search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106658"

    ஆர்.எஸ்.எஸ்-ஐ பழிப்பதுபோல் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை காங்கிரஸ் புகழ்கிறது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒன்றே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இதுகுறித்து பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டரும், பா.ஜனதா மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தேச விரோதிக்கும், தேச பக்தருக்கும் வித்தியாசம் தெரியாது. அழகிரியும் அந்த பட்டியலில் இருப்பவர்தான்.


    பாரத நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள் கூட தேசபக்திக்கும், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உதாரணமான இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்று புகழ்ந்து இருக்கிறார்கள்.

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டி இருக்கிறார். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். அழகிரி விவரம் தெரியாமல் பேசி இருப்பாரா என்பது சந்தேகம்.

    ஆர்.எஸ்.எஸ்.ஐ. குற்றம் சாட்டுவது போல் குற்றம் சாட்டி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை புகழுவதற்காக அப்படி பேசி இருக்கலாம்.

    இஸ்லாமிய சமுதாயத்தை பார்த்ததும் சில தலைவர்கள் நிலைதடுமாறுவார்கள். கமலும் அப்படி தடுமாறியதன் விளைவுதான் அவரது அர்த்தமற்ற பேச்சு.

    மகாத்மா காந்தியை கொன்றவர் கோட்சேதான். அதற்கு புலனாய்வு அவசியமில்லை. சுட்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார். அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அதை ‘இந்து’ என்ற வார்த்தையை நினைவு படுத்தினால் தான் கோட்சே நினைவுக்கு வருவாரா?

    அப்படியானால் காந்தி யார்? அவரும் நல்ல இந்து தானே! கோட்சே பற்றி மட்டும் இந்து என்ற வார்த்தையை சேர்ப்பது ஏன்? இது பொருத்தமற்ற வார்த்தை. சூடான ஐஸ்கிரீம் என்பதுபோல் இந்து ஒரு போதும் பயங்கரவாதி ஆக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல்குண்டு வீசியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்த பிறகு அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இடையே நடைபெறும் அரசியல் மோதல்கள் பல இடங்களில் கொலையிலும் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சினையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோதல் உருவாகி உள்ளது. இது பல இடங்களில் வன்முறையாக வெடித்து வருகிறது.

    திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணனின் வீடு உள்ளது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்கள் கைகளில் இருந்த பெட்ரோல் குண்டை ராமகிருஷ்ணன் வீட்டின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவரது வீட்டு கதவு, ஜன்னலில் தீப்பிடித்து எரிந்தது.

    சத்தம் கேட்டு வெளியில் வந்த ராமகிருஷ்ணன் பொதுமக்கள் உதவியுடன் தனது வீட்டில் பிடித்த தீயை அணைத்தார். மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும் போது சபரிமலை விவகாரத்தில் இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கி வருகிறார்கள். தற்போது பெட்ரோல் குண்டு வீச்சிலும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஈடுபட்டு உள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். #tamilnews
    மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, சாதிவாரி இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். #10pcreservation #JigneshMewani
    கொல்கத்தா:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:



    எஸ்.சி - எஸ்.டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவின் முக்கிய நோக்கம். அதற்கான முதல் படியாகவே பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள கூட்டணியை வரவேற்கிறேன். பாஜகவுக்கு எதிராக மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #10pcreservation #JigneshMewani
    கேரளாவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபடுகிறது என்று பினராய் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். #pinarayivijayan #sabarimala #rss #bjp

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் இருவர் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ந்தேதி கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் வன்முறை, கலவரங்கள் மூண்டன. அரசு பஸ்கள், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்தது. அய்யப்ப பக்தர் ஒருவரும் பலியானார்.

    முழு அடைப்பு நடந்து 3 நாட்கள் ஆன பின்பும் கேரளாவில் இன்னும் பல இடங்களில் தகராறு ஓயவில்லை.

