search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107458"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் ஹிந்த் சிதாபோரா பகுதிய்ல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பாகிஸ்தானின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    இஸ்லாபாமாத்:

    பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
    தென் மாநிலங்களில் குண்டு வைக்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளார்கள் என வதந்தி பரப்பிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    பெங்களூரு:

    தென் மாநிலங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளார்கள் என்று பெங்களுரு நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சுவாமி சுந்தரமூர்த்தி என்பவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும் 19 பயங்கரவாதிகள் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் ரெயில்களிலும், முக்கிய இடங்களிலும் குண்டு வைத்து தகர்க்க சதி செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

    ஓசூரில் தான் லாரி ஓட்டியபோது இந்தியில் சிலர் பேசி கொண்டதை வைத்து இந்த தகவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இதை தொடர்ந்து கர்நாடக மாநில டி.ஜி.பி. நீல்மணிராஜூ, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, கோவா மற்றும் மாராட்டியம் ஆகிய மாநிலங்களில் டி.ஜி.பி.களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் பெங்களூரு புறநகர் பகுதியான ஆவலஹள்ளி என்ற இடத்தில் வைத்து சுவாமி சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். முன்னாள் ராணுவ வீரரான அவர் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைத்து இங்கேயும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று யூகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி இருந்தார். வதந்தி பரப்பிய அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பயங்கரவாதிகளை ஒழித்த பிறகே ஓய்வு எடுப்பேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019

    மும்பை:

    மராட்டிய மாநிலம் லத்தூரில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டனர்.

    அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    காங்கிரசும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேச விரோத எண்ணங்கள் மற்றும் செயல்பாட்டுடன் இருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித் தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது.

    தற்போது காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் குரலாக ஒலிக்கிறது. காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி வேண்டும் என்று பேசுகிறார்.


    இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான தேசியவாத காங்கிரசின் நிலை என்ன? காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள மராட்டியத்தின் பலம் வாய்ந்த மனிதர் சரத்பவார் ஆதரிக்கிறாரா?

    அதே நேரத்தில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் பா.ஜனதா உள்ளது. பயங்கரவாதிகளின் மறை விடங்களில் புகுந்து அவர்கள் மற்ற நாடுகளில் இருந்தால் கூட அழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்களின் வீரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காங்கிரசும், பாகிஸ்தானும் நமது வீரர்கள் பலத்துடன் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் பரவ வேண்டும் என விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் வீழ்த்திய பிறகே ஓய்வெடுப்பேன்.

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலனில் அக்கறையுடன் பா.ஜனதா தேர்தல் அறிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நான் உங்களது (மக்களது) நம்பிக்கையை பெற்று இருக்கிறேன். தேர்தல் அறிக்கையில் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை.

    பாகிஸ்தான் மீது யார் விமான தாக்குதல் நடத்தினார்களோ அவர்களுக்கு முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் ஓட்டுகளை அர்ப்பணியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019

    ஆப்கானிஸ்தான் நாட்டு கூட்டுப்படைகள் கடந்த 48 மணி நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த சுமார் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghanforces #Talibanfighters
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், நாட்டின் வடமேற்கில் பட்கிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 48 மணிநேரம் கூட்டுப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 35 பயங்கரவாதிகள் காயமடைந்ததாகவும்  ராணுவ செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

    இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 ராணுவ வீரர்கள், 4 போலீசார் என 12 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghanforces #Talibanfighters
    தலிபான்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் இருந்து ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அப்துல் ரஷித் தோஸ்ட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #AbdulRashidDostum #AfghanistanVP #assassinationbid #Talibanassassinationbid
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2000-ம் ஆண்டு துவக்கத்தில் தலிபான்கள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கி பலரை சிறைபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ராணுவ தளபதி அப்துல் ரஷித் டோஸ்ட்டும்.

    சுமார் 2 ஆயிரம் தலிபான்களை கொன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ரஷித் டோஸ்ட்டும் இதை மறுத்து வருகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுடன் முதன்முறையாக துணை அதிபர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற டோஸ்ட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபராக பதவியேற்றார்.



    சில ஆண்டுகள் துருக்கி நாட்டில் வாழ்ந்துவந்த அப்துல் ரஷித் டோஸ்ட்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காபுல் நகர விமான நிலையத்தின் அருகே இவரை கொல்ல நடந்த தற்கொலப்படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்நிலையில், ஜாவ்ஸான் மாகாணத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை அதிபர் டோஸ்ட்டும் வந்த வாகனத்தின்மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பியதாகவும் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #AbdulRashidDostum #AfghanistanVP #assassinationbid #Talibanassassinationbid
    தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. #Militants

    வாஷிங்டன்:

    அமெரிக்கா- இந்தியா பயங்கரவாத ஒழிப்பு குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடை பெற்றது.

    அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்பு தூதரக ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ், இந்திய வெளியுறவு துறை அமைச்சக இணை செயலாளர் மகாவீர் சிங்வி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்துக்கு பிறகு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


    சர்வதேச அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பண உதவி வழங்குவதை தடுத்தல், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடுத்தல், இண்டர்நெட் போன்ற ஊடகங்கள் பயன்படுத்துவதை தடுத்தல், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் நுழைவதை கட்டுப்படுத்துதல் போன்றவைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

    அதில், இந்தியாவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளின் மீது அர்த்தமுள்ள மிக கடுமையான நட வடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா என்றும் ஆதரவு அளிக்கும் என அதிகாரி நாதன் சேல்ஸ் தெரிவித்தார். #Militants

    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
    சோபியான்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு  பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter 
    எதிர்க்கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர். ஆனால் மோடி துப்பாக்கி குண்டுகளை பரிசாக கொடுக்கிறார் என்று முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ‌கூறியுள்ளார். #LSPolls #YogiAdityanath

    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ‌ஷகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்குகளை கடைப்பிடித்தார்கள். இதனால்தான் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தது.

    அவர்கள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவரான சாமிபிட்ராடோ இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக கூடுதல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் வெறுப்பாக பார்க்க கூடாது என்றும் கூறியிருக்கிறார்.


    இது போன்ற நபர்களால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்படுகிறது. பொறுப்பற்ற முறையில் அவருடைய நடவடிக்கை உள்ளது. அவர் பயங்கரவாதி மவுத் அசாரை பாகிஸ்தானில் வைத்து சந்தித்து உள்ளார். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நபராக சாம்பிட்ராடோ திகழ்ந்து வருகிறார்.

    இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறினார். #LSPolls #YogiAdityanath

    இந்தியா குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

    இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. மு‌ஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.

    முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.

    தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சி பிரமுகரான மொகமது இஸ்மாயில் வானி மீது பயங்கரவாதிகள் இன்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது இஸ்மாயில் வானி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், இன்று மாலை இஸ்மாயில் வானியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. #JammuKashmir
    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் தெற்கில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லீனா கிராமத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் நாயக். இவரது மகன் ஆஷிக் உசைன். ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று மதியம் ஆஷிக் உசைனை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    தகவலறிந்து ராணுவமும், மாநில போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷிக் உசைன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ×