search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்து"

    பஞ்சாப் மந்திரி சித்து அரியானா மாநிலத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர் மீது காலணியை வீசிய பெண் கைது செய்யப்பட்டார். #Sidhu #LokSabhaElections
    ரோத்தக்:

    அரியானா மாநிலம் ரோத்தக் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து பஞ்சாப் மாநில மந்திரி நஜ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் ரோத்தக்கில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில்  சித்து பேசியபோது, மத்திய பாஜக அரசை தாக்கி பேசினார்.

    அப்போது, அங்கு திரண்டிருந்த ஒரு கும்பல், மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்தில் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண், திடீரென சித்துவை நோக்கி செருப்பை வீசினார். ஆனால் அந்த செருப்பு சித்து மீது விழவில்லை. செருப்பை வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். காங்கிரசார் மோடிக்கு எதிராக பேசி வருவதால் செருப்பை வீசியதாக கூறப்படுகிறது.



    சித்து மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த வெள்ளிக்கிழமையன்று அமேதியில் அவர் பிரசாரத்திற்காக சென்றபோது, அவருடன் வந்த வாகனங்கள் மீது தக்காளிகளை வீசி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. #Sidhu #LokSabhaElections
    பஞ்சாப் மந்திரியும், பிரபல கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் நாட்டு ஏஜென்ட் என மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம்சாட்டியுள்ளார். #HarsimratBada #NavjotSidhu #Pakistanagent
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியும், பிரபல கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

    குறிப்பாக, புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு நம் நாட்டினரிடையே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில்,  நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் நாட்டு  ஏஜென்ட் என மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.



    கர்தார்பூரில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் பாதையை உருவாக்கியதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நான் வைத்திருந்த நட்புறவு உதவிகரமாக இருந்ததாக சித்து கூறி வருகிறார். பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கான பணிகளை அவர் செய்ததாகவே இருக்கட்டும். ஆனால், இந்தியா தரப்பில் இதற்கான அனுமதியை நாங்கள்தான் வழங்கினோம்.

    அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். பாகிஸ்தான் நாட்டு  ஏஜென்ட்டாகிவிட்ட சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசித்தானே ஆக வேண்டும்.

    பஞ்சாப் பிரிக்கப்பட்டது என்றால் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முடிவின்படி அது நடந்தது. அப்போது கர்தார்பூர் பகுதியை பஞ்சாப்புடன் இணைத்திருக்கலாம். ஆனால், சீக்கியர்களை ஒடுக்குவதற்காகவும் சிறுமைப்படுத்துவதற்காகவும் பஞ்சாப்பை நேரு உடைத்தார். அவருக்குப்பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி பொற்கோவில் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தினார்.

    1984-ம் ஆண்டு நமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு இன்று நீதி கிடைக்கும் வகையில் கர்த்தார்ப்பூர் சிறப்புப் பாதை அமைக்கப்படுகிறது. இதை நிறைவேற்றித்தரும் பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நீங்கள் (பஞ்சாப் மக்கள்) ஆதரவு அளிக்காவிட்டால், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குடும்பம் கர்த்தார்ப்பூர் சிறப்புப் பாதை திட்டத்தை முடக்கிப் போட்டுவிடும் என ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

    சிரோன்மணி அகாலி தள் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியுமான சுக்பிர் சிங் பாதலின் மனைவியுமான  ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அரசில் உணவு பதப்படுத்துதல் துறையின் மந்திரியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #HarsimratBada #NavjotSidhu #Pakistanagent
    மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது என பஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். #NavjotSinghSidhu #SodaBottle #Modi
    புதுடெல்லி:

    சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அலை ஓய்ந்துவிட்டது. மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது. பாட்டிலை திறந்த 2 அல்லது 3 நிமிடங்களில் அது ஆவியாகிவிடும். அதுபோல் தான் மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #NavjotSinghSidhu #SodaBottle #Modi 
    உ.பி. முதல்வரை விமர்சித்த சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது. #NavjotSinghSidhu #YogiAdityanath #PMModi
    ஆக்ரா:

    ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய சென்றிருந்த பஞ்சாப் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து ராம் கஞ்ச் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார்.

    பிரதமர் மோடியை திருடர் என்று சித்து குறிப்பிட்டார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி அல்ல... அவர் ஒரு போகி என்றும் விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டார்.



