என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 105909
நீங்கள் தேடியது "சூரி"
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander
விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்' படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
Very happy to announce my next with one of my favourite actors @VijaySethuOffl
— Raashi Khanna (@RaashiKhanna) January 29, 2019
Really looking forward to working with the team.. ☺️ @vijayfilmaker@VijayaProdn
Also, some more exciting announcements on the way 😬
Happy to join with energy boosters music lovers @iamviveksiva @MervinJSolomon welcome bro and a special birthday wishes to mervin Bro god bless happy day 😘❤️😍🍫🤙 pic.twitter.com/J3K79gEysv
— vijay chandar (@vijayfilmaker) January 30, 2019
இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்துடன் விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.
வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் துவங்கும் நிலையில், இரு முன்னணி நாயகிகள் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். #VijaySethupathi #VijayChander
விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி நடிகர் சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 2 கதாநாயகிகள் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna
சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.
சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
படம் பற்றி சுசீந்திரன் பேசும் போது,
‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.
பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’ என்றார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran
கஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். #Soori #GajacycloneRelief #GajaCyclone
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும் பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள். நடிகர் சூரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அப்போது ஒரு பாட்டி சூரியிடம் வந்து புயலில் என் செல்போன் தொலைந்து விட்டது, அதனால் என் பேரனிடம் பேச முடிய வில்லை என்று கூறினார். இதையடுத்து சூரி அந்த பாட்டிக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் அவருக்கு செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். சூரியின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #KennedyClub #SasiKumar #Bharathiraja
சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.
பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.
பழனியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்கிறார்கள்.
வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #KennedyClub #SasiKumar #Bharathiraja
`தேவராட்டம்' படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்தார். #GauthamKarthik #VijaySethupathi
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளியான `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கவுதம் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் `தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கவுதம் கார்த்திக் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்தார். விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் இருவரும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒயிட்லைன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அன்பு தயாரிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congrats Producer #Anbu sir @Gautham_Karthik bro Dir @Arun_chandhiran bro & @sooriofficial machan for ur new movie 😍💐#WhiteLineProductionNo1@WhiteLineProd@iamrammy_ramesh@GopiCinePRO@CtcMediaboypic.twitter.com/lDa4r8j7Zv
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2018
படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GauthamKarthik #VijaySethupathi
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.
7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.
கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.
சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.
மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
Sandakozhi 2 Review Sandakozhi 2 Lingusamy Vishal Keerthy Suresh Varalakshmi SarathKumar Rajkiran Soori Appani Sarath Ramdoss Ganja Karuppu Hareesh Peradi Munish Kanth Vishwanth Shanmuga Rajan Thennavan Duraisamy சண்டக்கோழி 2 சண்டக்கோழி 2 விமர்சனம் லிங்குசாமி விஷால் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சரத்குமார் விஷால் பிலிம் பாக்டரி ராஜ்கிரன் சூரி அப்பானி சரத் கஞ்சா கருப்பு ராம்தாஸ் ஹரீஷ் பேரடி முனீஸ்காந்த் விஸ்வாந்த் சண்முகராஜன் தென்னவன் துரைசாமி
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி, தான் பயங்கரமான தோற்றத்திற்கு மாற ராஜ்கிரண் தான் காரணம் என்று கூறினார். #Sandakozhi2 #Varalaksmi
சண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.
இதுகுறித்து கேட்டபோது ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும் இரண்டிலுமே எங்களுக்கு இணைந்து தோன்றும் காட்சிகள் இல்லை. கீர்த்தி சுரேஷ் மிக சிறந்த நடிகை.
இன்னும் பல உயரங்களை தொடுவார். சண்டக்கோழி 2 படத்தில் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னை பார்த்து உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன். #Sandakozhi2 #Varalaksmi
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் முன்னோட்டம். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் மற்றும் பென் ஸ்டூடியோஸ் சார்பில் அக்ஷய், தவால், ஜெயந்திலால் கடா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சண்டக்கோழி 2'.
