search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்"

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல தயாரிப்பாளர்களை புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். சில தயாரிப்பாளர்களை இது, வருத்தம் அடைய செய்திருக்கிறதாம். 

    படத்துக்கு படம் இப்படி சம்பளத்தை உயர்த்தினால், தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது? என்று பலரும் கூடிப்பேசி வருகிறார்களாம்!
    ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். #Actor #ComedyActor
    தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறாராம்.

    ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என கூறிவந்த நடிகருக்கும், தற்போது டூயட் பாடும் ஆசை வந்துவிட்டதாம். இதனால் தன்னை தேடி வரும் புதிய இயக்குனர்களிடம், படத்தில் தனக்கு ஒரு ஜோடி வேண்டும், டூயட் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கிறாராம். இதனால் புதுமுக நடிகைகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். 
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.

    நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர்.

    அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, “ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள்” என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், “சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு” என்று நடிகையின் பின்னால் இருந்து சொன்னவரும் நடிகர்தானாம்.
    அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
    அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

    சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறாராம். “உனக்கெல்லாம் ஜோடியாக அந்த நடிகை நடிக்க மாட்டார்” என்று சொல்லும் தயாரிப்பாளர்களிடம், “பதி நடிகருடன் ஜோடி சேர்ந்த அவர் என்னுடன் ஜோடி சேர மாட்டாரா?” என்று எதிர் வாதம் செய்கிறாராம்!

    “எல்லாம் எங்க தலையெழுத்து” என்று ஒரு புது பட அதிபர் தலையில் அடித்துக் கொண்டாராம்! 
    சங்க நடிகர் தற்போது ஒரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை அணுகினார்களாம்.
    சங்க நடிகர் தற்போது ஒரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை அணுகினார்களாம். நடிகை ஆட சம்மத்திப்பார் என்று நடிகர் எதிர்பார்த்த நிலையில், நடிகை மறுத்து விட்டாராம். இதனால், தெலுங்கு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம்.

    அந்த நடிகையும் ஆட மறுத்து விட்டாராம். ஒரு வழியாக தமிழ் மார்க்கெட் இல்லாமல் இந்தி பக்கம் சென்ற நடிகையிடம் பேசி ஆட வைத்திருக்கிறார்களாம். பல நடிகைகள் ஆட மறுத்ததால் நடிகர் கோபமடைந்து விட்டாராம்.
    வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
    வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், நடிகர் இந்த நடிகை வேண்டாம், சின்ன நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.

    தற்போது சின்ன நம்பர் நடிகைக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், நடிகர் அடம்பிடிப்பதாக கூறுகிறார்களாம். ஆனால், இதைக்கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
    கட்டிப்பிடிப்பது, கண் சிமிட்டுவது என நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் என்று பாராளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். #PMModi #RagulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. தேதி குறிப்பிடப்படாமல் கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

    முன்னதாக, கடைசி நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், அவரை கிண்டல் செய்து பிரதமர் மோடி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று ஒருவர் பேசியதை நாம் கேட்டோம். 5 ஆண்டு ஆட்சி முடிவடைய போகிறது. ஆனால், பூகம்பம் வரவே இல்லை.

    அவர்கள் விமானத்தை பறக்க விட முயன்றார்கள். ஆனால், நமது வலிமையான ஜனநாயகமும், சபையின் கண்ணியமும் அதை அனுமதிக்கவில்லை.

    இந்த சபையின் முதல் தடவை உறுப்பினர் என்ற முறையில், புதிய விஷயங்களை இங்கு நான் பார்த்தேன். கட்டிப்பிடி அரசியலை பற்றி தெரிந்துகொண்டேன். ஒருவரை கட்டிப்பிடிப்பதற்கும், அவமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதல் முறையாக உணர்ந்தேன். கண்கள் வழியாகவே அந்த அவமரியாதை வெளிப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, இச்சபையில் பார்க்கப்பட்டது.

    மேலும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நான் பதில் அளித்தபோது, பலத்த சிரிப்பொலியையும் கேட்டேன். பெரும்பாலான நடிகர்கள் கூட அத்தகைய நடிப்பை நடிக்க முடியாது. கேளிக்கை உலகமே இந்த நடிப்பை கற்றுக்கொள்ளலாம்.

    இந்தியாவுக்கு உலக அரங்கில் மரியாதை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்திருப்பதுதான். 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்துள்ளது.

