என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்வானி"

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷியைத் தொடர்ந்து தற்போது சுமித்ரா மகாஜனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது. #LokSabhaElections2019 #BJP
    புதுடெல்லி:

    75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.

    இதனால் மூத்த தலைவர்கள் மீதான தனது முடிவை வேட்பாளர் தேர்வில் மாற்றிக் கொண்டுள்ளது.


    இதன் காரணமாக முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை.

    அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.

    இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.

    1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் தொகுதி அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என உமா பாரதி தெரிவித்துள்ளார். #Advanitoclear #UmaBharti #clearthemist
    புதுடெல்லி:

    இந்திய அரசியலில் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி(91).  குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற இவருக்கு இந்த தேர்தலில் அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் காந்தி நகர் தொகுதியில்  போட்டியிடுகிறார். இதன் மூலம் பாஜகவில் அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 

    பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தற்போது அனுபவித்து வருவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் குற்றம்சாட்டியுள்ளது. 

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய மந்திரியும், பாஜக துணைத்தலைவருமான உமா பாரதி அமித் ஷாவுக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அத்வானி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ‘நரேந்திர மோடி இன்று பிரதமர் பதவியில் இருக்கும் அளவுக்கு பாஜகவை பலமான கட்சியாக உருவாக்கியதில் ஆரம்பகாலத்தில் இருந்தே முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் அத்வானி. ஆனால், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்விதமான பெரிய பதவியையும் எதிர்பார்த்ததில்லை.

    தேர்தலில் போட்டியிடுவதாலோ, போட்டியிடாமல் போவதாலோ அவரது தகுதியில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு விடப்போவதில்லை. 

    இந்த தேர்தலில் அவர் ஏன் போட்டியிடவில்லை? என்னும் கேள்விக்கு நானோ மற்றவர்களோ விளக்கம் அளிப்பது முறையாக இருக்காது. இவ்விவகாரத்தில் தன்னை சுற்றியுள்ள பனித்திரையை விலக்கும் வகையில் அத்வானியே விளக்கம் அளிப்பது தான் சரியாக இருக்கும்’ என உமா பாரதி குறிப்பிட்டார். #Advanitoclear #UmaBharti #clearthemist  
    பாராளுமன்ற தேர்தலில் அத்வானி எம்.பி.யாக உள்ள காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என குஜராத்தில் உள்ள பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். #LSpoll #BJPworkers #AmitShah #Advani #GandhinagarLSpoll
    அகமதாபாத்:

    பாஜக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி  குஜராத்தில் உள்ள காந்திநகர்  பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என இம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேஜல்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் கிஷோர் சவுகான் கூறுகையில், ‘தேசிய தலைவரான அமித் ஷா, காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருமனதாக விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.



    காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சார்கேஜ் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னர் பதவி வகித்தவர் என்ற வகையில் இங்குள்ள அனைவரையும் அமித் ஷாவுக்கு நன்றாக தெரியும்’ என குறிப்பிட்டார்.

    இதே கருத்தை வலியுறுத்திய பாஜக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் பட்டேல்,  காந்திநகர் தொகுதியில் போட்டியிட இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே இங்கு அமித் ஷா போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    பாஜக மூத்த தலைவர் அத்வானி 1991, 1996 நீங்கலாக காந்திநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #LSpoll #BJPworkers #AmitShah #Advani  #GandhinagarLSpoll
    பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #Advani #LKAdvaniBirthday #ModiWishes
    புதுடெல்லி:

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இன்று 91-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது அறிவாற்றல் அரசியல் அரங்கில் போற்றப்படுகிறது. இந்திய அரசியலில் அவரது தாக்கம் மகத்தானது. தன்னலம் கருதாமல் விடா முயற்சியுடன் கட்சியை கட்டமைத்து தொண்டர்களை சிறப்பாக வழிநடத்தியவர்’ என அத்வானியை பாராட்டியுள்ளார்.


    இதேபோல் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, மம்தா பானர்ஜி, சித்தராமையா, அசோக் கெலாட், ராஜ்யவர்தன் ரத்தோர், சுரேஷ் பிரபு, ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Advani #LKAdvaniBirthday #ModiWishes 
    பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மீண்டும் நியமித்துள்ளார். #BJP #Advani #EthicsPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க மக்களவை ஒழுங்குமுறை குழு உள்ளது. நன்னடத்தை விதிமுறைகளை மீறும் எம்.பி.க்கள் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் இக்குழுவிற்கு உள்ளது.

    இக்குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், இந்த பதவியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை மீண்டும் இன்று  நியமித்துள்ளார்.

    இதேபோல், பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்காத உறுப்பினர்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக பி.கருணாகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    மேலும், அரசு அளித்த வாக்குறுதிகள் தொடர்பான குழுவின் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிஷான்க், அவையில் முன்வைக்கப்பட்டும் மசோதாக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவராக சந்திரகாந்த் பி கைரே மற்றும் துணை சட்டங்கள் குழுவின் தலைவராக திலிப்குமார் மன்சுக்லால் காந்தி ஆகியோரும் மீண்டும் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Advani #EthicsPanel
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #PMModi #AtalBihariVajpayee
    டெல்லி:

    பாஜகவின் நிறுவன தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது உடல் மறுநாள் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நிஹாரிகா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.



    பிரதமர் மோடி பேசுகையில், “வாஜ்பாய் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அரசியலுக்கு வரும் போது இங்கு ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இருந்தது. எந்த அழுத்தத்துக்காகவும் தனது முடிவில் பின்வாங்காதவர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அவர் இருந்தாலும் தனது கொள்கையில் என்றும் சமரசம் செய்தது இல்லை” என பேசினார்.

    பாஜக மூத்த தலைவர் அத்வானி, “பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், வாஜ்பாயின் நினைவு கூட்டத்தில் பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 65 ஆண்டுகளாக அவருடன் பழகியிருக்கிறேன். ஒன்றாக சினிமா பார்த்துள்ளோம். ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளோம்” என தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து விசாரித்தார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.



    வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர்.

    நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் நல்ல நிலையில் இல்லை என்றும், சிறுநீரகங்களும் பலவீனமாக உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #AtalBihariVajpayee  #AIIMS #VajpayeeHealth #PrayForVajpayee
    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு மோடியை விட காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்துள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Advani #Modi #Rahul
    மும்பை:

    மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அனைத்து தரப்பு மக்களை மும்பை நகரம் உள்வாங்கி கொண்டு செயல்படுவதுபோல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வருவதாக ராகுல் தெரிவித்தார்.

    கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஒரு மூத்த அரசியல்வாதி, இந்த நாட்டை பாதுகாக்க காங்கிரசால்தான் முடியும் என 50 ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை காங்கிரசால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.


    நாங்கள் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டதுண்டு. ஆனால், தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காங்கிரசின் போர்வீரன் என்ற முறையில் அவரை சந்திப்பதற்கு முன்னுரிமை தந்து வாஜ்பாயை நான் பார்க்கச் சென்றேன். அவர் இந்த நாட்டுக்காக பணியாற்றியவர், பிரதமராக இருந்தவர் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். இதுதான் எங்கள் கலாசாரம்.

    மோடியின் குருவாக இருந்தவர் அத்வானி. ஆனால், சில நிகழ்ச்சிகளில் தனது குருவான அத்வானியைகூட பிரதமர் மோடி மரியாதை அளிக்காததை நான் பார்த்திருக்கிறேன். மோடியைவிட அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்து வந்துள்ளது. இன்று நான் அத்வானிக்காக வேதனைப்படுகிறேன். #Congress #Advani #respectAdvani #Modi #Rahul
    ×