இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ராங்கி.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு 'ராங்கி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.

     

    ராங்கி

    ராங்கி

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சரவணன் கூறும்போது, ''முந்தைய சில படங்களில் இருந்த வார்த்தைகளையே ராங்கி படத்திலும் பயன்படுத்தினோம். ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையில் சர்வதேச குழுக்கள் தொடர்பு இருப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தோம். இதனால் வெளிநாடுகள் சம்பந்தமான காட்சிகள் இருந்தன. அந்த பெயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால் படம் வெளியாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு விட்டது" என்றார்.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 3 வருடங்களுக்கு பிறகு இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.


    ராங்கி

    இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.


    ராங்கி

    இந்நிலையில், 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரிஷா ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’.
    • சில தினங்களுக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'. இப்படத்தில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து தணிக்கை குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்முறையீட்டில் படத்தில் 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது. சில தினங்களுக்கு முன்பு 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    ராங்கி

    ராங்கி

    இந்நிலையில் 'ராங்கி' படத்தின் புரொமோஷன் பணிக்காக திரிஷா உள்ளிட்ட படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் திரிஷா பேசியதாவது, நான் திரைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது, நான் எப்போதும், நேர்மறையான கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன், எதிர்மறையான கருத்துக்கள் எதையும் நான் கவனித்துக் கொள்வதில்லை. காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வதந்திகள் கிளப்பியுள்ளனர். அந்த தகவல்கள் ஒரு சதவீதம் கூட உண்மையில்லாதவை, எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தமும் இல்லை. என்னிடம் எப்போது திருமணம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் இது போன்ற கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று பதிலளித்தார்.

    • திரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ராங்கி’.
    • இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் 'ராங்கி'. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.


    ராங்கி

    இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.


    ராங்கி

    இதைத்தொடர்ந்து இப்படம் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'ராங்கி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ராங்கிக்காரி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. 




    • தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.
    • இப்படத்தின் படப்பிடிப்பிற்காக திரிஷா காஷ்மீருக்கு செல்வதாக கூறப்படுகிறது.

    'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

     

    திரிஷா

    திரிஷா


    இப்படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்ட நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக திரிஷா காஷ்மீர் செல்லவுள்ளதாகவும் இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் கிளம்பியதாகவும் தெரிவித்து பலரும் திரிஷாவின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


    • விஜய்யின் தளபதி 67 படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது.
    • தற்போது இப்படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    விஜய் - திரிஷா

    விஜய் - திரிஷா


    தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

     

    தளபதி 67

    தளபதி 67

    இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தளபதி 67 படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


    • நடிகை திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    திரிஷா

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இப்படத்தின் மூலம் திரிஷா இணைந்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

     

    விஜய் - திரிஷா

    விஜய் - திரிஷா


    இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புகாக படக்குழு அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்று வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.



    இந்நிலையில் விஜய் - திரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விமானத்தில் பணிப்பெண்ணுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படததை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet).
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


    விஜய் - திரிஷா

    விஜய் - திரிஷா

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷாவுக்கு லியோ படப்பிடிப்பிலிருந்து 5 நாட்கள் ஓய்வு கிடைத்ததாகவும் அப்போது ஓய்வு நேரத்தை பயன்படுத்தி விஜய், திரிஷா உள்ளிட்டோர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மீண்டும் காஷ்மீர் படப்பிடிப்புக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×