    பெரும்பான்மை இல்லாத அரசு அமைந்தபோதெல்லாம் இந்தியாவுக்கு உலக அரங்கில் பாதிப்பே ஏற்பட்டது. பெரும்பான்மை கொண்ட அரசின் தலைவராக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கு கிடைக்கும் மரியாதையே தனியாக உள்ளது.

    இந்த மரியாதைக்கு நானோ, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜோ காரணம் அல்ல. பெரும்பான்மை ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும்.

    ஆகவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை கொண்ட அரசையே தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    உலக அளவில் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாடு விரைந்து கொண்டிருக்கிறது.

    இந்த 16-வது மக்களவையில் மொத்தம் 17 கூட்டத்தொடர்கள் நடந்தன. அவற்றில் 8 தொடர்கள், 100 சதவீதம் ஆக்கப்பூர்வமாக நடந்தன. 219 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    சபையை நடத்தியதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் தலைமைப்பண்பு பாராட்டுக்கு உரியது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதங்களில் சிறப்பாக பங்கேற்றார். அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை வைத்தே எனது உரைகளை தயாரிப்பேன்.

    நான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்திய முலாயம்சிங் யாதவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம்.
    வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம். முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பலரும் பேசி வரும் நிலையில், கடைசியாக நடித்த சாக்லெட் பாய் நடிகருடன் காதல் கிசுகிசுவில் இணைந்தாராம். இதையடுத்து அவருடன் விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியானதாம்.

    இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி இருக்கிறதாம். பல இடங்களில் இந்த நடிகையா, வேண்டவே வேண்டாம். திருமணம் எப்போது செய்து கொள்வார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு பாதியில் திருமணம் செய்து கொண்டால் படம் என்ன ஆகும் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    யுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
    யுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிகையாக பெரிய நம்பர் நடிகையிடம் பேசியிருக்கிறாரார்களாம். நடிகையும் சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

    இந்நிலையில், அந்த படத்தில் வம்பு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். இதையறிந்த நடிகை, படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். 
    ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து,
    ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து, அதை சில ஆண்டுகளாக காப்பாற்றியும் வந்தாராம். ஆனால், நடிகருக்கு புது பட வாய்ப்புகள் வரவே இல்லையாம். அதனால், அந்த கொள்கையை வாபஸ் பெற்று ஒரு புதிய படத்தில், இசை நடிகருடன் இணைந்து நடிக்க அவர் சம்மதித்திருக்கிறாராம்.

    அடுத்து மூன்று கதாநாயகர்கள் என்றாலும் பரவாயில்லை. இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி வாய்ப்பு கேட்டு வருகிறாராம் நடிகர்.
    மொக்க கத்தி நடிகர் அதிக படங்களில் நடிப்பதில்லையாம். அவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் ஆசையும் இல்லையாம்.
    மொக்க கத்தி நடிகர் அதிக படங்களில் நடிப்பதில்லையாம். அவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் ஆசையும் இல்லையாம். கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்றும், அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன என்றும் இரண்டு விதமாக பேசப்படுகிறதாம்.

    அவர் இதுவரை ரூ.90 லட்சம் சம்பளம் வாங்கி வந்தாராம். அதற்கு குறைந்து அவர் நடிப்பதில்லையாம். இந்த நிலையில் அவர் நடித்து சமீபத்தில் ஒரு படம் திரைக்கு வந்தது. அந்த படம் வெற்றிகரமாக ஓடுவதாக கூறி, சம்பளத்தை மேலும் ரூ.10 லட்சம் உயர்த்தி விட்டாராம். இப்போது அவர் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்கிறாராம்!
    தமிழில் சாக்லெட் பாயாக இருந்து டாப்பான ஸ்டாராக இருந்த நடிகருக்கு தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம்.
    தமிழில் சாக்லெட் பாயாக இருந்து டாப்பான ஸ்டாராக இருந்த நடிகருக்கு தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். மற்ற தயாரிப்பாளர் யாரும் இவரை வைத்து படம் எடுக்காததால், சொந்த தயாரிப்பு மூலம் அப்பப்போ ஒரு படம் நடித்து வருகிறாராம். 

    சமீபத்தில் இவரை சந்தித்த சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நீங்கள் காதல் நாயகனாக நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று அறிவுரை கூறினார்களாம். ஆனால், நடிகரோ நான் கதாநாயகியை காதலிக்கும் படங்களில் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.

    இதைக்கேட்ட பலர் வாய்ப்பு இல்லையென்றாலும் கொள்கையை விடமாட்டுறாரே என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.
    ×