    கேரளாவில் தொடரும் வன்முறை குறித்து பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறும்போது, கேரள அரசு வன்முறையை தடுக்காவிட்டால் அரசியல் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

    இதற்கிடையே மத்திய உள்துறையும், கேரள அரசிடம் அறிக்கை கேட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கேரளாவில் இப்போது சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரளாவில் நடக்கும் போராட்டங்களுக்கு பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளே காரணம்.


    கேரள அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மக்களின் அமைதியான வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசின் கடமை. அதை அரசு தொடர்ந்து செய்யும். மாநிலத்தில் கால் ஊன்ற சங்பரிவார் அமைப்புகளே கலவரத்தை தூண்டுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #pinarayivijayan #sabarimala #rss #bjp

    சென்னையில் இன்று மாலை 3 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் மோகன் பகவத் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். #mohanbhagwat #pongal #rss

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் முக்கிய தலைவர்களின் கூட்டம் மகாபலிபுரம் அருகே உள்ள உத்தண்டியில் நேற்று தொடங்கியது. தேசிய அளவிலான மிக முக்கிய தலைவர்கள் 50 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    சங் பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அயோத்தி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு விசயங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.

    வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) வரை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.

    இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “வருடம் தோறும் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் வழக்கமான கூட்டம்தான். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் பற்றி தலைவர்கள் விவாதிப்பார்கள்” என்றார்.

    பொங்கல் நெருங்கி வருவதால் தமிழக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்த விருந்து நிகழ்ச்சி திருவான்மியூரில் இன்று மாலை நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக தொண்டர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்றுகிறார். #mohanbhagwat #pongal #rss

    வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் வலியுறுத்தியுள்ளார். #RamTemple #RamTempledemand #BhaiyyajiJoshi
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் இன்று மாபெரும்  பேரணியும், ராம்லீலா மைதானத்தில் தர்மசபை மாநாடும் நடைபெற்று வருகிறது. 

    இந்த பேரணியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி பாராளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியிலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக இந்த கோரிக்கையை சுரேஷ் பய்யா ஜோஷி இன்று முன்வைத்துள்ளார்.

    நாங்கள் இதை யாரிடமும் யாசகமாக கேட்கவில்லை. இந்த நாட்டுக்கு ராமராஜ்ஜியம் தேவை என்ற மக்களின் உணர்வுகளைதான் நாங்கள் எதிரொலிக்கிறோம். 

    இன்று ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கருத்தை உணர்ந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் முன்வர வேண்டும்.
    நாங்கள் எந்த சமுதாயத்தினருடனும் மோதலில் ஈடுபடவில்லை. சட்டத்தின் மூலமாக ராமர் கோவிலை சாத்தியப்படுத்துவதுதான் ஒரேவழி. இதை நிறைவேற்றும் வரை ராமர் கோவில் தொடர்பான இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். #RamTemple #RamTempledemand #BhaiyyajiJoshi
    சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை முயற்சித்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். #Sabarimala #PinarayiVijayan #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்பட இந்து அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தி வருவதால் இதுவரை சபரிமலையில் இளம்பெண்கள் யாரும் தரிசனம் செய்ய முடியவில்லை.

    தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்திருப்பதால் அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளையும் போலீசார் விதித்துள்ளனர். இது பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    பாதுகாப்பு என்ற பெயரில் அய்யப்ப பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டும் சமீபத்தில் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கேரள சட்டசபை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சனைப்பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    கேள்வி நேரம் முடிந்ததும் அது பற்றி விவாதிக்கலாம் என்று சபாநாயகர் கூறினார். அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசத் தொடங்கினார். அவரது பேச்சு நீண்டு கொண்டேச் சென்றதால் பொறுமை இழந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையின் மையப்பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரையும் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சட்டசபை கூட்டத்தில் பினராயிவிஜயன் பேசும் போது கூறியதாவது:-

    சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் பிரச்சனையில் மாநில அரசு அவசரம் காட்டவில்லை. அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து விட்டு பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.


