search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104227"

    • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
    • விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    இந்திய கட்டுனர் சங்க நாகப்பட்டினம் மையம் சார்பாக வெங்கிடங்கால் செம்பை நதி கிராமத்தில் கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு இந்திய கட்டுணர் சங்க நாகப்பட்டினம் மைய தலைவர் அரிமா ச. மீரா உசேன் தலைமை தாங்கினார்.

    கட்டுனர் சங்க பொறுப்பாளர்கள் முனைவர் நவாப்ஜான், முனைவர் காளிதாஸ், சர்புதீன் மரைக்கார் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் கே.எஸ்குமாரவேல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாகூர் ஏ.ஆர்.நௌஷாத் கலந்து கொண்டனர் விழாவில் ஆடிட்டர் குமாரவேலு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா இன்று இரவு விருந்து அளிக்கிறார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால், பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.



    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தேர்தல் முடிவு வெளியாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விருந்து நிகழ்ச்சியின் போது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்பாக, பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காணொலி காட்சி வாயிலாக, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.



    வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார். 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பீஜிங் நகரில் சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #ImranKhan #LiKeqiang
    பீஜிங்:

    வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

    பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.
     
    தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. சீனா, மலேசியா ஆகிய சில நாடுகள் பாகிஸ்தானுக்கு குறுகியகால நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சீனா வந்துள்ளார்.

    தலைநகர் பீஜிங்-கில் இன்று சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார மண்டலத்தின் கட்டமைப்பு பணிகளை விரைவுப்படுத்தவும்  இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் சீன அரசு தயாராக இருப்பதாக பிரதமர் லி கெக்கியாங் குறிப்பிட்டார்.



    முன்னதாக நேற்று சீனா துணை அதிபர் வாங் கிஷான் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். #Chinesepremier #Chinesepremiermeets #PakistaniPM #ImranKhan #LiKeqiang
    குஜராத் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோதிடர்களான பண்டிட் ஓம்பிரகாஷ் வியாஸ், கோபால் வியாஸை பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். #LSPolls #PMModi
    ஆமதாபாத்:

    பிரதமர் மோடியின் குடும்பத்தினர் குஜராத் மாநிலத்தில் தங்களது பூர்வீக கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.

    மோடி குஜராத் முதல்வராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த போதும் அவர் தனது குடும்பத்தினர் யாரையும் அரசியல் பக்கம் அழைத்து வரவில்லை. இதனால் மோடி குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரிலேயே இருக்கிறார்கள்.

    மோடி பிரதமர் ஆன பிறகும் அவரது குடும்பத்தினரிடம் மாற்றங்கள் ஏற்படவில்லை. என்றாலும் மோடியின் சகோதரர்கள் எங்கு சென்றாலும் பா.ஜனதா தலைவர்கள் வரவேற்று உபசரிக்கிறார்கள்.

    மோடியின் சகோதரர்களில் ஒருவரான பிரகலாத் மோடி மட்டும் சமீப காலமாக பத்திரிகை செய்திகளில் இடம் பெற தொடங்கி உள்ளார். அவர் சமீபத்தில் ஜோதிடரிடம் சென்று தனது சகோதரர் (பிரதமர் மோடி) மீண்டும் உயர்ந்த பதவிக்கு வருவாரா? என்று கேட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கரோய் என்ற ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர்கள் பண்டிட் ஓம்பிரகாஷ் வியாஸ் மற்றும் கோபால் வியாஸ் என்பவர்கள் உள்ளனர். தேர்தல் சமயத்தில் இவர்களிடம் வந்து அரசியல்வாதிகள் ஜோதிடம் பார்ப்பது உண்டு.

    மோடியின் சகோதரர் பிரகலாத்தும் சமீபத்தில் இவர்களைத்தான் சந்தித்து பேசினார். மோடியின் ஜாதகத்தை கொடுத்து நீண்ட நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    மோடியின் சகோதரரிடம் ஜோதிடர் என்ன தெரிவித்தார் என்பது தெரியவில்லை. #LSPolls #PMModi
    அதிமுக தேர்தல் பிரசாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தினர். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. 18 சட்ட சபை இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.

