search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110419"

    சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்கள் கட்டண சலுகை தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர்களில் வாழும் மக்களின் வணிக வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டண சலுகையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது ஆகும்.

    உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு 2008-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு தான் காரணம். அப்போது அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து அந்த ஆணை இப்போது நடை முறைக்கு வந்திருக்கிறது.

    உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுங்க கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.



    சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்கள் என்பதால், இத்தகைய மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு சிக்கலாக மாறக் கூடும். அதை தவிர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும் உள்ளூர் வாகனங்களுக்கான 50 சதவீதம் கட்டண சலுகை ரத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss
    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. #TollGate
    சென்னை:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    6 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளான சென்னை- பெங்களூர், சேலம், மதுரை சுங்கசாவடிகள் செங்கல்பட்டு பரனுர், சூரப்பேடு, சென்னை பைபாஸ் ஆகியவற்றில் 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2016 வரை ரூ.1,500 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.


    பிற இடங்களில் உள்ள சுங்க சாவடிகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, வேலூர் (2), கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி (3), சிவகங்கை (2) ஆகியவற்றின் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-

    மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.

    ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

    டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TollGate
    ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். #Afghanistan #PoliceKilled #TalibanAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.

    அங்கு சமீப காலமாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாள் இல்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் போய் விட்டது.

    இந்த தாக்குதலில் 7 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அள்ளிச்சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. #Tollgate

    சென்னை:

    தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை 72.9 கி.மீ. தூர நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, திருச்சி- திண்டுக்கல் 82.27கி.மீ. சாலையில் பொன்னம் பலப்பட்டி சுங்கச் சாவடி உள்பட 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார்களுக்கு ரூ.80, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும். இதன் மூலம் இந்த சாலையில் ஒரு கி.மீக்கு ரூ.1.09 வசூலிக்கப்படுகிறது.

    பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியில் கி.மீ.க்கு ரூ.2.02 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இது போல் மற்ற 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் பெருமளவில் கட்டணம் வசூலாகிறது. ஆனால் சாலைகள் பராமரிப்பு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

    குமாரபாளையம்- செங்கம் பள்ளி சாலையில் விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் நாள்தோறும் 80,413 வாகனங்கள் செல்கின்றன. இதன் மூலம் தினமும் ரூ.19.47 லட்சம் வசூலாகிறது. ஆனால் இந்த சாலை 40,000 வாகனங்கள் செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டது. அதைவிட இரு மடங்கு வாகனங்கள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ல் சுங்கச்சாவடிகளில் கி.மீக்கு 40 பைசாவாக இருந்த கட்டணம் இப்போது ரூ.1.08 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாளை முதல் கட்டணம் உயர்த்தப்படும் சுங்கச்சாவடிகள் வருமாறு:-

    1. நல்லூர் (சென்னை- தடாசாலை), 2. வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), 3.எலியார்பத்தி (மதுரை- தூத்துக்குடி), 4. கொடைரோடு (திண்டுக்கல்- சமயநல்லூர்), 5. மேட்டுப்பட்டி (சேலம்- உளுந்தூர்பேட்டை), 6. மன்வாசி (திருச்சி-கரூர்), 7. விக்கிரவாண்டி (திண்டி வனம்- உளுந்தூர்பேட்டை).

    8. பொன்னம்பலம்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), 9. நந்தக்கரை(சேலம்-உளுந்தூர் பேட்டை), 10. புதூர் பாண்டியபுரம் (மதுரை- தூத்துக்குடி), 11. திருமந்துரை (ஊளுந்துர்பேட்டை- பாடலூர்), 12. வாழவந்தான் கோட்டை (தஞ்சை- திருச்சி), 13. வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), 14. விஜயமங்கலம் (குமார பாளையம்- செங்கம் பள்ளி). #Tollgate 

    தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கிறது. #TollGate
    சென்னை:

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களுக்கான கட்டண விகிதத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நிர்ணயம் செய்கிறது.

    ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் எடுத்தவர்கள் தங்கள் ஆட்கள் மூலம் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வேறுபடுகிறது.

    நாட்டிலேயே சுங்க கட்டணம் வசூலில் முன்னணியில் இருக்கும் 56 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

    வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்தனர்.

    சேலம்-உளுந்தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை, நல்லூர்-சென்னை, திருச்சி-திண்டுக்கல், நத்தக்கரை-வீரசோழபுரம், விக்கிரவாண்டி தடா (ஆந்திர மாநிலம்), பொன்னம்பலபட்டி ஆகிய 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

    இதன் வழியே செல்லும் வாகனங்களுக்கு கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி கார்களுக்கு 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும், பஸ்கள், லாரிகளுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும்.


    இதுபற்றி வாகன உரிமையாளர்கள் கூறும்போது, ‘நாளுக்கு நாள் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்து இருப்பதால் மேலும் பாதிக்கப்படுவோம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகள் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 21 சதவீத அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சுங்க கட்டணம் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் பல்வேறு வசதிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் பல சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. குடிநீர் வசதி, அவசரகால தொலைபேசி வசதி, உணவு விடுதிகள் போன்றவை உறுதியளித்தபடி செய்து தரப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் இரவில் பஸ்களில் தூங்கிக்கொண்டு செல்லும் பயணிகளின் தூக்கம் கெடுகிறது. சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயணிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது. #TollGate
    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. #Velmurugan #SterliteProtest
    திருக்கோவிலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும்  பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் விழுப்புரம் போலீசார் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவரை கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட வேல்முருகன் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். #Velmurugan #SterliteProtest
    ×