    இந்த பிரச்சனையை வைத்து சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை முயற்சித்தன. அயோத்தியில் என்ன நடந்ததோ அது தான் சபரிமலையிலும் நடந்தது. சபரிமலையில் நடைபெற்ற போராட்டம், வன்முறையின் பின்னணியில் சதி திட்டம் உள்ளது. சபரிமலையில் வன்முறையை ஒரு போதும் அரசு அனுமதிக்காது.

    சபரிமலையில் வன்முறை யில் ஈடுபட்டதாக 320 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களது பின்னணியை பார்த்தால் அவர்கள் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்பது தெரியும்.

    சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் கோவில் நடையை மூடுவேன் என்று தந்திரி கூறியதன் மூலம் அவர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடுக்க முயன்று உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #PinarayiVijayan #BJP
    ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ‘தர்மசபா’ தொடங்கியது. #Ayodhyarally
    அயோத்தி, நவ. 25-

    ராமர் பிறந்த இடமான அயோத்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு ராமருக்கு கோவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி இந்து அமைப்புகள் கரசேவை நிகழ்ச்சியை நடத்தின.

    இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி பாபர் மசூதியை இடித்ததுடன் அந்த இடத்தில் சிறிய வடிவிலான ராமர் கோவிலையும் கட்டினார்கள். அங்கு பெரிய அளவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமாக உடனே கோர்ட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என கூறி ஜனவரி மாதத்துக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

    இதையடுத்து ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என வற்புறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் அயோத்தியில் இன்று தர்மசபா என்ற பேரணி நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாகவே நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் இருந்தனர். தற்போது அங்கு லட்சக்கணக்கானோர் திரண்டு இருக்கிறார்கள். புகழ்பெற்ற சாமியார்களான ஜெகத் குரு ராமானந்தசாரியா, சுவாமி ஹன்ஸ்தேவ சாரியா, ராம்பத்ரசாரியா, ராமேஸ் வர்தாஸ், வைஷ்ணவ், மகாந்த் நிரித்திய கோபால் தாஸ் மற்றும் ஏராளமான சாமியார்கள் பங்கேற்றுள்ளனர்.

    இது தவிர, விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    தர்மசபா நிகழ்ச்சி, ராமஜென்ம பூமிக்காக கட்டுமான பொருட்களை தயார் செய்யும் இடமான நயாஸ் ஒர்க்ஷாப் அருகில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள படேபக்த்மால் கிபாகியா என்ற இடத்தில் நடந்தது.

    பகல் 12.30 மணியளவில் தர்ம சபா நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து தலைவர்களும், சியர்களும் பேசி வருகிறார்கள்.
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பேரணியில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #AyodhyaRally #RamJanambhoomi #ShivSena
    லக்னோ:

    அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா வலியுறுத்தின. பண மதிப்பு இழப்புக்கு எப்படி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதே போன்று ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வும் இந்த சர்ச்சையில் உறுதியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

    இதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதற்காக லட்சக்கணக்கான இந்துக்கள் அயோத்திக்கு மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளனர். இந்து அமைப்புகளின் இந்த அதிரடி பேரணியால் அயோத்தி விவகாரத்தில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

    நாளைய பேரணிக்காக அயோத்தி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரி‌ஷத் தொண்டர்கள் இன்று காலை முதலே குவியத் தொடங்கி உள்ளனர். விசுவ இந்து பரி‌ஷத் மூலம் 1 லட்சம் தொண்டர்களையும், ஆர்.எஸ்.எஸ். மூலம் 1 லட்சம் தொண்டர்களையும் அயோத்தி நோக்கி திரட்டி வருகிறார்கள். அயோத்திக்கு வரும் கரசேவகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


    உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வேன்கள், பஸ்கள், லாரிகள், கார்கள், ரெயில்கள், பைக்குகளில் கரசேவகர்கள் அயோத்தி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் நேற்று முதலே அயோத்தி பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அயோத்தியில் பேரணி நடத்த போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறிவிப்பை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மிக, மிக தீவிரமாக உள்ளார். இன்று பிற்பகல் அவர் உத்தரபிரதேசம் செல்கிறார். லட்சுமண்கியூலா பகுதியில் அவர் சாமியார்களை சந்திக்கிறார். இன்று மாலை சரயு நதி ஆரத்தி விழாவில் கலந்து கொள்கிறார்.

