என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் தேர்தல் பிரசாரம்"

    முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் புவனேசுவரம் விமான நிலையத்தில் இருந்தபடியே, செல்போன் மூலம் புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். #YogiAdityanath
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமானம் மூலம் புவனேசுவரம் வந்தார்.

    பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அந்த ஊர்களுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால், ஹெலிகாப்டர் பறக்க விமானபோக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

    தொலை தூரத்தில் உள்ள அந்த ஊர்களுக்கு உடனடியாக செல்ல முடியாது என்பதால், யோகி ஆதித்யநாத் புவனேசுவரம் விமான நிலையத்தில் இருந்தபடியே, செல்போன் மூலம் புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். #YogiAdityanath
    ×