விஷால் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா, கஞ்சா கறுப்பு, ராம்தாஸ், கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல், கலை இயக்குனர் - வி.செல்வகுமார், சண்டைப்பயிற்சி - அனல் அரசு நடனம் - ராஜு சுந்தரம், தயாரிப்பு - விஷால், ஜெயந்திலால் கடா, தயாரிப்பு நிறுவனம் - விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டூடியோஸ், திரைக்கதை - லிங்குசாமி, பிருந்தா சாரதி, வசனம் - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் - லிங்குசாமி.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும் போது,
25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வதாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை.
தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும்.
படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal
சண்டக்கோழி 2 படத்தின் டீசர்:
பிரபல காமெடி நடிகர் சூரி, சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்ததற்கு முதலில் அஜித்தான் பாராட்டினார் என்று கூறியிருக்கிறார். #Soori #Ajith
ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் ஆர்கே.சுரேஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். சாந்தினி, தம்பி ராமய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கே.சி.பிரபாத் தயாரிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. அஜித் ரசிகராக படத்தில் ஆர்கே.சுரேஷ் தோன்றுவதால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியே அஜித்துக்கான பாராட்டு விழா போல அமைந்தது. நடிகர் சூரி பேசும்போது ‘நான் சிக்ஸ்பேக் வைத்த படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இயக்குனர் சிவா மூலம் என்னை தொடர்புகொண்டு பாராட்டியது அஜித் தான். அவரை என்றுமே மறக்க மாட்டேன்’ என்றார்.
அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் விஸ்வாசம் படம் குறித்து பேசும்போது “ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாதமான ரோலில் அஜித் நடித்துள்ளார். குறிப்பாக இரண்டு பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடியுள்ளார் என்றார்.
பாலியல் தொல்லை பற்றிய மீ டூ இயக்கத்தில் பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது என்று நடிகை வரலட்சுமி கூறினார். #MeToo #TimesUp #Varalakshmi
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சண்டக்கோழி-2. படத்தில் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனக்கு கதாநாயகியாக மட்டுமே நடிப்பதில் ஆர்வம் இல்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அப்படித் தான் சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் அமைந்தன.
‘மீ டூ’ இயக்கம் இப்போது தான் வந்துள்ளது. ஆனால் நான் போன வருடத்தில் இருந்தே இதை பற்றி பேசி வருகிறேன். சேவ்சக்தி என்ற அமைப்பையும் பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கினேன்.
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அநியாயங்களை பேச தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு நடந்திருக்கிறதா என்ற வருத்தமும் ஏற்படுகிறது.
ஒரு பெண் சமூகத்தில் இருக்கும் நல்ல பெயரை பணயமாக வைத்து தான் தனக்கு நேர்ந்ததை பகிர்கிறார். எனவே அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நாம் அவர்களை சந்தேகப்பட கூடாது.
இது சினிமாவில் மட்டுமல்ல. உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட நடந்திருக்கலாம். எனக்கு கூட நடந்திருக்கிறது. ஏன் இப்போது சொல்கிறீர்கள்? ஏன் அவரை சொல்கிறீர்கள்? என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. பெண்களுக்கு பல விஷயங்களில் தயக்கம் இருந்திருக்கலாம்.
ஒரு பெண் இந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு விளம்பரம் தேடுவாரா என்றும் பார்க்க வேண்டும். வரும் கதைகள் எல்லாம் முழு விபரங்களுடன் வருகிறது. சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது.
பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர் அல்ல. நல்லவர் போல நடிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும்கூட ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள். சின்மயிக்கு கூட மிகச் சிலரே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
அடுத்து வருபவர்களாவது பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.
இந்த புகார்களுக்காக மத்திய அரசு எல்லா மாநிலங்களிலுமே தனி கோர்ட்டு அமைத்திருக்கிறது.
ப:- இல்லை. நான் நடித்தால் ஜெயலலிதா வேடத்தில் மட்டுமே நடிப்பேன். சசிகலா வேடத்தில் நடிக்க மாட்டேன்.
நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் இப்போது இல்லை. எனக்கான நேரம் வர வேண்டும். அப்பா கட்சியில் சேரமாட்டேன். அரசியலை நோக்கி நான் செயல்படவில்லை.
கற்பழிப்புக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். சவுதியில் உள்ளது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #MeToo #TimesUp #Varalakshmi #Chinmayi
லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தானும், வரலட்சுமியும் சேர்ந்து நடிக்கவில்லை ஆனால் அவர் மிரட்டலாக நடித்திருக்கிறார் என்று கூறினார். #Sandakozhi2 #KeerthySuresh
சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அளித்த பேட்டி:-
இந்த படத்தில் என் பெயர் செம்பருத்தி. கிராமத்தில் இருக்கும் குறும்புத்தனமான பெண்ணாக வருகிறேன். முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் பார்ப்பதற்கு அடக்கமான பெண்ணாக இருந்துகொண்டு வால்தனம் செய்வார். ஆனால் இதில் பார்த்தாலே இது இப்படித்தான் என்று தெரிந்துவிடும். மீரா ஜாஸ்மின் செய்த கதாபாத்திரம் என்றதும் பயந்தேன். லிங்குசாமி கொடுத்த தைரியம் தான் நடிக்க காரணம். அவர் நடித்தே காட்டுவார். எனவே எளிதாக இருந்தது.
வரலட்சுமி?
இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. அவர் நடித்த சில காட்சிகள் பார்த்தேன். மிரட்டி இருக்கிறார்.
விஷால்?
ரொம்ப நட்பான நபர். நம் மீது அக்கறை எடுத்துக்கொள்வார். எப்போது பார்த்தாலும் பிசியாகவே இருப்பார். எப்போதும் போனும் கையுமாகவே பார்க்கலாம். ஒவ்வொரு காட்சியும் பேசி ஆலோசனை செய்துவிட்டு தான் நடிப்போம்.
சாவித்திரியாக நடித்த பிறகு கமர்ஷியல் படங்களில் நடிப்பது ஏன்?
ஒரு நடிகையாக எல்லா விதமான படங்களிலும் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். முன்னணி ரோல் தான் என்று இல்லாமல் ஹீரோவுடன் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க வேண்டும். அதிலும் நல்ல வேடங்களாக நடிக்க வேண்டும்.
சாவித்திரியாக நடித்ததற்கு கிடைத்த பாராட்டுகள் உங்கள் மனதில் ஏதாவது மாற்றத்தை உருவாக்கியதா?
பொறுப்பு அதிகரித்துள்ளது. நான் நடிக்க வந்த 4 ஆண்டுகளில் இந்த ஒன்றரை மாதம் தான் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறேன். இதுவரை 20க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். எதிலும் கமிட் ஆகவில்லை. கதை தேர்வில் இனி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
பயோபிக் படங்களாக நடிக்க ஆர்வம் இல்லை. சாவித்திரியாக நான் தெரிந்தது ஒரு மேஜிக். திரும்பவும் அதே சாவித்திரி கதாபாத்திரத்திலேயே என்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏர்போர்ட்டில் ஒரு பெரியவர் என்னிடம் வந்து நீங்கள் சாவித்திரியா? என்று கேட்டார். இல்லை சாவித்திரியாக நடித்தேன் என்று கூறினேன்.
நீங்கள் சாவித்திரியாக நடிப்பதாக செய்தி வந்ததும் அதை கிண்டல் செய்து வந்த மீம்ஸ்களை கவனித்தீர்களா?
நான் கவனிக்கவில்லை. நடிகையர் திலகம் புரமோஷனின் போது தான் கேள்விப்பட்டேன். ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சாவித்திரியாக நான் நடிப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தெரியும். எனக்கே பயம் இருந்தது. படம் அவற்றுக்கான பதிலை கொடுத்துவிட்டது.
ஆமாம். எனக்கு கவிதைகள் எழுத மிகவும் பிடிக்கும். தமிழில் சில கவிதைகள் எழுதியுள்ளேன். என் கவிதைகள் ரொம்ப ஆழமாக இருக்கும். எமோஷனலான கவிதைகள். நிறைய படிப்பேன். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #Varalakshmi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X