    சித்துவின் பேச்சு உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் ஆதரவாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சித்துவின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இயங்கும் “இந்து யுவ வாகினி” எனும் இந்து அமைப்பு சித்துவுக்கு எதிராக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



    அந்த இந்து அமைப்பின் ஆக்ரா நகர செயலாளர் தருண்சிங் கூறுகையில், “சித்து ஆக்ராவுக்கு வந்தால் அவர் தலையை நானே வெட்டுவேன்” என்றார். #NavjotSinghSidhu #YogiAdityanath #PMModi
    பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர் சிங்கை மறைமுகமாக விமர்சித்த விவகாரத்தில், சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #NavjotSinghSidhu
    சண்டிகர்:

    பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.

    ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு சித்து பதில் அளிக்கும் போது முதல்-மந்திரி அமரீந்தர்சிங்கை மறைமுகமாக தாக்கி விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘‘ராகுல்காந்தி தான் எனக்கு கேப்டன். பாகிஸ்தானுக்கு அவர்தான் என்னை அனுப்பினார். கேப்டனுக்கு (அமரீந்தர்சிங்) கேப்டன் ராகுல்காந்தி தான். அவர் ராணுவ கேப்டன்’’ என்றார்.



    சித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.

    சக மந்திரிகளான சுக்ஜிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மித்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்தநிலையில் சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்துதுறை மந்திரி அருணா சவுத்ரி, வனத்துறை மந்திரி சாதுசிங் தரம்சோத் ஆகியோர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர்.

    சித்துவின் கருத்து துரதிருஷ்டவசமானது. அவரது இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. கேப்டன் அமரீந்தர் சிங் எங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அவர் தான் கேப்டன். கடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முக்கிய பங்காற்றினார்.

    அதேநேரத்தில் ஒட்டு மொத்த காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். இந்த உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கேப்டன் அமரீந்தர் சிங் பற்றி சித்துவின் விமர்சனம் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மந்திரி சாதுசிங் தரம் சோத் கூறும்போது, ‘‘சித்து தன்னை ஒரு மந்திரி என்பதை மறந்துவிடக்கூடாது. டெலிவிசன் காமெடி ஷோ மாதிரி கிடையாது. மூத்த தலைவர்களை அவர் மதிக்க வேண்டும். சித்து முதல்- மந்திரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். #NavjotSinghSidhu
    பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர் சிங்கை மறைமுகமாக விமர்சித்த விவகாரத்தில், சித்து உடனடியாக மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 4 அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனார்.#NavjotSinghSidhu

    சண்டிகார்:

    பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.

    ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது முதல்-மந்திரி அமரீந்தர்சிங்கை மறைமுகமாக சித்து தாக்கி விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘‘ராகுல்காந்தி தான் எனக்கு கேப்டன். பாகிஸ்தானுக்கு அவர்தான் என்னை அனுப்பினார். கேப்டனுக்கு (அமரீந்தர்சிங்) கேப்டன் ராகுல்காந்தி தான். அவர் ராணுவ கேப்டன்’’ என்றார்.


    சித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.

    சக மந்திரிகளான சுகிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மிக்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். அதே வேளையில் பஞ்சாபில் கட்சிக்கு அமரீந்தர்சிங்தான் தலைவர். பஞ்சாபில் மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியது அவர்தான்.

    அப்படி இருக்கும் போது தன்னுடைய கேப்டனாக அம்ரீந்தர் சிங்கை சித்து நினைக்கவில்லை என்றால் மந்திரி பதவியில் இருந்து அவர் விலகவேண்டும். அதன்பிறகு ராகுல்காந்தி என்ன வேலை கொடுத்தாலும் செய்யலாம்.

    தனது கருத்துக்காக சித்து முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தலைவராக ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #NavjotSinghSidhu

    தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து, இரு நாட்டு அமைதிக்கான தூதர் என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் புகழாரம் சூட்டியுள்ளார். #ImranKhan #NavjotSinghSidhu #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் சமீபத்தில் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி அரங்கில் அந்நாட்டு ராணுவ தளபதிவை சித்து கட்டியணைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபருக்கு அருகே சித்து அமர்ந்திருந்தார். இந்த சர்ச்சைகளுக்கு பதில் கூறிய சித்து, “நான் உட்காரும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. விழா தொடங்க 5 நிமிடம் இருக்கும் போது முன் வரிசையில் அமருமாரு கூறினார்கள். அவர்கள் எங்கு அமர சொன்னார்களோ அங்கே அமர்ந்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

    மேலும், “விழாவில் நான் கலந்து கொண்டது அரசியலுக்காக அல்ல. பழைய நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லாஹூருக்கு பேருந்தில் சென்றிருக்கிறார். பிரதமர் மோடி, திடீரென பாக்., பிரதமர் இல்லத்துக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நவாஸ் ஷரீப்பை மோடி கட்டி அணைத்தார். ஆனால் யாரும் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லையே ஏன்?” என்று சுட்டிக் காட்டி பேசியுள்ளார் சித்து.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவெத் பாஜ்வாவை கட்டி அணைத்த விவகாரத்துக்கு பதில் அளித்த அவர், “ அது ஒரு உணர்வு பூர்வமான செய்கையே” என்றார். 