    அடுத்த கட்டமாக தேர்தல் பணி, பிரசார வியூகம் பற்றி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    முதல்-அமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் தேர்தல் பிரசார தேதி தேர்தல் ஏற்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPS

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் நாளை ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaElections2019 #ElectionCommission
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

    தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு இருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட்டது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் கமிஷன் விளக்கம் கோரி உள்ளது. பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விளக்கம் கோரப்பட்டு இருக்கிறது.

    தேர்தல் பிரசாரங்களை கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் நடத்த அந்தந்த கல்வி நிறுவனங்களின் அனுமதி இருந்தாலே போதும். ஆனால், அந்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்தே தேர்தல் பிரசாரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது.

    எனவே இந்த புகாருக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷிடம் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அவரது விளக்கத்துக்கு பிறகு அதில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

    தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனைகளில் 15-ந் தேதி வரை, ரூ.4.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 15-ந் தேதி ஒரு நாளில் மட்டும் ரூ.73.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.28 கோடியும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.93.62 லட்சமும் பறிமுதல் ஆகி உள்ளது.

    ‘சிவிஜில்’ என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்வது, புகார்கள் அளிப்பது போன்றவற்றுக்காக 297 புகார்கள் பெறப்பட்டன. இந்த செயலி மூலம் தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

    சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்தால் ‘சிவிஜில்’ செயலியில் புகார் செய்யலாம். அந்த வகையில் 38 புகார்கள் பெறப்பட்டு அவை சரிசெய்யப்பட்டன. 81 விளம்பரங்கள் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கைவிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட 8 லட்சம் விண்ணப்பங்களில் 66 சதவீத விண்ணப்பங்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள 2.75 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

    புகார் அளிப்பதற்கான 1950 என்ற கட்டணமில்லாத போன் எண்ணுக்கு இதுவரை 44 ஆயிரத்து 240 அழைப்புகள் பெறப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுடன் தலைமைச் செயலகத்தில் 18-ந் தேதி (நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படுகிறது.

    எனது தலைமையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமைகள், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அம்சங்கள், தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அங்குள்ள போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய தகவல் வந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

    அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் வந்தனர்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை 18 தொகுதி இடைத்தேர்தல் நேர்காணல் நடைபெற உள்ளது.

    அதன் பிறகு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை பற்றியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.

    சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami #OPS
    போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் அனைத்தும் இன்று மாலை 4 மணியளவில் தரையிறக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    புதுடெல்லி:

    எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
     
    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன.



    இந்தியாவிலும் நேற்று போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நடந்த ஆலோசனையின்போது, போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்திருப்பதாக விமான போக்குவரத்து துறை டுவிட்டர் மூலம் நேற்று இரவு தகவல் வெளியிட்டது.

    “பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில், தேவையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை விமானங்கள் நிறுத்திவைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே நமது முதல் முன்னுரிமை. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகம் முழுவதிலும் உள்ள விமான நிறுவனங்கள், விமான உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாலை 4 மணியளவில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    அதேசமயம் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இந்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
     
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மாலை தலைமைக்கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. #ParliamentElection #TTVDhinakaran
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சென்னை அசோக் நகரில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை ஏற்று ஆலோசனை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக ஆற்ற வேண்டிய களப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. #ParliamentElection #TTVDhinakaran

    எல்லையில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததையடுத்து, பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சரவை குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். #IAFAttack #LOC #Modi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்களில் சென்ற விமானப்படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பலாகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.



    12 விமானங்களில் சென்று சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகளை வீசியதில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கியுள்ளார்.

    இதையடுத்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

    இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதேபோல் பாகிஸ்தானிலும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IAFAttack #LOC #Modi
    பாராளுமன்ற நிலைக்குழு ‘டுவிட்டர்’ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. #ElectionCommission #Twitter #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 எம்.பி.க்களை கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் உலக பொதுக் கொள்கை பிரிவு துணைத்தலைவர் காலின் குரோவெல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த கூட்டம் சுமார் 3½ மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் பல கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.



    நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சில பிரச்சினைகளை தீர்க்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். அதேபோல, தேர்தலை வலுவிழக்கச் செய்யும் பணிகளில் ஈடுபடுவதோ, தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டுவிட்டர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதர சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மார்ச் 6-ந் தேதி இந்த நிலைக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார். #ElectionCommission #Twitter #ParliamentaryPanel 
    ×