என் மலர்
நீங்கள் தேடியது "கொல்கத்தா நைட் ரைடர்ஸ்"
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்தில் உள்ளது.
- சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வெங்கடேஷ் அய்யர் இடம் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.
இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.
கொல்கத்தா அணி நடப்பு தொடரில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகள் எடுத்து 6-வது இடம் வகிக்கிறது. முந்தைய 2 ஆட்டங்களில் டெல்லி, ராஜஸ்தானை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்களும் முக்கியமானதாகும். மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டையும் வலுப்படுத்தி மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாயில் கதவு திறக்கும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (327 ரன்கள்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல் நம்பிக்கை அளிக்கின்றனர். வெங்கடேஷ் அய்யர், ரமனுல்லா குர்பாசும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வலுவடையும். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின் மிரட்டுகிறார்கள்.
சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக இந்த சீசனில் தகிடுதத்தம் போடுகிறது. 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (மும்பை, லக்னோவுக்கு எதிராக), 9 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது.
கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்ட சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 214 ரன் இலக்கை விரட்டுகையில் 211 ரன்களே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே (94 ரன்), ரவீந்திர ஜடேஜா (77 ரன்) அதிரடி காட்டி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஆனால் கடைசி ஓவரில் 15 ரன் தேவையாக இருந்த போது டோனி ஆட்டமிழந்தது தோல்விக்கு வழிவகுத்தது.
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி செயல்பட்டு ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி தீவிரம் காட்டும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன்னில் அடங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முயற்சிக்கும். அதே நேரத்தில் 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி வரிந்து கட்டும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்றொரு வகையிலும் இந்த ஆட்டம் கவனத்தை ஈர்க்கிறது. டோனிக்கு பிடித்தமான மைதானங்களில் ஈடன் கார்டனும் ஒன்று. இங்கு தான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 'கன்னி' சதத்தை பதிவு செய்தார், இரண்டு டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 43 வயதான டோனி கொல்கத்தா ஈடன்கார்டனில் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால், மஞ்சள் படையினரின் படையெடுப்பும், ஆரவாரமும் மைதானத்தில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ரமன்தீப் சிங், மொயீன் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
சென்னை: ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத் அல்லது உர்வில் பட்டேல், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ், பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின.
- 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.
இப்போட்டி கடைசி பந்து வரை மிக சுவாரசியமாக சென்றதால் இந்த சீசனின் சிறந்த போட்டி இது தான் என்று நெட்டிசன்கள் இணையத்தில் மீம்களை பறக்கவிட்டனர்.
இந்நிலையில், இதுதாண்டா சினிமா (ABSOLUTE CINEMA) என்ற பிரபல மீமை ரகானே புகைப்படத்துடன் கொல்கத்தா அணி பகிர்ந்துள்ளது. இந்த மீம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது
- 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.
கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.
கடைசி வரை மூச்சைப் பிடித்து ஆடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்த ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவியது.
- ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.
- இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், பஞ்சாப் 'பிளே-ஆப்' வாய்ப்பை வெகுவாக நெருங்கி விடும்.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் செயல்பாடு இந்த சீசனில் சீராக இல்லை. வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. கடைசியாக ஆடிய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன்கள் குவித்து அதன் மூலம் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணுவார்கள். கொல்கத்தா அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது மூன்று ஆட்டங்களிலாவது வென்றால் வாய்ப்பில் நீடிக்கலாம். ரகுவன்ஷி, கேப்டன் ரஹானே, சுனில் நரின் பேட்டிங்கில் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. கடைசியாக களம் இறங்கிய 3 ஆட்டங்களில் 7, 14, 7 ரன் வீதமே எடுத்துள்ளார். மிடில் வரிசையில் அவர் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அத்துடன் சொந்த ஊரில் முடிவு கிடைத்த 4 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ள கொல்கத்தா அணி இந்த முறை உள்ளூர் சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் இனி நெருக்கடியின்றி விளையாடுவார்கள். ஏற்கனவே லீக்கில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்க்க முயற்சிப்பார்கள். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்தில் சதம் விளாசிய 14 வயது 'இளம் புயல்' வைபவ் சூர்யவன்ஷி மீதமுள்ள ஆட்டங்களிலும் ரன்வேட்டை நடத்துவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
பஞ்சாப் - லக்னோ அணிகள்
ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக 191 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்திய பஞ்சாப் அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையுடன் ஆயத்தமாகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும். மிடில் வரிசைக்கான வேலையை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ் பார்த்துக் கொள்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல் வலு சேர்க்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், பஞ்சாப் 'பிளே-ஆப்' வாய்ப்பை வெகுவாக நெருங்கி விடும்.

முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது. ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் (10 ஆட்டத்தில் 110 ரன்) பார்மின்றி தடுமாறுவதும் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கியம் காரணமாகும். இனி ஒவ்வொரு மோதலும் வாழ்வா-சாவா? கட்டத்தில் ஆட வேண்டி இருக்கும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ, அதற்கு பதிலடி கொடுக்கவும் இது சரியான சந்தர்ப்பமாகும்.
மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. கடந்த ஆண்டு தரம்சாலாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 241 ரன்கள் குவித்தது நினைவு கூரத்தக்கது.
- கொல்கத்தா முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது.
- குர்பாஸ் 12 பந்தில் 26 ரன்களும், சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்களும் அடித்தனர்.
ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தையே குர்பாஸ் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட 8 ரன்கள் கிடைத்தன.
2ஆவது ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சுனில் நரைன் சிக்சருக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் கிடைத்தன.
ஸ்டார்க் வீசிய 3ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த குர்பாஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 12 பந்தில் 26 ரன்கள் விளாசினார். குர்பாஸ் ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா 3 ஓவரில் 48 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது. 7ஆவது ஓவரை நிகம் வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.
ரகானே 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை 200 நோக்கி அழைத்துச் சென்றனர். கொல்கத்தா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.
ரகுவன்ஷி 32 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18 ஓவரில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரில் 14 ரன்களும், 20 ஓவரில் 9 ரன்களும் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்துள்ளது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரசல், ரோவ்மான் பொவேல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (2 முறை லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (மும்பை, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான பார்ட்னர்ஷிப் அளிக்காததும், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் (51 ரன்) ரன்னை வாரி வழங்கியதும் பாதகத்தை ஏற்படுத்தியது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (364) அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா கணிசமான பங்களிப்பை அளித்தால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் நம்பிக்கை அளிக்கின்றனர்.
கொல்கத்தா அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம்) என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்த கொல்கத்தா அணி, பஞ்சாப்புடன் இரண்டாவது முறையாக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தானது. இதில் 202 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்த நிலையில் மழை பலமாக கொட்டியதால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.
கொல்கத்தா அணிக்கு பேட்டிங் பெரும் தலைவலியாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக சுனின் நரினுடன் களம் கண்ட குயின்டான் டி காக் சோபிக்காததால் ரமனுல்லா குர்பாஸ் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அந்த அணியில் கேப்டன் ரஹானே (271 ரன்) தவிர யாரும் 200 ரன்னை கூட தாண்டவில்லை. வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கிடம் இருந்து இயல்பான அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் பலம் சேர்க்கிறார்கள்.
உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் 7-வது வெற்றியை குறிவைத்து டெல்லி அணி களம் காண்கிறது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் எல்லா ஆட்டங்களும் முக்கியம் என்பதால் கொல்கத்தா அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
டெல்லி: பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அஷூதோஷ் ஷர்மா அல்லது மொகித் ஷர்மா.
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரோமன் பவெல், ஆந்த்ரே ரஸ்செல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சகாரியா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பிரியான்ஷ் ஆர்யா 36 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
- பிரப்சிம்ரன் சிங் 49 பந்தில் 83 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இருந்து இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினர். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.
முதல் ஓவரில் 10 ரன்களும், 3ஆவது ஓவரில் 12 ரன்களும், 4ஆவது ஓவரில் 18 ரன்களும், 5ஆவது ஓவரில் 11 ரன்களும், விளாசினர். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்று 56 ரன்கள் சேர்த்தது.
10ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்சருக்கும், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆர்யா 27 பந்தில் அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரில் பஞ்சாப் 3 சிக்சர் விளாசியது. 12 ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஆர்யா ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அப்போது பஞ்சாப் 11.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்திருந்தது.
அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து 38 பந்தில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் 7 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மார்கோ யான்சன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணிக்கு 17 ஆவது ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 174 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் கிடைத்தன. 184 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை வைபவ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க பஞ்சாப் 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 25 ரன்களுடனும், இங்கிலீஷ் 6 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:-
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஓமர்சாய், மார்கோ யான்சன், ஆர்ஷ்தீப் சிங், சாஹல்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
குர்பாஸ், சுனில் நரைன், ரகானே, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரசல், ரோவன் பொவேல், சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா
- நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 3 வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோ, பஞ்சாப், குஜராத் அணிகளிடம்) கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்த அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் ஆர்வத்துடன் உள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு அணிக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம்) 5-வது இடத்தில் இருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அதேவேளையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.