    “ பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்தியாவின் தேரா பாபா நானக் வளாகத்திலிருந்து குருத்வார் கர்தார்பூர் சாஹிப்க்கான வழியை திறக்க முயற்சி செய்வதாக கூறினார். அதனை அடுத்து நடந்தது, உணர்வு பூர்வமானது” என்று கட்டி அணைத்ததற்கு விளக்கம் அளித்திருந்தார்.

    இந்நிலையில், சித்துவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான தூதர் என பாராட்டியுள்ளார். “பாகிஸ்தான் வந்து எனது பதவியேற்பு விழாவுக்கு வந்ததற்காக நான் சித்துவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் அமைதிக்கான தூதர். அவரை குறிவைத்து தாக்கும் சிலர் துணைக்கண்டத்தில் அமைதி நிலவ விரும்பவில்லை. அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது” என இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.

    இருநாடுகளும் முன்னோக்கி செல்ல, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக சித்து மீது புகார் மனு தாக்கல் செய்தார். #NavjotSinghSidhu
    முசாபர்பூர்:

    கடந்த 18-ந்தேதி நடந்த பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



    சித்துவின் இந்த செயலுக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே சித்து மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு வருகிற 24-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.  #NavjotSinghSidhu
    இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் தலைமை தளபதியை பஞ்சாப் மந்திரி சித்து கட்டியணைத்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Pakistan #ImranKhan #Congress #BJP #Punjab #NavjotSinghSidhu
    அகமதாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். இவரது பதவியேற்பு விழாவுக்கு அவரது நண்பரும், பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மன்சூன் கானுக்கு அருகே சித்துவுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, அந்த பதவியேற்பு விழாவில் அந்நாட்டின் தலைமை தளபதியுடன் சித்து கட்டியணத்து கலந்துரையாடினார்.

    இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மந்திரியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஷ்வைத் மாலிக், சித்துவின் இந்த செயல் வெட்கக்கேடான செயல் என கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜனாதிபதி அருகே அளிக்கப்பட்ட இருக்கையை சித்து ஏன் மறுக்கவில்லை? எனவும் வினவியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொல்லப்படும் இந்த நேரத்தில் அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதியை சித்து கட்டியணைத்ததன் மூலம், இந்திய வீரர்களை கொன்றதற்கு நன்றி தெரிவித்தாரா? என ஷ்வைத் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு சித்து நிச்சயம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதேபோல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியும் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், சித்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் நல்லொழுக்கத்தை தகர்த்து விட்டார் என சாடியுள்ளது.

    காங்கிரஸ் மந்திரி நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயலுக்கு  பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. #Pakistan #ImranKhan #Congress #BJP #Punjab #NavjotSinghSidhu
    பாகிஸ்தானில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில மந்திரி சித்துவுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதிக்கு அருகில் இருக்கை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரான இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் உட்பட சிலரையே இம்ரான் கான் அழைத்திருந்தார். அவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    தனது நண்பரின் இந்த அழைப்பை ஏற்று சித்து இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது மரியாதை நிமித்தமாக பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவத் பஜ்வாவை கட்டியணைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான விருந்தினர்களுக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மசூன் கானுக்கு அருகே இந்திய மந்திரி சித்துவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை விமர்சித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்தியாவில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது தொடர்பான விவகாரம் ஐ.நா சபையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் சித்து, கபில்தேவ் கலந்து கொள்கிறார்கள். #ImranKhan #pakistanpm

    சண்டிகார்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக பஞ்சாப் கேபினட் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து கூறிதாவது:-


    இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவரது கட்சியின் அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பிதழ் வந்துள்ளது. இது தவிர இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங் அலுவலகத்திடம் தகவல் தெரிவித்து விட்டேன்.

    கபில்தேவிடமும் பேசினேன். அவருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அவரும் விழாவில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான கவாஸ்கர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாததை இம்ரானிடம் போனில் தெரிவித்து விட்டேன். இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனால் இம்ரானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

    இம்ரான்கான் எனக்கு பல ஆண்டு நண்பர் ஆவார். அவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளது மிகப் பெருமையான வி‌ஷயம். பல முறை இந்தியா வந்துள்ள அவர் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர். இதனால் இந்தியா உடனான அவரது உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார். #ImranKhan #pakistanpm

    ×