    நாளை காலை 11 மணிக்கு அயோத்தி பக்தி மார்க்சில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர்களை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசுகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யத் திட்டமிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள், 62 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.

    ராமர் கோவில் கட்ட உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாளை மதியம் பேரணி தொடங்குகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பதால் அயோத்தியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அயோத்தியில் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    துணை நிலை ராணுவ வீரர்கள், கமாண்டோ படையினரும் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. பா.ஜ.க. அரசுக்கு இது தவிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #AyodhyaRally #RamJanambhoomi #ShivSena
    சபரிமலை சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #SabarimalaDevotees #BJP #RSS
    சபரிமலை:

    சபரிமலையில் அனைத்து வயது  பெண்களையும் பாரபட்சமின்றி வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன், சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.



    இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். பக்தர்கள் வெளியேறாததால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று அதிகாலை முதலே திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகே திரண்டு போராட்டம் நடத்தினர். அதேசமயம் அரன்முலா, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, ரன்னி,தொடுபுழா, கலாடி, மலப்புரம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட பக்தர்கள் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அங்கும் சென்று போராட்டக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கைது செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்களை உடனடியாக விடுவிக்கும்படி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கேரளாவில் நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலை நிலவுவதாகவும் குற்றம்சாட்டினர். #SabarimalaDevotees #BJP #RSS
    ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு செய்ததை இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்ய நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge
    மும்பை:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே மும்பையின் பண்ட்ரா பகுதியில் இன்று நடைபெற்ற அக்கட்சி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்த நாட்டை சீரழித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள அமைப்புகளை அழித்து வந்ததைப்போல் இந்தியாவின் அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் எண்ணத்துக்கு காங்கிரஸ் இடமளிக்காது என்று கூறினார்.

    இந்திய அரசியலமைப்பு என்பது இரு குறிப்பிட்ட மதம், சாதி, சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றது. 

    இவர்களின் நான்காண்டு ஆட்சியில் சரியான பாதையில் 4 அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.

    தொடர்ந்து ஊடகங்களை நசுக்குவதால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேச்சுரிமையும், கருத்துரிமையும் அழிக்கப்பட்டது. நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சிக்கிறது. 

    ஜெர்மனியின் சர்வாதிகாரி அந்நாட்டுக்கு என்ன செய்தாரோ, அதை இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என மோடி நினைக்கிறார். தற்போது அரசியலமைப்பு சட்டம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தினார். #Hitler #Modi  #HitlerdidtoGermany #MallikarjunKharge
    சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி செய்வதாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார். #Sabarimala #PinarayiVijayan #RSS
    திருவனந்தபுரம்:

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலை ஒரு புனித பூமி. இங்கு அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை கேரள அரசு செயல்படுத்தியது.

    சபரிமலைக்கு சென்ற பக்தர்களை கேரள அரசு தடுக்கவில்லை. போலீசாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியை மட்டுமே கேரள அரசு செய்தது.

    ஆனால் சபரிமலையில் திரண்ட போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை பாதுகாக்க போலீசார் பெரும் சிரமப்பட்டனர்.

    அப்போது நடந்த கல்வீச்சில் பல போலீசார் காயம் அடைந்தனர். சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களும், பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

    சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

    குறிப்பாக சபரிமலைக்கு சென்ற வாகனங்கள் தடுக்கப்பட்டன. பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். பெண் பக்தர்களும் கல்வீச்சில் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் வீடுகளும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.



    பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் இதுதான் முதல்முறையாகும்.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், போராட்டக்காரர்களிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சபரிமலையில் தடியடி நடத்தப்பட்டது.

    உண்மையான பக்தர்களின் பாதுகாப்புக்காகவே போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #PinarayiVijayan #RSS
    ×