என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 107414
நீங்கள் தேடியது "ஆரவ்"
பிக் பாஸ் முதல் பாகத்தில் சாம்பியன் பட்டம் வெற்ற ஆரவ், மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். #Arav #RajaBheema
பிக் பாஸ் முதல் பாகத்தில் சாம்பியன் பட்டம் வெற்றவர் ஆரவ். இவரது முதல் படமான 'ராஜாபீமா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இது குறித்து ஆரவ் கூறும்போது, ‘ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச்சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது.
ராஜா பீமா தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்பு தான். ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும். பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமெர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம்" என்றார்.
மேலும், அவர் கூறுகையில், "பொதுவாக, மனிதன் - விலங்கு பற்றிய கதைகள் கிராமங்கள் அல்லது காடு, மலை பின்னணியில் இருக்கும். ஆனால் இந்த படம் பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறும் ஆரவ், பாலக்காட்டில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இந்த படத்தை இயக்குகிறார். சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிக்கிறார்.
பிக்பாஸ் மூலம் புகழ் ஆரவ் தற்போது ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தாதா இயக்குனர் இயக்க இருக்கிறார். #Arav
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானவர் ஆரவ். இவர் ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘மீண்டும் வா அருகில் வா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், முதன்முதலாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆரவ். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.
‘தாதா 87’ படத்தில், சாருஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் ஜனகராஜ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகுல், ஆரவ் என் மகன் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். #Nakul
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். இப்படத்தை அடுத்து ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தனி கதாநாயகனாக ஆனார். தற்போது ராஜ் பாபு இயக்கத்தில் ‘செய்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’எனக்கும் எனது மனைவி ஸ்ருதிக்கும் ஒன்றரை வயதில் மகன் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதைக் கவனித்தேன். உண்மையில் எனக்கு மகனே இல்லை.
அது எனது அண்ணனின் மகன் ஆரவ். அண்ணன் மகன் ஆரவ் எனக்கும் மகன் போலத்தான். ஆனால் எனது சொந்த மகன் அல்ல எனும் விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். இப்போதைக்கு எனது குழந்தை எனது மனைவி ஸ்ருதி மட்டும்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆரவ் நடிகை ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வரும் போட்டோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Arav #Oviya
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே, தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. அத்துடன் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சில தகவல்கள் பரவியது. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த புகைப்படம் குறித்து ஆரவ்விடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
`சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் பழையது என்றும், நண்பர்களுடன் இணைந்து விடுமுறைக்காக பாங்காக் சென்ற போது எடுக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை' இவ்வாறு ஆரவ் தெரிவித்தார்.
ஆரவ் தற்போது சிலம்பாட்டம் பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். களவாணி 2 படத்தை முடித்த ஓவியா 90 எம்.எல். படத்தில் நடித்து வருகிறார். #Arav #Oviya
ஆரவ் நடிகை ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வரும் போட்டோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Aarav #Oviya
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும் இணையதளத்தை கலக்குகின்றன. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையடுத்து அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர். “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று அன்புடன் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படத்தின் விமர்சனம். #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.
விண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.
சிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.
இந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா? தனது மகனை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா... குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `டிக் டிக் டிக்' விறுவிறுப்பு. #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Oviya #Arav
ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.
இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.
அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.
இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.
சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் முன்னோட்டம். #TikTikTik #JayamRavi
நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் `டிக் டிக் டிக்'.
இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை - டி.இமான், எடிட்டிங் - பிரதீப் இ.ராகவ், பாடல்கள் - மதன் கார்க்கி, தயாரிப்பு - நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், கதை, திரைக்கதை, எழுத்து, இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் பேசும்போது,
‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன்.
அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.
படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TikTikTik #JayamRavi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X