என் மலர்
நீங்கள் தேடியது "சித்ரா"
- பாடகி சித்ரா பல மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
- முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.
சினிமா துறையில் பல பாடகர்கள் தங்களின் குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் பாடகி சின்னக்குயில் சித்ரா.
சின்னக்குயில், மெலோடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர், இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார்.

இவர் தனது இளம் வயதிலேயே பாடல்களை மனதில் வைத்து வசீகரிக்கும் குரலில் தத்ரூபமாக பாடினார். முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.
பாடகி சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பில் முதுகலை பட்டங்களை பெற்ற அவர், 1978 முதல் 1984 ஆண்டு வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையை பெற்றவர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதா கிருஷ்ணன் தனது படங்களிலும், தனி இசைப் பாடல்களிலும் சித்ராவின் குரல் வளத்தை பயன்படுத்த தொடங்கினார். அங்கு தான் அவரின் இசை பயணமும் ஆரம்பித்தது. 1980-ம் ஆண்டு சித்ரா பாடிய மலையாள பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார் சித்ரா.
மலையாளத்தில் பாசில் இயக்கிய படம் தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. படத்தின் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பாடிய சித்ராவின் குரலால் ஈர்க்கப்பட்டு அவரை தமிழில் அறிமுகம் செய்தார். ஆனால் 'நீ தானா அந்தக் குயில்' படத்தில் இடம் பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் தான் இளையராஜா இசையில் சித்ரா பாடிய முதல் பாடல் ஆகும்.

அதற்குள் 'பூவே பூச்சுடவா' படத்தில் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. அதில் இடம் பெற்ற 'சின்னக்குயில்' என்ற வார்த்தையே சித்ராவின் அடையாளமாக மாறியது.
1985-ம் ஆண்டில் இளையராஜா இசையில் 'கீதாஞ்சலி' திரைப்படத்தில் சித்ரா பாடிய 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக் குயில் இசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது' ஆகிய பாடல்கள் புகழ்பெற்றன. ஜானகி, பி.சுசீலா ஆகியோர் வரிசையில் சித்ரா தனக்கென தனியிடம் பிடித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா இணை பாடிய பாடல்களை விட, மனோ-சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு குரல் பொருத்தம் இருவருக்குள்ளும் இருந்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அவரை பாட வைக்காத இசையமைப்பாளர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இசை அமைப்பாளர்களின் பாடல்களிலும் சித்ரா பாடினார்.

அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது என பல மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது என்றால் மிகையாகாது.
இதேபோல் மலையாளத்தில் 2006-ம் ஆண்டு வெளியான வடக்கும்நாதன், நந்தனம், தேவராகம், ஞன் கந்தர்வன், சமயம் உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. தமிழில் அவர் பாடிய பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.

தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில் இடம் பெற்ற "பாடறியேன் படிப்பறியேன்', 'நானொரு சிந்து' பாடல்களுக்கு சித்ராவுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. மேலும் 'மின்சார கனவு', 'ஆட்டோகிராப்' படங்களுக்கும் தேசிய விருது பெற்று இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சித்ரா உள்ளார். இதேபோல் மலையாளத்திலும் பல பாடல்கள் அவருக்கு விருதை வாங்கி தந்தன.
அதேசமயம் பிலிம்பேர், மாநில அரசு விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். இப்படி எண்ணற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டுள்ள சித்ராவின் பங்களிப்பு, எப்படி குயிலின் குரல் எந்த காலக்கட்டத்திலும் சலிக்காதோ, அதே மாதிரி ரசிகர்களால் மறக்க முடியாது.
- சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
- வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் 2021-ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதால் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீர்ப்பை எதிர்த்து போலீசாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்யஉள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் தூக்கிட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகாரளித்ததோடு சித்ராவின் கணவரான ஹேம்நாத் மீது குற்றம் சாட்டினர். அதனால் நசரத்பேட்டை போலீஸார், ஹேம்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த ஹேம்நாத், ஜாமீனில் வெளியில் வந்தார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் சட்ட போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து போலீசாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்யஉள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. #AsianAthleticsChampionship #PUChitra #GoldMedal