search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ்"

    டெல்லியில் சிகிச்சை பெறுவதற்காக உடல்நலம் குன்றிய அன்ஷூ என்ற பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார்.
    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை (சோனியா காந்தியின் தொகுதி) சேர்ந்த அன்ஷூ என்ற பெண் பிரயாக்ராஜில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுபற்றி பிரியங்கா காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் உடனே அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார். அந்த விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் பட்டேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், ராஜீவ் சுக்லா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி செல்ல இருந்தனர். அன்ஷூ அவரது பெற்றோர், ஹர்திக் பட்டேல், அசாருதீன் ஆகியோர் விமானத்தில் டெல்லி சென்று அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜீவ் சுக்லாவுக்கு விமானத்தில் இடம் இல்லாததால் பின்னர் அவர் ரெயில் மூலம் டெல்லி சென்றார்.
    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகம் பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது என குற்றம் சாட்டினார். #LSpolls #RahulGandhi #PMModi
    இம்பால்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    அதன் ஒருபகுதியாக, மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    இம்பாலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    உங்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.



    பிரதமர் மோடி குறுக்கு வழியில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பணமதிப்பிழப்பை கொண்டு வந்துள்ளார். அவர் விளம்பரத்திற்காகவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். தற்போது பிரதமர் அலுவலகம், பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது.

    பிரதமரின் பல்கலைக்கழக சான்றிதழை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே பல்கலைக்கழகத்துக்கு போய் உள்ளாரா என யாருக்கும் தெரியாது. டெல்லியில் ஆர்டிஐ மூலம் பிரதமரின் பல்கலைக்கழகம் சான்றிதழ் பற்றி கேட்டுள்ளோம். ஆனால் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்தார். #LSpolls #RahulGandhi #PMModi
    போராட்டத்தின் பிரதிபலனாக புதுவை மக்கள் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும் என்று நாராயணசாமி பேசியுள்ளார். #narayanasamy #congress #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லித்தோப்பு தொகுதியில் புதிதாக 295 பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளுக்கு ஓய்வூதிய அட்டை மற்றும் முதல் மாத உதவித்தொகை வழங்கும் விழா கீர்த்தி மகாலில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்அமைச்சர் நாராயணசாமி பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் 29 தொகுதியை ஒரு கண்ணாகவும், நெல்லித் தோப்பு தொகுதியை ஒரு கண்ணாகவும் பாவிப்பேன் என கூறியிருந்தேன். அதன்படி ஒரு கண்ணாக நெல்லித்தோப்பை பார்க்கிறேன். திட்டங்கள் அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    முதியோர் பென்‌ஷனையே 2 ஆண்டுக்கு பிறகு புதிதாக தற்போதுதான் வழங்குகிறோம். அதையும் நெல்லித்தோப்பு தொகுதியில்தான் தொடங்கி உள்ளோம். இலவச அரிசி, சென்டாக் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி என பல திட்டங்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது.

    கவர்னருக்கு எதிராக இரவு- பகலாக பனியில் போராடியதன் விளைவாகத்தான் இதற்கு அனுமதி கிடைத்தது. இன்னும் 2 மாதம் பொறுத்திருங்கள்.

    இந்த நிலைமை மாறும். போராட்டத்திற்கு பிரதிபலனாக எங்களோடு மக்கள் கைகொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #narayanasamy #congress #kiranbedi

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்பி பேசினோம். வறட்சி பாதித்த பகுதிகளில் மந்திரிகள் ஆய்வு நடத்தவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், சித்தராமையா ஆகியோர் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    நாங்கள் 2-வது முறையாக வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் பணிகளை தொடங்கியுள்ளோம். இப்போது தான் மாநில அரசு கண்ணை திறந்துள்ளது. இப்போதாவது மாவட்ட பொறுப்பு மந்திரிகள் வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அரசு சொல்கிறது. ஆனால் இதுவரை அந்த கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதன் மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மத்திய குழு கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்துள்ளது.



    மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், மாநில அரசு தனது சொந்த நிதியில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தி உள்ளது. மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் காகித புலிகளை போன்றவர்கள்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவே இல்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை. ஆனால் பா.ஜனதா மீது காங்கிரசார் புழுதி வாரி இறைக்கிறார்கள். சட்டசபையில் எங்களுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பூத் மட்டத்தில் எங்கள் கட்சி பலமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களின் கூட்டணியால், எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். 20-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். #BJP #Congress #ElectionResult2018 #SoniaGandhi
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.



    இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியாகாந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார். #BJP #Congress #AssemblyElection2018 #SoniaGandhi 
    ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். #BJPMLA #HarishChandraMeena #Congress
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொது சுகாதாரத்துறை மந்திரி சுரேந்திர கோயல் மற்றும் நாகவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினர்.

    இந்தநிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் மற்றும் மாநில பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் டவுசா ஹரிஸ் சந்திர மீனா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். 
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    சென்னை:

    சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.

    நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை. நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.


    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப்பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.

    தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். #NoConfidenceMotion #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:
     
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியினர் புறக்கணித்தனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார். 
    அப்போது அவர் பேசுகையில், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும், நான் பிரதமர் இல்லை. பிரதம சேவகன் என்றார் மோடி. அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

    பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்.

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது 

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும் என்றார்.

    அமித்ஷா மகன் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்த போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    இடைவேளைக்கு பின்னர் பேசிய ராகுல் காந்தி, என் மீது உங்களுக்கு கோபம் உள்ளது. நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன்.

    அவை ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.


    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  #NoConfidenceMotion #RahulGandhi  #NarendraModi 
    பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகின்றன என்று புதுக்கோட்டை கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaram #bjp

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டு திட்டம் மோசடியான திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்காக கிடையாது. காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக தான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை, முதல்வர் வருத்தம் தெரிவிக்கவில்லை. நேரில் சென்று பார்க்கவில்லை. தமிழக அரசு பொம்மையாக செயல்படுகிறது. மத்திய அரசு ஒரு காலை தூக்க சொன்னால் தமிழக அரசு இரண்டு கால்களையும் தூக்குகிறது.

    பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகிறது. காங்கிரஸ் வலுப்பட வேண்டும் என்றால் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் . 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்திற்காக அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் மற்றும் பிளக்ஸ் பேனர்களில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் படம் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். #pchidambaram #bjp

    ×