search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ருதிஹாசன்"

    பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் டிம்பிள் கன்னாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார்.
    1970, 1980களில் கவர்ச்சி கதாநாயகியாக திகழ்ந்தவர் டிம்பிள் கன்னா. ராஜ்கபூர் இயக்கத்தில் இவர் அறிமுகமான பாபி படத்தில் நீச்சலுடையில் நடித்து பரபரப்பை கிளப்பினார். அது முதல் பாபி என்றே அழைக்கப்படுகிறார். கமலின் விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். டிம்பிளை கமலுக்கு மட்டுமல்ல அவர் மகள் ஸ்ருதிக்கும் பிடிக்கும். 

    பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருந்த டிம்பிள் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கிறார். இந்த படம் உளவு பிரிவு பற்றியதாக ‘டினெட்’ பெயரில் உருவாகிறது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்குகிறார். 



    இந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்ட ஸ்ருதி உடனடியாக டிம்பிளுக்கு வாழ்த்து பகிர்ந்திருக்கிறார். ‘எனக்கு மிகவும் பிடித்த டிம்பிள் மேம் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிப்பதை அறிந்து மிக மிக சந்தோ‌ஷம் அடைந்தேன். ஐ லவ் யூ டிம்பிள்’ என குறிப்பிட்டுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது பவர் படத்தின் மூலம் கேங்ஸ்டராக களமிறங்க இருக்கிறார். #ShrutiHaasan #Power
    ஸ்ருதிஹாசன் சிங்கம்-3 படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கிறார். துப்பாக்கி, அஞ்சான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    முதன் முறையாக நடிகை ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் இந்த இந்தி படத்திற்கு பவர் என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க மும்பையை மையப்படுத்திய தாதா கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார்.



    அவரது ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். 1972ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் படமான காட்பாதர் திரைப்படத்திற்கு சமர்ப்பணமாக உருவாகிவரும் இப்படம் வரும் ஜூலை 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.
    நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். #Shrutihaasan #Kamalhaasan
    ஸ்ருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    “நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் இருக்கிறேன். பாடலை நானே எழுதுகிறேன். சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர ஓய்வு எடுக்கவில்லை. இசை பணிகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பேன். தமிழ் படமொன்றில் நடிக்க இருக்கிறேன்.

    இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன். 10 வருடங்கள் நடித்து விட்டேன். கதாநாயகி போட்டியில் பின் தங்கிவிடுவேன் என்ற பயம் இல்லை. இசை ஆல்பம் வேலைகளை ஆரம்பித்ததால் நடிப்பதை தள்ளி வைத்து இருக்கிறேன்.



    எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.

    இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
    நயன்தாரா மற்றும் திரிஷாவை தொடர்ந்து பிரபலமான நடிகை ஒருவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #VijaySethupathi
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது ‘96’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

    மேலும், நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார். சமந்தாவுடன் இணைந்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக, பிரபல நடிகையுடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 



    விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய தந்தை கமல்ஹாசன் வழியை பின் பற்ற இருக்கிறார். #ShrutiHaasan #Kamal
    சினிமாவில் பிசியாக இருப்பவர்கள் எல்லாம் டிவி பக்கம் வரும் காலம் இது. பிக்பாஸ் மூலம் டிவிக்கு வந்தார் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 வது சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து விஷால் தனியார் டிவி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்க இருக்கிறார்.

    இவர்கள் வரிசையில் ஸ்ருதிஹாசனும் விரைவில் ஒரு டிவியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை பேசும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.



    சமீபத்தில் லண்டனில் தனது முதல் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியிருக்கும் ஸ்ருதி அதே உற்சாகத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டார்.
    தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் ஸ்ருதிஹாசன், ரக்‌ஷ பந்தனுக்கு தன்னுடைய அம்மாவிற்கு ராக்கி கட்டி கொண்டாடி இருக்கிறார். #ShrutiHaasan
    ஸ்ருதிஹாசன் எதையும் வித்தியாசமாக செய்பவர். நேற்று நாடு முழுவதும் ரக்‌‌ஷ பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் சினிமா நடிகர், நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

    அப்படிக் கொண்டாடிய சிலர் தங்களது சமூக வலைதளங்களில் அதுகுறித்து பதிவிட்டனர். அந்த வரிசையில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார். பொதுவாக ரக்‌ஷா பந்தன் சகோதர சகோதரிகளுக்குள்தான் பெரும்பாலும் பரிமாறிக் கொள்ளப்படும்.



    ஆனால் ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப் படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து கூறிய அவர் “இது எனது அம்மா. நாங்கள் இருவரும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்‌ஷா பந்தன். சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.
    நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள்களான ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கு அறிவுரை கூறுவதில்லை என்று கூறியிருக்கிறார். #Kamal #Kamalhaasan
    கமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌‌ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்டது. கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன? மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே சின்ன பயம் அவர்களுக்குள் இருந்தது. நான் தைரியம் கூறினேன்.

    அது இயல்பாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம்தான். அவர்களுக்கு நான் எந்த அறிவுரையோ ஆலோசனையோ கூற மாட்டேன். ஏதாவது தேவைப்பட்டு அவர்களே கேட்டால் மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய இளவயதில் யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்று நடந்ததில்லை.

    எல்லாமே என்னுடைய சுயமுடிவு தான். நான் என் மகள்களுக்கு என்ன சுதந்திரம் கொடுத்து இருக்கிறேனோ அது என் பெற்றோர் எனக்கு கொடுத்தது’ என்று கூறி இருக்கிறார்.
    `லென்ஸ்' படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ படத்தின் மூலம் நடிகை ஸ்ருதிஹாசன் புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார். #TheMosquitoPhilosophy #ShruthiHaasan
    தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை ‘லென்ஸ்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது. 

    படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது, 

    ‘ ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது. இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது. அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது. ’ என்றார்.



    படத்தைப் பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், 

    ‘ எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத் தான் நம்புகிறது. இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம். அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். 

    இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும் போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம். இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம். ’ என்றார். #TheMosquitoPhilosophy #ShruthiHaasan

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்பு குறைந்திருப்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். #ShrutiHaasan
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போது படங்கள் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:-

    “ஏதோ படத்தில் நானும் இருந்தேன் என்பது மாதிரி கதைகள் இனிமேல் தேவை இல்லை. நல்ல கதை, திருப்தியான கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிப்பேன். அதற்காகத்தான் படங்களை குறைத்துள்ளேன். பெயர் சொல்வது மாதிரி படத்தில் முழு சக்தியையும் காட்டி நடிக்க வேண்டும். வந்தோம் போனோம் என்றெல்லாம் இருக்க கூடாது என்பதில் தெளிவாகி விட்டேன்.



    எனது கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எளிதில் திருப்தி அடைய மாட்டேன். மனதுக்கு பிடிக்கிற மாதிரி நடிப்பு வருவது வரை திரும்ப திரும்ப நடிப்பேன். இப்போது நல்ல கதைகள் அமையாததால் நடிக்கவில்லை. இனிமேல் பாடகியாக வளர முயற்சி செய்கிறேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது முடிவு. தற்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை.”

    இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
    ×